சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.12. பழமொழிக் குறள் புனைதல் தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/273259230071282/
கவிஞர் அரங்க இரகுநாதன்
முதலடிப் பழமொழி
(குறள் வெண்பா)
ஐயர் வருதற்(கு) அமாவாசை காத்திராது
பையக் கருமம் பழகு. ... 1
ஈயாதார் தேட்டையைத் தீயோரே கொள்வராம்
வீயாதார் ஈவர் விழைந்து. ... 2
மலைகளைக் கெல்லி எலியைப் பிடிப்பர்
மலியூழல் நீக்க முனைந்து. ... 3
எண்சாண் உடற்குச் சிரமே பிரதானம்
பண்சார் கவிக்கொரு பாட்டு. ... 4
திரைகட லோடித் திரவியம் தேடு
நிறையுடை வாழ்வின் நிசம். ... 5
★
ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)
தணலோதன் சூட்டால் குணமோதன் கேட்டால்
நுணலோதன் வாயால் கெடும். ... 6
தொட்டவர்க் குண்டு துணையெனக் காலடிமைப்
பட்டவர்க் குண்டு பலன். ... 7
நனியுரம் கொண்டதாம் நல்லுறவு சுற்றம்
தனிமரம் தோப்பாவ தில். ... 8
மறையிடம் இல்லாத மாணில்லை ஆயின்
நிறைகுடம் நீர்தளும் பாது. ... 9
நங்கையர் திண்மை நலங்கெடப் பேசுதல்
திங்களை நாய்குரைத் தற்று. ... 10
★★★
பாவலர் சீனி பழனி
முதலடிப் பழமொழி
(குறள் வெண்பா)
எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன
கொட்டிக் கொடாதான் வளம். ... 1
எடுப்பது பிச்சையாம் ஏறுவதோ பல்லாக்கு
நடிப்பே நடலையர் வாழ்வு. ... 2
(நடலையர் – வஞ்சகர்)
எள்ளெனும் முன்னவன் எண்ணெயாய் நின்றனன்
கொள்ளெனும் வித்தே கொடைக்கு. ... 3
தலையில் இடிபட்டால் தாழக் குனிவான்
அலையிடை நாவாய் அவன். ... 4
பாய்மரம் இல்லா மரக்கலம் போன்றதே
ஆய்வோர் அணையா அரசு. ... 5
★
ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)
வன்சொல் வடிக்கமனம் வாடு முயிருடலே
இன்சொல் இடர்ப்படுப்ப தில். ... 6
செற்றலில் கேண்மைமேல் சேர்மதி வானம்போல்
கற்றலிற் கேட்டலே நன்று. ... 7
கூம்பும் குணத்தோரே கோலாட்சி கோடுங்கால்
பாம்பறியும் பாம்பின் கால். ... 8
சினநோயே தீங்குதரும் தீராத தெவ்வுகாண்
மனநோயாம் இல்லை மருந்து. ... 9
கொட்டிக் கொடுத்தாலும் கெட்டவர்க் கிட்டாதேல்
பட்டவர்க் குண்டு பலன். ... 10
★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
முதலடிப் பழமொழி
(குறள் வெண்பா)
அடிக்க அடிக்கத்தான் பந்துவிசை கொள்ளும்
படிக்கப் படிக்கவறி வு. ... 1
அடிமே லடியடித்தால் அம்மி நகரும்
படியுமோ மாடடியா து? ... 1
மணல்மேல் விழுந்த மழைத்துளி போலே
தணலிடை வீழ்ந்த சருகு. ... 3
மனத்தில் பகையாம் உதட்டில் உறவாம்
சினத்தில் தெரியும் மனம். ... 4
வல்லவனின் வல்லவன் வையத்தில் உண்டுகாண்
புல்லரே வல்லவராய்ப் பூ! ... 5
★
ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)
நாயனையார் ஓர்பாவில் நாடுவிட்டே ஓடுவர்!
ஆயிரம் காக்கைக்கோர் கல்! ... 6
மிஞ்சுவோர் கண்டு மிரண்டு அரண்டிடும்
அஞ்சுவார்க் கில்லை யரண். ... 7
வன்சொலால் என்றுமே வம்புதான் வாழ்வினில்
இன்சொல் இடர்ப்படுப்ப தில். ... 8
அருமை மனைவியா ஆருயிர்த் தாயா
இருதலைக் கொள்ளியென் பார். ... 9
ஓம்பலும் ஒட்டலுக்கு ஓர்வழி யாகுமாம்
பாம்பறி யும்பாம்பின் கால். ... 10
★★★
கவிஞர் திசேசு
முதலடிப் பழமொழி
எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன
கட்டிக் கொடுபோத லெது? ... 1
ஒப்புக்குச் சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை
சுப்பென்றன் வாழ்வதுந் தