Thursday, December 13, 2018

பயிலிழை குவெ.12. பழமொழிக் குறள் புனைதல் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.12. பழமொழிக் குறள் புனைதல் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/273259230071282/
கவிஞர் அரங்க இரகுநாதன் 
முதலடிப் பழமொழி
(குறள் வெண்பா)

ஐயர் வருதற்(கு) அமாவாசை காத்திராது
பையக் கருமம் பழகு. ... 1

ஈயாதார் தேட்டையைத் தீயோரே கொள்வராம் 
வீயாதார் ஈவர் விழைந்து. ... 2

மலைகளைக் கெல்லி எலியைப் பிடிப்பர் 
மலியூழல் நீக்க முனைந்து. ... 3

எண்சாண் உடற்குச் சிரமே பிரதானம்
பண்சார் கவிக்கொரு பாட்டு. ... 4

திரைகட லோடித் திரவியம் தேடு 
நிறையுடை வாழ்வின் நிசம். ... 5
★
ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)

தணலோதன் சூட்டால் குணமோதன் கேட்டால் 
நுணலோதன் வாயால் கெடும். ... 6

தொட்டவர்க் குண்டு துணையெனக் காலடிமைப் 
பட்டவர்க் குண்டு பலன். ... 7

நனியுரம் கொண்டதாம் நல்லுறவு சுற்றம் 
தனிமரம் தோப்பாவ தில். ... 8

மறையிடம் இல்லாத மாணில்லை ஆயின் 
நிறைகுடம் நீர்தளும் பாது. ... 9

நங்கையர் திண்மை நலங்கெடப் பேசுதல்
திங்களை நாய்குரைத் தற்று. ... 10

★★★
பாவலர் சீனி பழனி
முதலடிப் பழமொழி
(குறள் வெண்பா)

எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன
கொட்டிக் கொடாதான் வளம். ... 1

எடுப்பது பிச்சையாம் ஏறுவதோ பல்லாக்கு
நடிப்பே நடலையர் வாழ்வு. ... 2
(நடலையர் – வஞ்சகர்)

எள்ளெனும் முன்னவன் எண்ணெயாய் நின்றனன்
கொள்ளெனும் வித்தே கொடைக்கு. ... 3

தலையில் இடிபட்டால் தாழக் குனிவான்
அலையிடை நாவாய் அவன். ... 4

பாய்மரம் இல்லா மரக்கலம் போன்றதே
ஆய்வோர் அணையா அரசு. ... 5
★
ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)

வன்சொல் வடிக்கமனம் வாடு முயிருடலே 
இன்சொல் இடர்ப்படுப்ப தில். ... 6

செற்றலில் கேண்மைமேல் சேர்மதி வானம்போல் 
கற்றலிற் கேட்டலே நன்று. ... 7

கூம்பும் குணத்தோரே கோலாட்சி கோடுங்கால் 
பாம்பறியும் பாம்பின் கால். ... 8

சினநோயே தீங்குதரும் தீராத தெவ்வுகாண் 
மனநோயாம் இல்லை மருந்து. ... 9

கொட்டிக் கொடுத்தாலும் கெட்டவர்க் கிட்டாதேல்
பட்டவர்க் குண்டு பலன். ... 10

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
முதலடிப் பழமொழி
(குறள் வெண்பா)

அடிக்க அடிக்கத்தான் பந்துவிசை கொள்ளும்
படிக்கப் படிக்கவறி வு. ... 1

அடிமே லடியடித்தால் அம்மி நகரும்
படியுமோ மாடடியா து? ... 1

மணல்மேல் விழுந்த மழைத்துளி போலே
தணலிடை வீழ்ந்த சருகு. ... 3

மனத்தில் பகையாம் உதட்டில் உறவாம்
சினத்தில் தெரியும் மனம். ... 4

வல்லவனின் வல்லவன் வையத்தில் உண்டுகாண்
புல்லரே வல்லவராய்ப் பூ! ... 5
★
ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)

நாயனையார் ஓர்பாவில் நாடுவிட்டே ஓடுவர்!
ஆயிரம் காக்கைக்கோர் கல்! ... 6

மிஞ்சுவோர் கண்டு மிரண்டு அரண்டிடும்
அஞ்சுவார்க் கில்லை யரண். ... 7

வன்சொலால் என்றுமே வம்புதான் வாழ்வினில்
இன்சொல் இடர்ப்படுப்ப தில். ... 8

அருமை மனைவியா ஆருயிர்த் தாயா
இருதலைக் கொள்ளியென் பார். ... 9

ஓம்பலும் ஒட்டலுக்கு ஓர்வழி யாகுமாம்
பாம்பறி யும்பாம்பின் கால். ... 10

★★★
கவிஞர் திசேசு
முதலடிப் பழமொழி

எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன
கட்டிக் கொடுபோத லெது? ... 1

ஒப்புக்குச் சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை
சுப்பென்றன் வாழ்வதுந் தான். ... 2

எடுப்பது பிச்சையாம் ஏறுவது பல்லாக்கு
மிடுக்கினில் உண்டோ குறை ... 3

சீரங்கக் காகமெனில் கோவிந்தா பாடுமா
ஏரங்கா காவெனலே ஏற்பு ... 4

பாரா உடைமைகள் பாழா வதுபோல்
வாராக் கடன்வெளிநா டுடைத்து ... 5
★
ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)

தூயநெறிச் சொல்லொன்றே துன்பமெலாம் போக்குவது
ஆயிரங் காக்கைக்கோர் கல். ... 6

தேம்பாகு தந்தாலும் நம்பார் அரசியலார்
பாம்பறி யும்பாம்பின் கால். ... 7

உள்ளூடிப் பொய்களைந்து உண்மைதனைக் கண்டறிதல்
முள்ளினால் முள்களைந்த வாறு. ... 8

தானைத் தலைவன் சிறையிலே தொண்டரினி
யானைபோய் வால்போகாத வாறு. ... 9

வெட்டித் தொகைதொகையாய் வீணரைச் சாய்த்திடுவோம்
தட்டாது செல்லாது உளி. ... 10

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
முதலடிப் பழமொழி
(குறள் வெண்பா)

அசைந்துண்ணும் மாடாம் அசையாது வீடாம்
பசையில்லா விட்டாலோ பாடு. ... 1

அடிக்க அடிக்கத்தான் பந்துவிசை கொள்ளும்
அடிகோலும் மேன்மையுற வாம். ... 2

கிழவியும் காதம் குதிரையும் காதம்
உழவனின் வேதம் உழல்வு. ... 3

நாவிற் பிறப்பதாம் நன்மையும் தீமையும்
நாவுரைத்துப் பார்த்தே நவில். ... 4

வல்லவனின் வல்லவன் வையத்தில் உண்டுகாண்
வல்லமை தேர்தலில் வாக்கு. ... 5
★
ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)

சாயிராம் பேர்சொன்னால் சன்மவினை கள்பறக்கும்
ஆயிரம் காக்கைக்கோர் கல். ... 6

துணையிருப்பாய் தேவியே துர்க்கையே உன்றன்
கணையினுங் கூரியவாம் கண்! ... 7

இருப்பில்லை ஏதோ எழுதுவானென் போர்சொல்
செருப்பிடைப் பட்ட பரல். ... 8

அருவுரு வாளன் அரன்பேர்கொள் நெஞ்சு 
திருவினும் திட்பம் பெறும். ... 9

கட்டுண்டோம் காத்திருப்போம் காலங்கள் மாறுவன
பட்டவர்க் குண்டு பலன். ... 10

★★★★★

பயிலிழை குவெ.12. பழமொழிக் குறள் புனைதல்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.12. பழமொழிக் குறள் புனைதல்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/257382558325616/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.12. பழமொழிக் குறள் புனைதல்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. முதலடியில், ஈற்றடியில் என்று
.. கீழ்க்காணும் பழமொழிகளை அமைத்தே
.. பழமொழி இல்லாத அடியில் பொழிப்பு மோனை முயன்றே
.. ஒருவிகற்பக் குறள் வெண்பாக்கள் புனைவோம்.

முதலடிப் பழமொழிக்கு ஐந்தும்
.. ஈற்றடிப் பழமொழிக்கு ஐந்து
.. என்று மொத்தம் பத்து (10)
.. குறட்பாக்கள் புனைவோம்.

தொகுப்பு
27/07/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
பழமொழிகள்
முதலடிப் பழமொழி

அசைந்துண்ணும் மாடாம் அசையாது வீடாம்
அடிக்கசாகப் பந்துவிசை கொள்ளும்
அடிமே லடியடித்தால் அம்மி நகரும்
இளமையிற் சோம்பல் முதுமையில் வறுமை
உழுவோன் கணக்கில் உலக்கைமிஞ் சாது
எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன
எடுப்பது பிச்சையாம் ஏறுவதோ பல்லாக்கு
எழுதாக் கடனுக் கழுகை தீர்வா?
எள்ளெனும் முன்னவன் எண்ணெயாய் நின்றனன்
ஒப்புக்குச் சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை
ஒருமொழியாள் ஊமை பலமொழியாள் வித்வான்
கல்விக் கொருவர் களவுக் கிருவர்
கிழவியும் காதம் குதிரையும் காதம்
குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல்
குதிரைகுணம் கண்டே கொம்புதர வில்லை
சாகத் துணிந்தால் சமுத்திரம் நீச்சாகும்
சீரங்கக் காகமெனில் கோவிந்தம் பாடுமா?
தமிழுக் கிருவர் தவத்துக் கொருவர்
தலையில் இடிபட்டால் தாழக் குனிவான்
நாட்டுக்கு நல்லதுரை தோட்டிக்குப் புல்சுமை
நாவிற் பிறப்பதாம் நன்மையும் தீமையும்
பட்டனத்து வாசல் படலால் மூடுவதோ?
பணக்காரன் பைத்தியம் பத்துப்பேர் பின்னே!
பலசரக்குக் காரனொரு பைத்தியம் ஆனதுபோல்
பாதகர் நட்பெனில் பாம்பொடு நட்புபோல்
பாய்மரம் இல்லா மரக்கலம் போல
பாரா உடைமைகள் பாழா வதுபோல
பார்க்கும் விழியினும் கேள்செவி பொல்லாதாம்
பாலொடு சேர்ந்தநீர் பாலாய்த் தெரிவதுபோல்
பேசா திருந்தால் பிழையேதும் இல்லைபோல்
மணல்மேல் விழுந்த மழைத்துளி போலே
மனத்தில் பகையாம் உதட்டில் உறவு
முடிக்கா தவனே படிக்கா தவனாம்
மொழிதவ றாதான் வழிதவ றாதான்
வலியவன் வெட்டியதே வாய்க்கால்
வல்லவன் பம்பரம் ஆடும் மணலிலும்
வல்லவனின் வல்லவன் வையத்தில் உண்டுகாண்

***
ஈற்றடிப் பழமொழி

ஆயிரம் காக்கைக்கோர் கல்.
அணியெல்லாம் ஆடையின் பின்.
அஞ்சுவார்க் கில்லை யரண்.
செருப்பிடைப் பட்ட பரல்.
இன்சொல் இடர்ப்படுப்ப தில்.
இருதலைக் கொள்ளியென் பார்.
கூன்மேல் எழுந்த குரு.
கணையினுங் கூரியவாம் கண்.
கற்றேயும் தேயாது சொல்.
கற்றலிற் கேட்டலே நன்று.
மகனறிவு தந்தை அறிவு.
முள்ளினால் முட்களையு மாறு.
பாம்பறியும் பாம்பின் கால்.
பனியால் குளம்நிறைதல் இல்.
புலித்தலையை நாய்மோத்தல் இல்.
தாய்மிதித் தாகா முடம்.
தட்டாமல் செல்லாது உளி.
தமக்கு மருத்துவர் தாம்.
தனிமரம் தோப்பாவ தில்.
திருவினும் திட்பம் பெறும்.
திங்களை நாய்குறைத் தற்று.
உரைத்தாலும் தோன்றா துணர்வு.
யானைபோய் வால்போகா வாறு.
நரகர்கட் கில்லையோ நஞ்சு?
நிறகுடம் நீர்தளும் பாது.
நுணலும்தன் வாயால் கெடும்.
பட்டவர்க் குண்டு பலன்.
மனநோயாம் இல்லை மருந்து.
மொட்டைத் தலையினில் பேன்.

***
அடியேன் பங்காக
முதலடிப் பழமொழி
(குறள் வெண்பா)

அசைந்துண்ணும் மாடாம் அசையாது வீடாம்
பசையில்லா விட்டாலோ பாடு. ... 1

அடிக்க அடிக்கத்தான் பந்துவிசை கொள்ளும்
அடிகோலும் மேன்மையுற வாம். ... 2

கிழவியும் காதம் குதிரையும் காதம்
உழவனின் வேதம் உழல்வு. ... 3

நாவிற் பிறப்பதாம் நன்மையும் தீமையும்
நாவுரைத்துப் பார்த்தே நவில். ... 4

வல்லவனின் வல்லவன் வையத்தில் உண்டுகாண்
வல்லமை தேர்தலில் வாக்கு. ... 5

ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)

சாயிராம் பேர்சொன்னால் சன்மவினை கள்பறக்கும்
ஆயிரம் காக்கைக்கோர் கல். ... 6

துணையிருப்பாய் தேவியே துர்க்கையே உன்றன்
கணையினுங் கூரியவாம் கண்! ... 7

இருப்பில்லை ஏதோ எழுதுவானென் போர்சொல்
செருப்பிடைப் பட்ட பரல். ... 8

அருவுரு வாளன் அரன்பேர்கொள் நெஞ்சு 
திருவினும் திட்பம் பெறும். ... 9

கட்டுண்டோம் காத்திருப்போம் காலங்கள் மாறுவன
பட்டவர்க் குண்டு பலன். ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Thursday, December 6, 2018

பயிலிழை குவெ.11. செப்பலோசை வகையாய்வு தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.11. செப்பலோசை வகையாய்வு தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/270801503650388/
பாவலர் சீனி பழனி
(குறள் வெண்பா)
முறையே ஏ.செ., தூ.செ., ஒ.செ. ஒலிகளில்

மாமழையே காவிரியில் மாவிலையே தோரணங்கள்
பாமழையில் பாவலர்கள் காண்.

மாமழைக் காவிரி மாவிலைத் தோரணம்
பாமழைப் பாவலர் காண்.

மாமழையே காவிரி மாவிலையே தோரணம்
பாமழையில் பாவலர் காண். ... 1
★
பெண்மகளே என்னில்லில் பேரன்றோ வாழ்வினிலே
கண்மகளே என்கனவு காண்.

பெண்மகள் இல்லம் பெருமையே வாழ்வது
கண்ணில் கனவதே காண்.

பெண்மகளே என்னில்லம் பேரது வாழ்வினிலே
கண்மகளே என்கனவு காண். ... 2
★
கானமழை காற்றினிலே காட்டிலுமோர் நாட்டியமே
தானமென நல்லருவி தான்.

கானம் நிறைமழைக் காட்டினில் நாட்டியம்
தானம் அருவிநீர் தான்.

கானமழை காற்றினிலே காட்டினில் நாட்டியம்
தானமென நல்லருவி தான். ... 3
★
பள்ளியிலே கல்விபல பாடமுறை பற்பலவே
கிள்ளையெனக் கல்விபெறுங் கள்.

பள்ளியில் கல்வியே பாடமும் பற்பல
கிள்ளையே கல்வியைக் கல்.

பள்ளியிலே கல்விபல பாடமும் பற்பலவே
கிள்ளையெனக் கல்வியைக் கல். ... 4
★
நூல்நிழலும் நோன்றிசைக்கும் நுண்புலனும் தேர்ந்திசைக்கும்
ஆல்நிழலும் ஆன்றறிவு தான்.

நூல்நிழல் நோன்பதே நுண்புலம் தேர்ந்திசை
ஆல்நிழல் ஆன்றறி வு.

நூல்நிழலும் நோன்றிசைக்கும் நுண்புலம் தேர்ந்திசையே
ஆல்நிழலும் ஆன்றறி வு. ... 5

★★★
கவிஞர் திசேசு
(குறள் வெண்பா)
முறையே ஏ.செ., தூ.செ., ஒ.செ. ஒலிகளில்

கண்ணுதலாம் தெய்வத்தின் காலடியில் வீழ்ந்தவர்க்கு
நண்ணிடுமோ கேடென்றும் நம்பு.

கண்ணுதல் தெய்வமாம் காலடி வீழ்ந்திடில்
நண்ணுமோ கேடெதும் நம்பு.

கண்ணுதலாம் தெய்வத்தின் காலடி வீழ்ந்தவர்க்கு
நண்ணிடுமோ கேடெதும் நம்பு. ... 1

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆளுமையில் பேதமின்றி
பேணுவதே மானுடத்தின் பீடு.

ஆணையும் பெண்ணையும் ஆளுமைப் பேதமில்
பேணலே மானிடப் பீடு.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆளுமைப் பேதமின்றிப்
பேணலே மானிடத்தின் பீடு. ... 2

உச்சாணிக் கொம்பதுவும் உள்மறைந்த வேரடியும்
அச்சாணி போன்றோர்முன் ஒன்று.

உச்சியுள் கொம்பதும் உள்மறை வேரதும்
அச்செனப் போனறவர்க் கொன்று.

உச்சாணிக கொம்பதும் உள்மறை வேரடியும்
அச்சாணிப் போன்றவர்க் கொன்று. ... 3

கற்பனையும் கண்தமிழும் கைகோர்த்து யாப்போடு
நிற்பதுவே நற்கவிதைப் பாட்டு.

கற்பனை கண்தமிழ் கையொடு யாப்பதும்
நிற்குங் கவிதை பாட்டு. 

கற்பனை கண்தமிழின் கைசேர யாப்பொடு
நிற்குங் கவிதைப் பாட்டு. ... 4

யாப்பென்னும் தூரிகையால் எண்ணமெனும் வண்ணங்கள்
பூப்பதுவே பொற்றமிழில் பாட்டு.

யாப்பாம் தூரிகை யாலெண் ணவண்ணமே
பூப்பது பொற்றமிழ்ப பாட்டு. 

யாப்பெனும் தூரிகையால் எண்ணமாம் வண்ணங்கள்
பூப்பது பொற்றமிழில் பாட்டு. ... 5

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன் 
(குறள் வெண்பா)
முறையே ஏ.செ., தூ.செ., ஒ.செ. ஒலிகளில்

காண்டகுமொண் தோளண்ணல் கோவலனின் காலிணையை
மாண்டகுவண் மாவரமாய் மன்னு.

காண்டகு தோளினன் கோவலன் காலிணை 
மாண்டகு மாவரம் மன்னு.

காண்டகு தோளண்ணல் கோவலன் காலிணையை
மாண்டகு மாவரமாய் மன்னு. ... 1
★
சூதாடிச் சூதாடிச் சொத்தும்போம் நாளெல்லாம்
வாதாடி வாதாடி வாழ்வு.

சூதினில் சூதினில் சொத்துபோம் நாளெலாம் 
வாதினில் வாதினில் வாழ்வு.

சூதாடச் சூதினில் சொத்தும்போம் நாளெலாம் 
வாதாட வாதினில் வாழ்வு. ... 2
★
சொத்துகளின் மீதுற்ற சூதான பற்றொழித்துப் 
புத்தியினால் பெற்றவையே போற்று.

சொத்துகள் மீதுறும் சூதுறு பற்றொழி 
புத்தியால் பெற்றவை போற்று.

சொத்துகள் மீதுற்ற சூதான பற்றொழி 
புத்தியினால் பெற்றவை போற்று. ... 3
★
உன்னவனே நானென்றே ஓர்முறையும் சொன்னவர்க்கே 
உன்னருளோ திண்ணமதா மே.

உன்னவனே நானென ஓர்முறையும் சொன்னவர்க் 
குன்னருளோ திண்ணமா மே.

உன்னவன் நானெ்ன ஓர்முறை சொன்னவர்க் 
குன்னருள் திண்ணமா மே. ... 4
★
தாமரைநேர் பூவிணைகள் தேரலினும் நானினிமேல் 
காமுறேனே மற்றொன்றாம் இன்பு.

தாமரைப் பூவிணை தேரலின் நானினி 
காமுறேன் மற்றுமோர் இன்பு.

தாமரைநேர் பூவிணை தேரலின் நானினியும் 
காமுறேன் மற்றுமோர் இன்பு. ... 5

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
(குறள் வெண்பா)
முறையே ஏ.செ., தூ.செ., ஒ.செ. ஒலிகளில்

சிங்கம்போல் பாய்வதுதான் சீரென்று எண்ணிப்போய் 
பங்கமேதும் வாராது பார்.

சிங்கமாய்ப் பாய்வது சீரென எண்ணலே 
பங்கம் வராதெனப் பார்.

சிங்கமெனப் பாய்வது சீரென்ற எண்ணம்தான் 
பங்கமாய் வாராது பார். ... 1
★
சங்கடம்தான் வாழ்வினிலே சண்டையிட்டா லென்றென்றும் 
இங்கிதமாய்த் தானென்றும் வாழ்.

சங்கடம் வாழ்வினில் சண்டையா லென்றுமே 
இங்கித மாகவே வாழ்.

சங்கடமே வாழ்வினில் சண்டைகளா லென்றுமே 
இங்கித மாகவேதான் வாழ். ... 2
★
சந்தேக மென்றேனும் தள்ளிவிடும் பாழ்மனத்தைப் 
பந்தங்கள் வேரறுக்க வே.

சந்தே கமென்றும் தள்ளிடும் பாழ்மனம்
பந்த மறுத்திட வே.

சந்தேகம் என்றுமே தள்ளிவிடும் பாழ்மனம்
பந்தமதை வேரறுக்க வே. ... 3
★
உண்பதற்கோ வாழ்வென்றும் உண்மையுடன் மற்றோரைப் 
பண்பாகச் சேர்ந்திடலே தான்.

உண்பதோ வாழ்ந்திட உண்மையோ மற்றவர்
பண்புடன் சேர்தலே தான்.

உண்பதோ வாழ்வென்றும் உண்மையாய் மற்றவரைப்
பண்புடன் சேர்ந்திடலே தான். ... 4
★
சொன்னாலும் கேட்காது தொல்லைபல தந்திடுவான் 
தன்னாலே தேறுவனோ சொல்.

சொன்னால் விளங்கிடாத் தொல்லை தருபவன்
தன்னால் சிறப்பனோ சொல்.

சொன்னால் வளங்கிடாது தொல்லை தருபவன்
தன்னால்தான் தேறுவனோ சொல். ... 5

★★★
கவிஞர்  நி1. குருநாதன் ரமணி
குறட்பா வித்தகம்: மூவிசைச் செப்பல்
(குறள் வெண்பா)

ஏ.செ.
கண்விழித்தேன் வைகறையில் கட்டவிழ்ந்த வாசனைகள்
வண்ணமலர்க் கூரையென வான்.
தூ.செ.
கண்மலர் வைகறை கட்டவிழ் வாசனை
வண்மலர்க் கூரையாய் வான்.
ஒ.செ.
கண்விழித்தேன் வைகறை கட்டவிழ்ந்த வாசனை
வண்ணமலர்க் கூரையாய் வான். ... 1

ஏ.செ.
தூரத்தில் செங்கதிரோன் துய்யவொளி தொட்டசுவர்
ஓரத்தில் நாகணவாய்ப் புள்.
தூ.செ.
தூரக் கதிரொளி துள்ளித் தொடுசுவர்
ஓரமோர் பூவை யுடன்.
ஒ.செ.
தூரத்தில் செங்கதிர் தொட்ட சுவர்மிசை
ஓரத்தில் நாகணவாய்ப் புள். ... 2

ஏ.செ.
மாமரத்தில் ஓடுமணில் மாங்குயில்தன் பண்ணிறுத்தி
ஊமையெனப் பார்த்ததென்ன வோ?
தூ.செ.
மாமர மோடணில் மாங்குயில் பண்ணற
ஊமையாய்க் காணென வோ?
ஒ.செ.
மாமரத்தில் ஓடணில் மாங்குயில் பண்ணிறுத்தி
ஊமையாய்ப் பார்த்ததென்ன வோ? ... 3

ஏ.செ.
ஊதாப்புள் மீன்கொத்தி ஓசையிட்டால் காதுறுத்தும்
ஏதோதன் வாய்பற்றிப் போம்.
தூ.செ.
ஊதாச் சிரல்புள் ஒலிகா துறுத்துமே
ஏதோ இரையுடன் போம்.
ஒ.செ.
ஊதாப்புள் சிச்சிலி ஓசை செவியுறுத்தும்
ஏதோ இரைபற்றிப் போம். ... 4

ஏ.செ.
சின்னவுடற் சிட்டிரண்டு சட்டென்று வந்தமர்ந்தே
சன்னமொழி பேசியது தேன்!
தூ.செ.
சின்ன உடலுடன் சிட்டுகள் வந்தன
சன்ன மொழியுரை தேன்.
ஒ.செ.
சின்னவுடற் சிட்டுகள் சட்டென வந்தமர்ந்தே
சன்னமொழி பேசின தேன்! ... 5

ஏ.செ.
சீழ்க்கையொலி காதுறுத்தத் தேன்சிட்டு பூத்தொங்கும்!
வாழ்க்கையிது போலவரு மா?
தூ.செ.
சீழ்க்கை உறுத்தவோர் தேன்சிட் டுதொங்கலில்!
வாழ்க்கை இதுவரு மா?
ஒ.செ.
சீழ்க்கையொலி காதுறும் தேன்சிட்டு பூத்தொங்கும்!
வாழ்க்கையிது போல்வரு மா? ... 6

ஏ.செ.
பக்கத்தில் ஏரிபோலப் பாழ்நீராய்த் தேங்குநிலம்
கொக்குகள்வாய் கீழ்நோக்கும் கோடு.
தூ.செ.
பக்கலில் ஏரிபோல் பாழ்நீர் நிலத்தினில்
கொக்குவாய் கோணலாம் கோடு.
ஒ.செ.
பக்கலில் ஏரிபோல் பாழ்நீராய்த் தேங்குநிலம்
கொக்குகள் வாய்கோணல் கோடு. ... 7

ஏ.செ.
காலோடி மேடேறும் காணான்கள் கொக்கிடையே
மேலோடிக் கண்மறையும் மீன்.
தூ.செ.
ஓடிமே டேறுபுள் காணான் குருகிடை
ஓடியே கண்மறை மீன்.
ஒ.செ.
காலோடி மேடமர் காணான்கள் கொக்கிடை
மேலோடிக் கண்மறை மீன். ... 8

ஏ.செ.
கண்டதெலாம் உண்ணவரும் காக்கைகள் கூட்டமர்ந்தே
விண்ணுலவும் தோட்டியிது வே.
தூ.செ.
கண்ட துணவரும் காக்கைகள் கூட்டமர்
விண்ணுறு தோட்டியா மே.
ஒ.செ.
கண்டதெலாம் உண்னவரும் காக்கைகள் கூட்டமாய்
விண்ணுலவும் தோட்டியா மே. ... 9

ஏ.செ.
காலையிளங் காற்றினிலே கண்பட்ட காட்சிகளால்
மாலைவரை துள்ளுமனம் மான்.
தூ.செ.
காலை யிளம்வளி கண்ணுறு காட்சிகள்
மாலை வரைமனம் மான்.
ஒ.செ.
காலையிளங் காற்றிலே கண்பட்ட காட்சிகள்
மாலைவரை யென்னுளம் மான். ... 10

★★★★★

பயிலிழை குவெ.11. செப்பலோசை வகையாய்வு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.11. செப்பலோசை வகையாய்வு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/246475726082966/
(சீர்கள் 4-3 என்றோ, 3-3 என்றோ இயைபு வரப் பாடும் குறள் வெண்பா)
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்
வெண்பா விலக்கண விழையில் சொன்னதுபோல்
.. செப்பலோசை மூவகைப்படும்.
.. மூவசைக் காய்ச்சீர்கள் மட்டுமே பயின்று
.. வெண்சீர் வெண்டளையான் எழுவது 
.. ஏந்திசைச் செப்பல்.
.. 
.. ஈரசை இயற்சீர்கள் மட்டுமே பயின்று
.. இயற்சீர் வெண்டளையான் எழுவது 
.. தூங்கிசைச் செப்பல்.
.. 
.. இயற்சீர், காய்ச்சீர் இரண்டும் பயின்று
.. இருவகை வெண்டளைகளும் விரவி எழுவது 
.. ஒழுகிசைச் செப்பல்.

பயிலிழை குவெ.11. செப்பலோசை வகையாய்வு
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஈற்றுச்சீர் தவிர ஏனையவை காய்ச்சீர்களாக அமைத்தே
.. ஏந்திசைச் செப்பல் பயிலும் ஒருவிகற்பக் குறள் வெண்பா
.. ஒன்றைப் பொழிப்பு மோனையுடன் எழுதுவோம். 
.. அதன் பின் அதை,
.. ஈற்றுச்சீர் தவிர ஏனையவை இயற்சீர்களாக அமைய மாற்றியே
.. தூங்கிசைச் செப்பல் பயிலும் குறள் வெண்பாவாக மாற்றுவோம்.
.. அதன் பின் நம் ஏந்திசைக் குறளை
.. ஈற்றுச்சீர் தவிர ஏனையவை காய்ச்சீர்-இயற்சீர் அமைய மாற்றியே
.. ஒழுகிசைச் செப்பல் பயிலும் குறள் வெண்பாவாக மாற்றுவோம்.

இவ்விதமாக,
.. முதலில் ஏந்திசைச் செப்பல் குறள் வெண்பாவும்
.. பின் அதையே மாற்றி 
.. தூங்கிசை, ஒழுகிசைச் செப்பல் குறள்களாக்கி, 
.. மூன்று குறட்பாக்கள் கொண்ட தொகுதி (set) அமைப்போம்.
.. இதுபோல் மூவிசைச் செப்பலைக் காட்டும்
.. 5 (ஐந்து) தொகுதிகள், மொத்தம் 15 (பதினைந்து) 
.. குறள் வெண்பாக்கள் புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
20/07/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக
குறட்பா வித்தகம்: மூவிசைச் செப்பல்
(குறள் வெண்பா)

ஏ.செ.
கண்விழித்தேன் வைகறையில் கட்டவிழ்ந்த வாசனைகள்
வண்ணமலர்க் கூரையென வான்.
தூ.செ.
கண்மலர் வைகறை கட்டவிழ் வாசனை
வண்மலர்க் கூரையாய் வான்.
ஒ.செ.
கண்விழித்தேன் வைகறை கட்டவிழ்ந்த வாசனை
வண்ணமலர்க் கூரையாய் வான். ... 1

ஏ.செ.
தூரத்தில் செங்கதிரோன் துய்யவொளி தொட்டசுவர்
ஓரத்தில் நாகணவாய்ப் புள்.
தூ.செ.
தூரக் கதிரொளி துள்ளித் தொடுசுவர்
ஓரமோர் பூவை யுடன்.
ஒ.செ.
தூரத்தில் செங்கதிர் தொட்ட சுவர்மிசை
ஓரத்தில் நாகணவாய்ப் புள். ... 2

ஏ.செ.
மாமரத்தில் ஓடுமணில் மாங்குயில்தன் பண்ணிறுத்தி
ஊமையெனப் பார்த்ததென்ன வோ?
தூ.செ.
மாமர மோடணில் மாங்குயில் பண்ணற
ஊமையாய்க் காணென வோ?
ஒ.செ.
மாமரத்தில் ஓடணில் மாங்குயில் பண்ணிறுத்தி
ஊமையாய்ப் பார்த்ததென்ன வோ? ... 3

ஏ.செ.
ஊதாப்புள் மீன்கொத்தி ஓசையிட்டால் காதுறுத்தும்
ஏதோதன் வாய்பற்றிப் போம்.
தூ.செ.
ஊதாச் சிரல்புள் ஒலிகா துறுத்துமே
ஏதோ இரையுடன் போம்.
ஒ.செ.
ஊதாப்புள் சிச்சிலி ஓசை செவியுறுத்தும்
ஏதோ இரைபற்றிப் போம். ... 4

ஏ.செ.
சின்னவுடற் சிட்டிரண்டு சட்டென்று வந்தமர்ந்தே
சன்னமொழி பேசியது தேன்!
தூ.செ.
சின்ன உடலுடன் சிட்டுகள் வந்தன
சன்ன மொழியுரை தேன்.
ஒ.செ.
சின்னவுடற் சிட்டுகள் சட்டென வந்தமர்ந்தே
சன்னமொழி பேசின தேன்! ... 5

ஏ.செ.
சீழ்க்கையொலி காதுறுத்தத் தேன்சிட்டு பூத்தொங்கும்!
வாழ்க்கையிது போலவரு மா?
தூ.செ.
சீழ்க்கை உறுத்தவோர் தேன்சிட் டுதொங்கலில்!
வாழ்க்கை இதுவரு மா?
ஒ.செ.
சீழ்க்கையொலி காதுறும் தேன்சிட்டு பூத்தொங்கும்!
வாழ்க்கையிது போல்வரு மா? ... 6

ஏ.செ.
பக்கத்தில் ஏரிபோலப் பாழ்நீராய்த் தேங்குநிலம்
கொக்குகள்வாய் கீழ்நோக்கும் கோடு.
தூ.செ.
பக்கலில் ஏரிபோல் பாழ்நீர் நிலத்தினில்
கொக்குவாய் கோணலாம் கோடு.
ஒ.செ.
பக்கலில் ஏரிபோல் பாழ்நீராய்த் தேங்குநிலம்
கொக்குகள் வாய்கோணல் கோடு. ... 7

ஏ.செ.
காலோடி மேடேறும் காணான்கள் கொக்கிடையே
மேலோடிக் கண்மறையும் மீன்.
தூ.செ.
ஓடிமே டேறுபுள் காணான் குருகிடை
ஓடியே கண்மறை மீன்.
ஒ.செ.
காலோடி மேடமர் காணான்கள் கொக்கிடை
மேலோடிக் கண்மறை மீன். ... 8

ஏ.செ.
கண்டதெலாம் உண்ணவரும் காக்கைகள் கூட்டமர்ந்தே
விண்ணுலவும் தோட்டியிது வே.
தூ.செ.
கண்ட துணவரும் காக்கைகள் கூட்டமர்
விண்ணுறு தோட்டியா மே.
ஒ.செ.
கண்டதெலாம் உண்னவரும் காக்கைகள் கூட்டமாய்
விண்ணுலவும் தோட்டியா மே. ... 9

ஏ.செ.
காலையிளங் காற்றினிலே கண்பட்ட காட்சிகளால்
மாலைவரை துள்ளுமனம் மான்.
தூ.செ.
காலை யிளம்வளி கண்ணுறு காட்சிகள்
மாலை வரைமனம் மான்.
ஒ.செ.
காலையிளங் காற்றிலே கண்பட்ட காட்சிகள்
மாலைவரை யென்னுளம் மான். ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Tuesday, December 4, 2018

பயிலிழை குவெ.10. இயைபுக் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.10. இயைபுக் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/269467760450429/
கவிஞர் திசேசு
(சீர்கள் 4-3 இயைபு)

அழகுதமிழ் வாசமுறு தென்றலேநீ வீசு
பழுகுதமிழ்ப் பாவெடுத்துப் பேசு. ... 1

மயங்கிமான் மங்கைவிழி கண்டு வியந்து
வயங்கிவனம் ஓடும் ஒளிந்து. ... 2

அவனவன் வேலை அவனவனே பார்த்துச்
சிவனவனை நாடுவுளம் சேர்த்து. ... 3

உலகுவளம் அத்தனையும் உன்னதமாய் ஆக்கு
நலமடையக் கெட்டதெலாம் நீக்கு. ... 4

பழகுதமிழ்ச் சொல்லெடுத்து பாரதியைப் பாடு
அழகுவளர் தேசமென்றே ஆடு. ... 5

உழவினமே மாய்ந்தொழிய செய்யாதே ஊறு
கழனிகாய காணுவியோ சோறு. ... 6
★
(சீர்கள் 3-3 இயைபு)
சீறி வருங்காளை மாடு சினந்துவர
கீறியுடல் போடுமுன்னே ஓடு. ... 7

நெருப்பருகே வைக்காதே பஞ்சு நிலைமை
பொறுப்பற்றுப் போவதற்கே அஞ்சு. ... 8

ஓய்வின்றி உண்டால் விருந்து நலங்கெட்டு
நோயுண்ண உண்பாய் மருந்து. ... 9

ஆறுமுகன் வேற்புகழைப் பேசு அவனருட்
பேறாய்த் திருநீறு பூசு. ... 10

மன்னுபெருஞ் சீராய் விருந்து மகிழ்ந்துண்ட
பின்னரே நீரை அருந்து. ... 11

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
(சீர்கள் 4-3 இயைபு)

நடையழ கென்னவோ நாட்டிய மேதான்
சடைமுடி மட்டுமே சாண். ... 1

அருகிப் பழக அவளுள்ளம் வெற்பு 
கருகுமோ மாதவள் கற்பு? ... 2

தயங்காத பொய்யனின் சத்தியம் கண்டு 
மயங்கிடில் நாமென்றும் மண்டு. ... 3

பழச்சாறு தன்னைப் பதமாய்ப் பருகு 
பழக்கம் சிறக்க அருகு. ... 4

அவன்தான் தருவான் அருமை விருந்து 
இவன்வலிக் கெங்கே மருந்து? ... 5
★
(சீர்கள் 3-3 இயைபு)
வயலை அழித்திடும் வண்டு வருமந்தக் 
கயலை  வதைக்குமாம்  நண்டு. ... 6

வறியவர் மீது வெறுப்பு மடமை
வெறித்தா லவரே நெருப்பு. ... 7

சின்னக் குழந்தை குறும்புச் சிரிப்பது
அன்றலரும் ரோஜா அரும்பு. ... 8

மேடையில் பேசிடும் பேச்சு மெதுவாக
ஜாடையில் கேட்டாலே போச்சு. ... 9

அலைமே லசையும் படகு அவனின்
தலைமேல் கடனால் அடகு. ... 10

★★★
கவிஞர் பாவலர் சீனி பழனி
(சீர்கள் 4-3 இயைபு)

வாழ்வும் பயனும் வழியென வேவரும்
தாழ்வில் சுகமே தரும். ... 1

நெருப்பில் துயிலும் நிலவுக ளிங்கு
விருப்பம் கனவிலுஞ் சங்கு. ... 2

விடியற் கனவு விடியா இரவு
முடியா விழைவி னுறவு. ... 3

நடந்திடக் கால்கள் நமதுடல் எண்ணம்
கடந்திடும் காலமோ திண்ணம். ... 4
★
(சீர்கள் 3-3 இயைபு)
திருக்குறள் நாளும் பெருங்கு ரலானால் 
ஒருகுறை யில்லை ஒருங்கு. ... 7

மனமகி ழுந்து நனவுகள் சிந்து
தினம்கொள் கனவுகள் தேன். ... 8

முன்கைநீள முன்னம் முழுமதி தூமலரே
வன்கை குறைவாழ் மதி. ... 9

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
குறட்பா வித்தகம்: இயைபுக் குறள்
(குறள் வெண்பா)

(சீர்கள் 4-3 இயைபு)
பணம்சேர்த்து வந்த பகட்டான வாழ்வு
குணமுயர வில்லையெனில் தாழ்வு! ... 1

கடவுளாய்க் கற்சிலை கண்டால் வெறுப்பு?
கடந்தீரோ எல்லை, செருப்பு! ... 2

மதுரம் தமிழென்று வால்மீகி வாக்கு
நிதம்பயிலா தேதேதோ சாக்கு! ... 3

மழலை மிழற்றி மடியமரப் பேச்சு
கழலும் மனமெங்கோ போச்சு! ... 4

கழலிணை போற்றியே கண்ணனுருத் தொட்டு
வழுத்தினேன் என்மனம் விட்டு! ... 5

துளிர்விடும் காய்மலர்த் தோட்டமென் வீடு
நளிவுறும் ஓய்விலென் நாடு. ... 6
★
(சீர்கள் 3-3 இயைபு)
நறும்பூவில் தும்பி அரும்பு நளியும்
எறும்பூர்ந்து ஓட்டும் குறும்பு! ... 7

வண்ணத்துப் பூச்சி அமர்ந்து மலர்தேடும்
எண்ணமதை யின்றும் சுமந்து! ... 8

கன்னியவள் கண்விழிப் பூமலர்ந்து புன்னகைத்தாள்
என்னுள்ளம் தேன்பா மலர்ந்து! ... 9

நிலவியே எங்கும் நிறைந்து பிரம்மம்
பலவுரு கொள்ளும் குறைந்து. ... 10

★★★
கவிமாமணி இலந்தை இராமசாமி
(அன்புடன் இசைந்து தந்த இயைபுக் குறள்கள்)
(சீர்கள் 4-3 இயைபு)

கிழக்கு வெளுக்கக்  கிறங்கும் பொறுப்பு
முழக்கொலி சேவற் சிறப்பு. ... 1

மரக்கிளை மேலொரு மன்மதக் கூடு
சிரத்தைப் பறவையின் வீடு. ... 2

களிமகன் வார்த்தைகள் காதினுக்கு ஊறு
தெளிவுடன் சொல்கையில் வேறு. ... 3

கவிதை சிறந்திடச் சொல்க உணர்ந்து
சுவைமிகு சொற்கள் புணர்ந்து. ... 4

இலக்கியம்  நோய்தீர் இதமாம் மருந்து
நலம்தரும் நல்ல விருந்து. ... 5

மிறைப்பா  ரமணி நடத்தும் அரங்கு
சிறப்புரை நெஞ்சே நெருங்கு. ... 6

விழிகளை மூடி விமலனை வேண்டு
தொழுகையில் உன்மனம் தூண்டு. ... 7

இலந்தை

★★★★★

பயிலிழை குவெ.10. இயைபுக் குறள்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.10. இயைபுக் குறள்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/240388460025026/
(சீர்கள் 4-3 என்றோ, 3-3 என்றோ இயைபு வரப் பாடும் குறள் வெண்பா)
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்
இறுவாய் ஒப்பினஃ தியைபென மொழிப.
--யாப்பருங்கல விருத்தி

அதாவுது, இயைபுத் தொடையில்
.. இரண்டு அடிகளின் ஈற்றெழுத்தோ
.. அவ்வெழுத்துள்ள அசையோ
.. அவ்வசையுள்ள சீரோ
.. அச்சீருள்ள சொல்லோ
.. ஒன்றுக்கொன்று ஒப்ப அமையலாம்.

இயைபுக் குறளைப் பொறுத்தவரை
.. இரண்டு அடிகளின் ஈற்றுச் சீரமையும்
.. சொற்கள் ஒப்பவரும் இயைபுகளையே கொள்வோம்.

ஒப்புதல் என்றால்
.. மெய்யெழுத்துகள் அவையே என்றோ
.. அல்லது தம்முள் ஒலியொத்தோ அமைய
.. அவற்றின் மேல் அதே அல்லது ஒலியொத்த
..  உயிரேறியதாக அமைதல் வேண்டும்.

சான்றுகள்:
.. அடகு-படகு, சாக்கு-வாக்கு => அதே ஒற்று, அதே உயிர்
.. அரும்பு-குறும்பு, பேச்சு-போச்சு => அதே ஒற்று, ஒலியொத்த உயிர்
.. கன்று-வந்து, கட்டை-கற்றை, வள்ளி-சொல்லி => ஒலியொத்த உயிர், ஒற்று
.. மழலை-குவளை, கடமை-உடமை => ஒலியொத்த உயிர்கள்

பயிலிழை குவெ.10. இயைபுக் குறள்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. முதலடி நான்காம் சீர் => இரண்டாமடி மூன்றாம் சீரில் என்றோ
.. இரண்டு அடிகளிலும் மூன்றாம் சீரில் என்றோ
.. சொல்லியைபுகள் அமைவதாகவும்
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு அல்லது ஒரூஉ மோனை அமையுமாறும்
.. குறைந்தது 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் புனைந்து
.. மேற்சொன்ன இரு வகைகளாகப் பிரித்து எழுதுவோம்.
.. ஒருவர் பத்து குறட்பாக்கள் வரை எழுதலாம்.

குறிப்பு:
சீர்கள் 4-3 இயைபென்றால்
.. முதலடியில் சீர்கள் 1-3-இல் பொழிப்பு மோனை அமையும் 
.. ஈற்றில் வரும் இயைபுச் சொல் காசு, பிறப்பு வாய்பாடாவதால்,
.. குறள் நிரையசையில் தொடங்கும்.

சீர்கள் 3-3 இயைபென்றால்
.. முதலடியில் சீர்கள் 1-4-இல் அமையும் ஒரூஉ மோனை
.. ஈற்றயற்சீர் இயைபு ஈரசையாகும்
.. குறள் நேரசையிலோ நிரையசையிலோ தொடங்கும்.
.. இவ்வகைகளைச் சான்றுக் குறட்பாக்களில் காண்க.

தொகுப்பு
06/07/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக
குறட்பா வித்தகம்: இயைபுக் குறள்
(குறள் வெண்பா)

(சீர்கள் 4-3 இயைபு)
பணம்சேர்த்து வந்த பகட்டான வாழ்வு
குணமுயர வில்லையெனில் தாழ்வு! ... 1

கடவுளாய்க் கற்சிலை கண்டால் வெறுப்பு?
கடந்தீரோ எல்லை, செருப்பு! ... 2

மதுரம் தமிழென்று வால்மீகி வாக்கு
நிதம்பயிலா தேதேதோ சாக்கு! ... 3

மழலை மிழற்றி மடியமரப் பேச்சு
கழலும் மனமெங்கோ போச்சு! ... 4

கழலிணை போற்றியே கண்ணனுருத் தொட்டு
வழுத்தினேன் என்மனம் விட்டு! ... 5

துளிர்விடும் காய்மலர்த் தோட்டமென் வீடு
நளிவுறும் ஓய்விலென் நாடு. ... 6

***
(சீர்கள் 3-3 இயைபு)

நறும்பூவில் தும்பி அரும்பு நளியும்
எறும்பூர்ந்து ஓட்டும் குறும்பு! ... 7

வண்ணத்துப் பூச்சி அமர்ந்து மலர்தேடும்
எண்ணமதை யின்றும் சுமந்து! ... 8

கன்னியவள் கண்விழிப் பூமலர்ந்து புன்னகைத்தாள்
என்னுள்ளம் தேன்பா மலர்ந்து! ... 9

நிலவியே எங்கும் நிறைந்து பிரம்மம்
பலவுரு கொள்ளும் குறைந்து. ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Monday, November 26, 2018

பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/268508533879685/
கவிஞர் சியாமளா ராஜசேகர்
வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்

அலைகளி லாடு மழகிய மீனை 
வலைவீசி வாரிடநீ வா. ... 1

கைவிர லாலே கவிதை எழுதியே 
மைவிழி யாளை வளை. ... 2

முழுமதி போலே முகமுடை யாளை
அழவிட லாமோ அழை. ... 3

பெரிய வுருவொடு பேரழ கான
அரிய வரிமா வது. ... 4

கருநீல மேனியனே காதலொடு பாட 
வருவாயா தேடி மனை. ... 5

வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு

தனிமை யிரவு வனிதை மகிழ
இனிய கவிதை எழுது. ... 6

இரவு நிலவோ டினிய உறவு
விரிய விரிய இளகு. ... 7

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன் 

நிசமா கனவா நினைவி லிலையே 
வசமா மவனே விபு. ... 1

குழலி னினிய குழக னிசையே 
கழலி லொலிசெ யசைவு. ... 2

அயனோ அரனோ அரியோ உளமே
பயனோ பணிவே பரவு. ... 3

வளமா நலமா வரமா வசவா 
களமோ கழலே கருது... 4

உறவே இலதா உலகே களரே 
பிறவா வரமே பெரிது. ... 5

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன் 

அழிபசி தீர அறநெறி தேறா
வழிதனை நாடுவதே னோ? ... 1 (வகை 2)

ஆடியோடி வேலையே ஆதாய மேதுமிலை 
வாடிவதை யாவதே னோ? ... 2

மாறு முலகிலே மாறா ததருளிட
ஏறு மயிலேறி வா. ... 3

ஆகா மனிதா அவசர மாயழிய
போகா வழியிலே  போ. ... 4

தேடி வருதுயரே தேயுமவ னாசியாலே
நாடி வருமே வழி. ... 5

★★★
கவிஞர் பாவலர் சீனி பழனி 

படியுடை யேணி முடிதலை யேறா
அடிதொழு பேடி கரி. ... 1

மலையின் மகிமையால் வானிழி நீரே
குலையென வாழை வரவு. ... 2

சிலையென நாளோ செலவது தானே
நிலையெனவோ நாளிர வு. ... 3

கிழவது தானே பழகா இளமை
நிழலது காணா நிலவு. ... 4

தாயொடு பிள்ளை தலைப்படு பாசமோ
காயொடு நீடு கனி. ... 5

மரமிடை ஓரிள மானுட னோட
பரிவுடை மாமயி லாடு. ... 6

உடலு முயிறு மொருமை யுலகே
திடமு முரமுமே தேடு. ... 7

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு

அருவி யழகு மருவு குவடு!
குருவி யழகது கூடு! ... 1

பரிதி சிகரி பரவி யொளிர
உருவி யுருவி யுறை. ... 2
[சிகரி=மலை, உருவி=பூமி, நாயுருவி]

அகட விகட மகுடி யுருள
எகிரி யெழுவ தரவு. ... 3

காசினி வாசினி ஆசினிவி லாசினி
பூசிநீ மாசிலை யே. ... 4
[ஆசினி=>வானுறைபவள், விலாசினி=ஒளிமிக்க பெண்]

வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்

நாலடி யாருள நாயக மாமணி
மேலடி யாருள மே! ... 5

குகனே முருகா குமரா விசாகா
அகமே றியெனை யணை! ... 6

உளதோ இலதோ உறவோ தனியோ
வளமோ வறிதோ வழி! ... 7

ஓதுமறை நாயகனே ஊனமிலி யேயெனது
வாதுமன மாயையறு வா! ... 8

மலையி லருவி மறையு மழகு
விலையி லதனை விழை! ... 9

உடலி லுயிரென வோடு மிறையே!
மடமா மனமே வளை! ... 10

★★★
கவிஞர் திசேசு

உரலுறு கோலென வாட லொழிய
அரனது பாத மடை. ... 1

பணம தழகோ பயனோ மனைவி
குணமது கூடா வழி. ... 2

ஆதி சிவனுடை பாதியினை நாடுவதே
வேதநெறி கூறு மொழி. ... 3

எதுஇனிது யாழோ தமிழோ வினவு
மதுமழலை கேளாத காது. ... 4

கணநா தனடிதொழ ஏனோ கவலை
வினைதீ ரவழிலையே வேறு. ... 5

உளதா யுணர உளதது மாறி
இலதா யுளது மது. ... 6

★★★★★

பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/268508533879685/
உத்தி அமைப்பு: 
.. பைந்தமிழ்ச் சோலைப் பாவலர் மா. வரதராசன் அமைத்த 
.. ஒற்றிலா வெண்பா உத்தியை மூலமாகக் கொண்டு, 
.. அதைக் குறள் வெண்பாவுக்கு இரண்டு வகைகளாக 
.. அடியேன் அமைத்தது.

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்
* குறட்பா வித்தகம்: ஒற்றிலாக் குறள் (இருவகை)
.. குறட்பாவின் சீர்களில் எங்கும் ஒற்று வராமல் அமைவது.

இந்த உத்தியை இரண்டு வகைகளில் அமைக்கலாம்.

1. அகம் மற்றும் புறப் புணர்ச்சிகளில் ஒற்றுகளை மறைத்தல்.
* அகப்புணர்ச்சி என்பது
.. ஒரு சொல்லின் உறுப்புகள் இணைந்து
.. ஒரே சொல்லாக வருவது.
.. அகம் புணர்ந்த சொற்கள் இடைவெளியின்றி எழுதப்படும்.
.. சான்றுகள்
.. நாம்+கள்=>நாங்கள், மரம்+அத்து+ஐ=>மரத்தை, வெட்டு+இன்+ஓம்=>வெட்டினோம்.

* புறப்புணர்ச்சி என்பது
.. இரண்டோ மேலோ சொற்கள் இணையும் போது
.. எழும் புணர்ச்சி விகாரங்களுடன் 
.. எழுதப்படும் சொற்றோடர்.
.. புறம் புணரும் சொற்றொடரில் சொற்கள்
.. இடைவெளி விட்டு எழுதப்படும்.
.. சான்றுகள்
.. மலைவீ ழருவி யாறென வோடியது.
.. சோற்றைத் தின்றான்.

எனவே,
.. சீர்களின் அகம் மற்றும் புறப் புணர்ச்சியில் 
.. ஒற்றுகள் மறைய அமைக்கும் போது 
.. வல்லினம் மிகுமிடங்களில் ஒற்று வருவதை அறிந்து
.. அதுபோன்ற சொற்களைத் தவிர்க்கவேண்டும்.

கீழ்வரும் குறட்பாவின் ஒற்றிலா அமைப்பு சரி.
.. முருக னருள விருளு மகல
.. மருளை யறியு மனது.

கீழ்வரும் குறட்பாவின் ஒற்றிலா அமைப்பில் தவறென்ன?
.. கருணை மனது கனிய கனிய 
.. அருணை முனியை யறி.
தவறு: கனியக் கனிய => ஒற்று மிகும்.

இதைத் தவிர்க்க இப்படி அமைக்கலாம்:
.. கருணை மனது கனிய விரிய
.. அருணை முனியை யறி.

2. ஒற்றுகளே வராத சொற்களில் அமைத்தல்
.. இவ்வகையில் அகம், புறப் புணர்ச்சிகளில் 
.. மறையும் ஒற்றுகள் இல்லாத
.. சொற்களைத் தேர்ந்தெடுத்து குறட்பா அமைக்கவேண்டும்.

கீழவரும் குறள் இவ்வகைத்தே.
.. பிறவி யிறவு யறவு விழைவா?
.. உறவு வரவு குறை.
.. [இறவு=>இறப்பு, அறவு=>ஒழிகை]

பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒற்றுகள் முழுதும் இல்லாமலோ (இரண்டாம் வகை)
.. மறைந்தோ அமைவதாகவும் (முதலாம் வகை) 
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனையோ எதுகையோ அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் புனைந்து
.. மேற்சொன்ன இரு வகைகளாகப் பிரித்து எழுதுவோம்.

* நாம் எழுதும் ஒற்றிலாக் குறளில் ஒற்றுகள்
.. சீர்களின் அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் முதல் வகையாகவோ
.. ஒற்றுகளே வராத இரண்டாம் வகையாகவோ அமையலாம்.
* இவ்விரு வமைகளில்
.. ஒற்றுகள் மறையும் முதலாவது சிறப்பெனில்
.. ஒற்றுகளே வரவியலா இரண்டாவது மிகுசிறப்பு என்று கொள்வோம்.

தொகுப்பு
29/06/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக
குறட்பா வித்தகம்: ஒற்றிலாக் குறள்
(குறள் வெண்பா)
வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு

அருவி யழகு மருவு குவடு!
குருவி யழகது கூடு! ... 1

பரிதி சிகரி பரவி யொளிர
உருவி யுருவி யுறை. ... 2
[சிகரி=மலை, உருவி=பூமி, நாயுருவி]

அகட விகட மகுடி யுருள
எகிரி யெழுவ தரவு. ... 3

காசினி வாசினி ஆசினிவி லாசினி
பூசிநீ மாசிலை யே. ... 4
[ஆசினி=>வானுறைபவள், விலாசினி=ஒளிமிக்க பெண்]

வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்

நாலடி யாருள நாயக மாமணி
மேலடி யாருள மே! ... 5

குகனே முருகா குமரா விசாகா
அகமே றியெனை யணை! ... 6

உளதோ இலதோ உறவோ தனியோ
வளமோ வறிதோ வழி! ... 7

ஓதுமறை நாயகனே ஊனமிலி யேயெனது
வாதுமன மாயையறு வா! ... 8

மலையி லருவி மறையு மழகு
விலையி லதனை விழை! ... 9

உடலி லுயிரென வோடு மிறையே!
மடமா மனமே வளை! ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Saturday, November 17, 2018

பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/250610645669474/
01. கவிஞர் சியாமளா ராஜசேகர்

வெண்மதியைக் கார்மேகம் மூடித் திறப்பதைக் 
கண்ணிருந்தும் காணாதோ சம்பு. ... 1
( சம்பு - சூரியன் )

ஆடா(து) அசையாது செந்நெல் பசும்வயலில்
பாடாமல் பாடிநீ யாடு. ... 2

இரவும் பகலும் உறங்கி விழித்தால்.
வருவாயும் வாரா(து) ஒளி. ... 3

நல்லன கெட்டன ஆராய்ந் தறியாயேல்
நில்லாமல் செல்லுமோ தீது. ... 4

போய்விடும் வந்ததுபோல் இன்பமும் துன்பமும் 
வாய்மையுடன் பொய்விலக்கி வா. ... 5

★★★
02. கவிஞர் வெங்கடேசன்

உள்ளதும் இல்லதும் உண்மையும் பொய்யுமாய்க்
கொள்ளும் இறையினுக்கொப் பில். ... 1

கைகொடு கால்தொடக் கற்றவர் கல்லார்ந்த
மெய்கொண் டுயிர்ப்பர்பற் கால். ... 2 

கைகொடு காலளத்தல் ஒல்லுமோ மாட்டாதே
பொய்கொடு மெய்வளர்க்குங் கால். ... 3

துயில்வோர் விழித்திடச் சோம்பர் உழைக்கப்
பயின்றிடக் கற்பித் தெழுப்பு. ... 4

கருப்பானை வெண்கோ டுடைத்தற்றே இல்லார்க்(கு)
உருக்குலைந்தும் நேர்மை ஒளி. ... 5

★★★
03. கவிஞர் ஐயப்பன்

சேரும் பிரியும் சிவப்பு கருப்பொடு 
நீரும் நெருப்பும் முரண். ... 1

நஞ்சை அமுதாக்கும் நாட்டானே காட்டானே 
நஞ்சோ அமுதர்க் கமுது. ... 2

அறிவிலி ஞானம் அறமிலா நீதி 
திறக்க வடைக்கும் அறிவு. ... 3

ஊடலாற் கூடலே வாயென்க போயென்பாள் 
நாட விலக்கும் நயந்து. ... 4

இணைந்தார் பிரிந்தால் சுனைநீர் கனலாம் 
கணமும் யுகமாய்ப் பிரிவு. ... 5

★★★
04. கவிஞர் இராமசாமி வெங்கடராமன்

கல்லாரோ கற்றோரோ இல்லாரோ உள்ளோரோ
எல்லோரு மோர்நாள் மண். ... 1

வெட்டுதலோ ஒட்டுதலோ கோபமோ சாந்தமோ
கெட்டியாயின் நீர்க்குமோ நட்பு? ... 2

காலு மரையு முழுவது முக்காலும் 
ஆலுண் டமுதன் தலை. ... 3

எண்ணு மெழுத்து முரைத்தபின்னும் ஊமையாயின் 
கண்ணிருந்து மந்தகனென் றெள். ... 4
(எண் = மதிப்பு, எள் = நிந்தை ஆகவே முரண்)

பொய்யினை உண்மைபோல் போற்றிவாழ் ஊமையர்க்குத் 
தெய்வமும் பேயுமோ மெய்? ... 5

★★★
05. கவிஞர் சீனி பழனி

இரவும் பகலும் எண்ணம் எழுத்து
பெருகும் அரிதே ஒளி. – 1.

இரவில் கதிரியக்க வெம்மை குளுமை
தெரியும் மறையும் நிலவு. = 2.

அலையும் நிலைக்கும் ஆர்க்கும் அமைதி
தலைதொடப் பாதம் தணி. - 3.

கனியும் காயாய்ப் பேச்சினில் மௌனம்
கனவில் நனவெனக் காய். - 4.

துறவைத் துறவா மொழியும் மனமும்
சிறைகொள் பறவைச் சிறை. - 5.

★★★

06. கவிஞர் அரங்க இரகுநாதன்

பிறப்பும் இறப்பும் பிறர்க்கும் நமக்கும் 
மறப்பும் நினைவும் மறைந்து. ... 1

மலையில் மடுவில் மறையும் தெரியும் 
நிலையாய் அலையாய்க் கடல். ... 2

பாராதே பார்த்திடுவான் வாராதே வந்திடுவான் 
தேராதே தேரிக்கண் மூடு. ... 3

பாற்கடல் கரியவான் பார்,கடல் அண்டமும் 
சேர்பல பூதங்கள் நீர். ... 4

★★★
007. கவிஞர் திசேசு

துன்பமும் இன்பமும தொட்டும் தொடாமலும்
தோன்றி மறைதல் சுகம். ... 1

தீயினுள் நீரென நீரினுள் தீயெனத்
தாயினுள் சேயதும் நீர். ... 2

ஓடியது நிற்கும் உடைந்ததும் ஒட்டுமே
தேடியது கிட்டி வரின். ... 3

பல்லுயிரும் ஒவ்வொன்றாய்க் காக்கப் படைத்ததை
இல்லையென ஆக்குவதும் ஒன்று. ... 4

கூடிவர ஓடிவிடும் கொண்டதும் தந்ததுமே
இன்பந்தான் துன்பே விலகு. ... 5

உறவில் பிரிவோ உண்மையோ பொய்யில்
நறவில் நஞ்சோ பகை. ... 6

பேதையை மேதையில் மௌனத்தைப் பேச்சினில்
காணாமல் காண்ப தறிவு. ... 7

தலையொடு காலையும் தாங்கிடும் வீழ்த்தும்
நிலையினில் நில்லாத தொண்டு. ... 8

இலையதுவே உணடென் றிசைவார் மறுத்திடுவார்
நல்லவரில் கெட்டவரு முண்டு. ... 9

★★★
008. கவிஞர் குருநாதன் ரமணி

செல்வம் வருமது தீர்ந்திடும் மீள்வரினும்
கல்லும் கொழுவற் கடம். ... 1

[கல்லும் = அரித்திடும்; கொழு = செழித்த; 
வற்கடம் = வறட்சி என்பது முரண்.]

உயிரும் உடலும் துயிலும் விழிக்கும்
கயிற்றில் அரவின் அழிவு. ... 2

[உயிர் அழிவற்றது என்பதால் இறுதிச் சொல் 
அழிவு என்பது முரண்.]

தூளியில் தூங்காக் குழந்தைதன் அன்னையை
ஏளனத்தில் போற்றத் தெளிவு. ... 3

[தூளி = குழந்தைத் தொட்டில், புழுதி; 
எனவே தெளிவு என்பது முரண்.

அன்னை எவ்வளவுதான் ஆட்டித் தூங்கவைக்க முயன்றாலும் தூங்காத குழந்தை
தூளியை விலக்கித் தன் அன்னையை ஏளனமாக எட்டிப் பார்க்கிறது. இருப்பினும்
அதன் பார்வையில் ஏளனத்தை விட அன்னையைப் போற்றும் பாசமே தெரிவதால்
அன்னைக்கு குழப்பமோ சினமோ விளையாது ஒரு தெளிவு பிறக்கிறது.]

சிவம்:
இயைபில் முரணாய் இலங்கி யொடுங்கி
முயல்விலே நிற்கும் முரண். ... 4

அலையெலாம் ஓய்ந்தபின் செய்திட எண்ணில்
நிலையாகிப் போகும் கரை. ... 5

கணமே யுகமாகிக் காதல் சினமாகும்
தணத்தல் அணத்தல் தனி. ... 6

[தணத்தல் = நீங்குதல், பிரிதல்; அணத்தல் = மேலெழும்புதல், பொருந்துதல்;
கணம் என்றால் கூட்டம் என்னும் பொருளில் தனி என்பது முரண்.]

நிருத்தத்தில் நிற்கும் இறையினைக் கல்லென்
றிருந்திடும் போக்கை நிறுத்து. ... 7

விருத்தம் இளமை விழிப்பினில் ஓய்வு
அருத்தனை முழுதும் ஒன்று. ... 8

[விருத்தம் = விருத்தி, மூப்பு. ஓன்று என்பது விருத்திக்கு முரண்.
அருத்தன் = பாதி உடலோன், எனவே முழுதும் என்றது முரண்.]

தூங்காமல் தூங்கிடும் தூக்க விழிப்பினில்
நீங்காமல் நிற்றல் விழிப்பு. ... 9

[ஈற்றுச் சீரில் விழிப்பு என்பதற்கு எச்சரிக்கை என்னும் பொருள்.]

மெய்யிது பொய்யெனும் எண்ணம் செயலுறுதல்
உய்வெனவே ஆழும் உயிர். ... 10

★★★★★

பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/228540057876533/
உத்தி அமைப்பு: கவிமாமணி இலந்தை இராமசாமி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்:
* குறட்பா வித்தகம்: அடிமுடி இடைமுரண் குறள்
.. 1. முதற்சீர், ஈற்றுச்சீர் (சீர்கள் 1,7) சொற்களில் முரண் அமையவேண்டும்.
.. 2. அப்படி அமையும் முரண் பொருள் முரணாக இருத்தல் வேண்டும்.
.. 3. இது தவிர, சீர்கள் 1-2, 3-4, 5-6 இவற்றில் முரண் அமையவேண்டும்.
.. இது சொல்முரணாகவோ, பொருள் முரணாகவோ இருக்கலாம்.

சான்றுச் சொற்கள்
சொல் முரண்
.. கால்-கை, நாங்கள்-நீங்கள், பிறப்பு-இறப்பு, 
.. உயர்வு-தாழ்வு, செம்மனம்-கருநாக்கு.
பொருள் முரண்
.. மேடு-பள்ளம், செல்வம்-வறுமை, தீ-நீர், 
.. அமுதம்-விடம், உடல்-உயிர்.
சொற்பொருள் முரண்
.. மௌனம்-கலவரம், பெருமலை-சிறுநிலம்,
.. கருவண்டு-பைங்கிளி, அறம்-மறம், இன்பம்-துன்பம்.

பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவில் சீர்கள் 1-7, 1-2, 3-4, 5-6
.. இவற்றில் வரும் சொற்கள் முரணாகவும்,
.. அவற்றுள் சீர்கள் 1-7 பொருள் முரணாகவும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க)
.. அமைத்தே,
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. (முரண் தொடை வருவதால் 
.. பொழிப்பு மோனை கட்டாயமில்லை)
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் 
.. புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
22/06/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக
குறட்பா வித்தகம்: அடிமுடி இடைமுரண் குறள்
(குறள் வெண்பா)

செல்வம் வருமது தீர்ந்திடும் மீள்வரினும்
கல்லும் கொழுவற் கடம். ... 1

[கல்லும் = அரித்திடும்; கொழு = செழித்த; 
வற்கடம் = வறட்சி என்பது முரண்.]

உயிரும் உடலும் துயிலும் விழிக்கும்
கயிற்றில் அரவின் அழிவு. ... 2

[உயிர் அழிவற்றது என்பதால் இறுதிச் சொல் 
அழிவு என்பது முரண்.]

தூளியில் தூங்காக் குழந்தைதன் அன்னையை
ஏளனத்தில் போற்றத் தெளிவு. ... 3

[தூளி = குழந்தைத் தொட்டில், புழுதி; 
எனவே தெளிவு என்பது முரண்.

அன்னை எவ்வளவுதான் ஆட்டித் தூங்கவைக்க முயன்றாலும் தூங்காத குழந்தை
தூளியை விலக்கித் தன் அன்னையை ஏளனமாக எட்டிப் பார்க்கிறது. இருப்பினும்
அதன் பார்வையில் ஏளனத்தை விட அன்னையைப் போற்றும் பாசமே தெரிவதால்
அன்னைக்கு குழப்பமோ சினமோ விளையாது ஒரு தெளிவு பிறக்கிறது.]

சிவம்:
இயைபில் முரணாய் இலங்கி யொடுங்கி
முயல்விலே நிற்கும் முரண். ... 4

அலையெலாம் ஓய்ந்தபின் செய்திட எண்ணில்
நிலையாகிப் போகும் கரை. ... 5

கணமே யுகமாகிக் காதல் சினமாகும்
தணத்தல் அணத்தல் தனி. ... 6

[தணத்தல் = நீங்குதல், பிரிதல்; அணத்தல் = மேலெழும்புதல், பொருந்துதல்;
கணம் என்றால் கூட்டம் என்னும் பொருளில் தனி என்பது முரண்.]

நிருத்தத்தில் நிற்கும் இறையினைக் கல்லென்
றிருந்திடும் போக்கை நிறுத்து. ... 7

விருத்தம் இளமை விழிப்பினில் ஓய்வு
அருத்தனை முழுதும் ஒன்று. ... 8

[விருத்தம் = விருத்தி, மூப்பு. ஓன்று என்பது விருத்திக்கு முரண்.
அருத்தன் = பாதி உடலோன், எனவே முழுதும் என்றது முரண்.]

தூங்காமல் தூங்கிடும் தூக்க விழிப்பினில்
நீங்காமல் நிற்றல் விழிப்பு. ... 9

[ஈற்றுச் சீரில் விழிப்பு என்பதற்கு எச்சரிக்கை என்னும் பொருள்.]

மெய்யிது பொய்யெனும் எண்ணம் செயலுறுதல்
உய்வெனவே ஆழும் உயிர். ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Saturday, November 10, 2018

பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/244255799638292/
தொ.001. இராமசாமி வெங்கடராமன்

மாலவனின் தங்கை மகனாம் பழனிமலை
வேலவனுன் கையிலென்வே லா? ... 1

ஆதிசிவன் மைந்தன் அருள்பெற் றடியார்க்கு
மேதினியில் தாழ்வோ பகர்? ... 2

மிழற்றும் மொழியால் வியக்கச் செயும்சேய்
மழலைக் கிணயெது சொல்? ... 3

நோக்கம் நிறைவேற நோன்பிருக்கும் அன்பரைக்
காக்க வருமய்ய னார்? ... 4

எல்லையில்லா இன்பமே என்னாட்ட மென்றுசொல்லும்
தில்லை நடராச னார்? ... 5

★★★
தொ.002. பாவலர் சீனி பழனி

கூடிழந்து வாடுமே குஞ்சுகள் என்றறிந்தும்
காடழிக்கச் சொன்னதார் சொல்? ... 1

கழனியெலாம் பச்சையாய்க் கண்ணில் நிறையும்
உழவர் உழைப்பன்றோ சொல்? ... 2
[சொல் => சொல்லு, புகழ்]

மாற்றம் உலகினில் மாறா நியதிகாண்
நேற்றெல்லாம் இன்றென்ன கூறு? ... 3
[கூறு => பங்கு, சொல்லு]

★★★
நி1. குருநாதன் ரமணி

இணைக்கும் பிரிக்கும் பிணைக்கும் எரிக்கும்
தணலா வதெது மொழி? ... 1

பிரித்தால் பொருள்தராப் பேரளவில் நிற்கும்
இரட்டைக் கிளவியா சொல்? ... 2

கல்லாய்க் கடவுளாய்க் காண்பதே உள்ளத்தில்
பல்வகை யாமோ பகர்? ... 3
[பகர் = சொல், ஒளி]

இயலிசை நாடகம் என்னும் தமிழில்
ஒயில்குன் றுவதெ(து) உரை. ... 4
[ஒயில் = ஒய்யாரம், அலங்காரம்]

பேத்தலாய்க் கேட்டனன் பிட்டைக் கிழவியிடம்
கூத்தனவன் கொண்டதெது கூறு? ... 5

சீதைக்கு ராகவன் என்ன உறவென்று
பேதையே இப்போது கேள்? ... 6
[கேள் = வினவு, கணவன்]

சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
முந்தாச் சிவநந் தனார்? ... 7

பரிமேல் அமர்ந்தவண்ணம் பாழியெல்லைக் காவல் 
புரந்தருள் செய்யுமைய னார்? ... 8
[பாழி = ஊர்]

வாழைத்தார் முன்வைத்தே வாசமுறும் வண்ணமலர் 
ஏழையிறைக் குத்தந்த தார்? ... 9
[தந்ததார் = தந்த மாலை, தந்தது ஆர்]

வெள்ளைத் தலையுடுத்தி வீர முறுக்குடன்
அள்ளுதமிழ் பாரதி யார்? ... 10

★★★★★

பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/219278442136028/
உத்தி அமைப்பு: கவிமாமணி இலந்தை இராமசாமி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 55)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => முதலடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
 5 => சரியாக எதிரொலித்து அமையும் வினா-விடைச் சொல்லுக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்:
* குறட்பா வித்தகம்: எதிரொலிக் குறள்
.. குறட்பாவின் ஈற்றுச் சொல்
.. வினாவாகவும் அந்த வினாவின் விடையாகவும் 
.. இருத்தல் வேண்டும்.

அதாவது
.. ஈற்றுச் சொல்லில் ஒரு வினாவும்
.. அதற்கான விடையும் அமைதல் வேண்டும்.

அவ்வாறு அமையும் ஈற்றுச் சொல்
.. தன்னளவிலோ, முன்வந்த
.. சொல்லுடன் சேர்ந்தோ
.. வினா-விடையாக அமையும்.

இவ்வாறு ஒரே சொல்
.. வினா-விடையை எதிரொலிப்பதால்
.. இங்ஙனம் எழும் குறள் வெண்பா
.. எதிரொலிக் குறள் என்னும் பெயர் பெறும்.

சான்றுகள்:
தன்னளவில் வினா-விடைச் சொல்:
சொல், கூறு, செப்பு, கேள், மொழி, உரை போன்றன.

முன்வரும் சொல்லுடன் சேர்ந்து:
யார் => பாரதியார், ஔவையார், ஐயனார்
ஏன் => நாடுவதேன், இருந்ததேன்

பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவின் ஈற்றுச்சீரில் வரும் சொல்
.. தன்னளவிலோ அல்லது 
.. முன்னுள்ள சொல்லுடன் சேர்ந்தோ
.. வினாவாகவும் விடையாகவும் அமையுமாறும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க),
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனை அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் 
.. புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
08/06/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக

குறட்பா வித்தகம்: எதிரொலிக் குறள்
(குறள் வெண்பா)
(வித்தகம்: குறள்வெண்பா, ஈற்றுச்சொல் தன்னளவிலோ, முன்சேர்ந்தோ வினா-விடையாக)

இணைக்கும் பிரிக்கும் பிணைக்கும் எரிக்கும்
தணலா வதெது மொழி? ... 1

பிரித்தால் பொருள்தராப் பேரளவில் நிற்கும்
இரட்டைக் கிளவியா சொல்? ... 2

கல்லாய்க் கடவுளாய்க் காண்பதே உள்ளத்தில்
பல்வகை யாமோ பகர்? ... 3
[பகர் = சொல், ஒளி]

இயலிசை நாடகம் என்னும் தமிழில்
ஒயில்குன் றுவதெ(து) உரை. ... 4
[ஒயில் = ஒய்யாரம், அலங்காரம்]

பேத்தலாய்க் கேட்டனன் பிட்டைக் கிழவியிடம்
கூத்தனவன் கொண்டதெது கூறு? ... 5

சீதைக்கு ராகவன் என்ன உறவென்று
பேதையே இப்போது கேள்? ... 6
[கேள் = வினவு, கணவன்]

சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
முந்தாச் சிவநந் தனார்? ... 7

பரிமேல் அமர்ந்தவண்ணம் பாழியெல்லைக் காவல் 
புரந்தருள் செய்யுமைய னார்? ... 8
[பாழி = ஊர்]

வாழைத்தார் முன்வைத்தே வாசமுறும் வண்ணமலர் 
ஏழையிறைக் குத்தந்த தார்? ... 9
[தந்ததார் = தந்த மாலை, தந்தது ஆர்]

வெள்ளைத் தலையுடுத்தி வீர முறுக்குடன்
அள்ளுதமிழ் பாரதி யார்? ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Wednesday, November 7, 2018

பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/219278442136028
தொ.001. இராமசாமி வெங்கடராமன் (88888 54/55)

பாக்கைச் சவைத்துப் பசிமறக்கு மெங்களின்
நாக்கிற் கதுவேதான் காப்பு. ... 1

மாசி குளிர மழையாம் மனமுருகி
யாசிக்கக் காத்திடுசா மி. ... 2
(மாசி= மேகம்).

ராதாதா னென்றும் ரமணீய  மாய்மனதில்
ஆதார மாயொளிர்தா ரா. ... 3

கருப்புட லாயி னகத்தினில் வெண்மை
இருந்திடக் காணும் ரகு. ... 4

விசாகனைப் பாட வினைபொசுங்கும் தந்தை
அசோகனைச் சுட்ட சிவா. ... 5
(அசோகன் = மன்மதன்).

★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (88888 54/55)

வகைவகையாய் தின்பண்டம் வாய்க்குச் சுவையாய்
நகையணியோ பல்மணிக்க வை.  ... 1

கதைவிடு தூதினில் காட்டா எழில்நலம்
ததைபட தேருந் தகை. ... 2
(தகை – அழகு. ததை – நிறைத்தல்)

கோதை குரலழகே கோதில் மயிலகவே
ஓதை ஒளிரிளந் தோகை. ... 3

காவுதடி கொண்டோடி காட்டுமா கொன்றதுவே
கோவலர் தோள்வலை வாகு. ... 4
(வலைவாகு – வாகுவலையம்)

நதிபதி மாந்தர் நதிமணல் கொண்டார் 
அதிபுகழ் வாழ்நாள் நிதி. ... 5

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்

கதைத்து மனமுருகக் காதல் மொழியால் 
விதைத்த கவிதை தகைத்து. ... 1

நயந்து சுமக்கிறான் நாயகனாம் மாலை 
வியந்து பணியும் அனந்து. ... 2

வேதுதந்து காத்திடுவான் வேதமுதல் நாயகன் 
தீதொழிந்ந வண்பரமாம் தேவு. ... 3

ரகம்ரகமாய்ச் சேலைகள் பாஞ்சாலி காக்க 
அகம்குளிரத் தந்த கரம். ... 4

கருமுகிற் கண்ணனே காகுத்த னாக 
மறுயுகத தோன்றல் ரகு. ... 5

சரித்தும் அசைத்தும் சதிராடி உள்ளம் 
வரித்து மகிழ்வார் ரசித்து. ... 6

காத்து வழி்போகாக் கார்க்பந்தைச் சக்தியுடன் 
சாத்து விசையோடு தாக்கு. ... 7

சீவு தலைமுடி சேராது வீழ்ந்தாலோ 
கூவாது தூக்கியதை வீசு. ... 8

தேசு படைத்த திரேதா இராமனாம் 
ஈசன் படைத்ததே சேது. ... 9

உதைத்தபெருந் தூணில் உதித்தௌணன் தன்னை 
வதைத்தததச் சீயம் துவைத்து. ... 10

★★★
நி1. குருநாதன் ரமணி

ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1

ரோம்நாட்டில் அன்று ரொட்டியே சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2

ரவைதரும் உப்புமா ராத்திரிக்குச் சட்னி
சுவைப்போமே உள்ள வரை! ... 3

வார்த்திகம் எய்தியதில் வற்றி உருமாறி
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4

குச்சுவீட்டில் ஏது குளம்பியாய்? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5
[குளம்பி = காப்பி]

தலாரூபாய் நூறுதரத் தன்பங்கு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6

சாவுபல தீவிபத்தில் சாவுற்றோர் மத்தியில்
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7

காத்துப் பயனில்லை கல்நெஞ்சன் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8

தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9

தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த,
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10

★★★★★

பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/219278442136028
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 55)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => முதலடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
 5 => சரியாக ஒலிபிறழ்ந்து அமையும் முதல்-முடிவுச் சொல்லுக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்:
* குறட்பா வித்தகம்: முதற்சீர் எழுத்துகள் 
.. இரண்டோ, மூன்றோ இறுதிச் சீரில்
.. ஒலி மாறி வரவேண்டும்.
.. ராம் என்பது மார் என்றும்
.. கூத்து என்பது தூக்கு என்றும்
.. ஒலி மாறி வருவது போல.

ஒலிபிறழ் உத்தி
* ஒரு சொல் ஒலிபிறழ்ந்து 
.. வேறு சொல்லாக ஒலிக்க,
அதன் முதல்-இறுதி எழுத்துகள்
.. தம் குறில்/நெடில் ஒலியைத்
.. தம்முள் மாற்றிக்கொள்ளலாம்.
சான்றுகள்:
.. கவை => வகை, மீசை => சீமை
.. ராம் => மார், ரோம் => மோர்
.. கச்சு => சக்கு, கோப்பு => போக்கு

இறுதி எழுத்து ஒற்றானால்
.. முதல்-ஒற்று முன்னுள்ள எழுத்துகள்
.. தம்மொலியை மாற்றிக்கொள்ளலாம்.
சான்றுகள்:
.. தரம் => ரதம், கப்பல் => பக்கல், சுத்தம் => துச்சம்,
.. பொத்தல் => தொப்பல், வேதம் => தேவம்.

இறுதி எழுத்து ஒற்றில்லை எனினும்
.. முதல்-ஈற்றயல் எழுத்துகள்
.. தம்மொலியை மாற்றிக்கொள்ளலாம்.
சான்றுகள்:
.. கேசரி => சேகரி, சானகி => நாசகி
.. மானிலை => நாமிலை, வேதனை => தேவனை.

ஒலிபிறழ் சொற்களில்
.. இடையில் உள்ள எழுத்துகள்
.. தக்கபடி மாறுதல் காண்க.
.. கப்பல் => பக்கல், சுத்தம் => துச்சம்
.. குச்சு => சுக்கு, 

சான்றுகள் தொகுப்பு:
ஒலிபிறழ் இரண்டெழுத்துச் சொற்கள்
.. கவை => வகை, சதை => தசை, சீமை => மீசை, 
.. சூது => தூசு, தூவு => ஊது, தேசு => சேது, 
.. பசி => சபி, பசை => சபை, மாது => தாமு (பெயர்),
.. மாசி => சாமி, ராம் => மார், யார் => ராய் (பெயர்)
.. வார் => ராவ் (பெயர்), வாசு => சாவு, வீசு => சீவு.

ஒலிபிறழ் மூன்றெழுத்துச் சொற்கள்
.. கச்சு => சக்கு, கப்பல் => பக்கல், குருவி => உருகி,
.. காப்பு => பாக்கு, கேசரி => சேகரி, கோப்பு => போக்கு,
.. சாக்கு => காச்சு, சீப்பு => பீச்சு, சுத்தம் => துச்சம்,
.. தரம் => ரதம், தாடகை => காடதை (காடு+அதை)
.. தாக்கு => காத்து, பாசம் => சாபம், பொத்தை => தொப்பை,
.. பொத்தல் => தொப்பல், போத்து => தோப்பு, மாதம் => தாமம்,
.. மாதுளை => தாமுளை (தாம்+உளை), மோசம் => சோமம், 
.. வசம் => சவம். வனம் => நவம், வாசல் => சாவல்.

பயிலிழை குவெ.06. வித்தகம்: 
.. முதல் ஒலிபிறழ் முடிவு
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவின் முதற்சீரில் வரும் சொல்
.. அதன் ஈற்றுச் சீர்களில்
.. ஒலிபிறழ்ந்து வரும் சொல்லாய் அமையுமாறும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க),
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனை அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் 
.. புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
01/06/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக

குறட்பா வித்தகம்: முதற்சொல் முடிவில், ஒலிபிறழ் சொல்லாக
(குறள் வெண்பா)
(வித்தகம்: குறள்வெண்பா, முதற்சொல் ஒலிபிறழ் முடிவில்)

ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1

ரோம்நாட்டில் அன்று ரொட்டியே சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2

ரவைதரும் உப்புமா ராத்திரிக்குச் சட்னி
சுவைப்போமே உள்ள வரை! ... 3

வார்த்திகம் எய்தியதில் வற்றி உருமாறி
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4

குச்சுவீட்டில் ஏது குளம்பியாய்? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5
[குளம்பி = காப்பி]

தலாரூபாய் நூறுதரத் தன்பங்கு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6

சாவுபல தீவிபத்தில் சாவுற்றோர் மத்தியில்
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7

காத்துப் பயனில்லை கல்நெஞ்சன் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8

தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9

தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த,
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Wednesday, October 24, 2018

பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/239587280105144/
தொ.001. இராமசாமி வெங்கடராமன் (88888 53/55)

ஆறுதல் சொல்வதால் ஆவதென்  தேறுதலில்
மாறுமோ பெற்றமதிப் பாறு. ... 1

அரங்கம் வருதல் அடுக்குமோ வீட்டார்
இரவினின் அந்தரங் கம். ... 2

மாறு முலகினில் மாறாநல் மாந்தருக்
கூறெண்ண லாகாக்கைம் மாறு. ... 3

வேழம் ஒலிகுழல் மேவுமிசை போல்நாங்கள்
வாழச்செய் வோன்முகம்வே ழம். ... 4

சிவத்தை விரும்பிடும் சீலராய் வாழ 
உவகையாய்க் கூடும் சிவம். ... 5

★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (88888 52/55)

படிபடியாய் முன்னேறப் பாடுபடு வோனே
படித்திடு வான்தினப்ப டி.  ... 1

மலர்க்கண் மடந்தை மகிழ்மனச் சிந்தை
மலர்வணம் மாளிகைக் கண். ... 2

மாவட்டம் தோறும் மகளிர்ச் சேர்ந்திட
மாவிட்டுப் பூசை மா. ... 3 (விலங்குப் பூஜை).

திருமணப் பெண்டிர் பெருமகன் வீடு
தெருவினில் பூந்தேர் மணம். ... 4

திருமுறை வாணர் பெரும்புகழ் பின்தேர்
ஒருகுர வைப்பா முறை. ... 5

★★★
நி1. குருநாதன் ரமணி

நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு. ... 1

கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு. ... 2

உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு? ... 3

குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி. ... 4

படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி. ... 5

தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர். ... 6

தலைப்பறி விக்கவே தான்பாட நின்றாள்
கலையின்கை சேலைத் தலைப்பு. ... 7
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]

கதையால் கயவனின் கால்வீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை. ... 8

மாடுமீ தேறி வலம்வரும் அத்தனுக்குக்
காடாக வோர்சடைச்சும் மாடு. ... 9

ஆடு புலிபார்க்க அத்தனே தில்லைவனக்
காடுயர் அம்பலத்தே ஆடு. ... 10

★★★★★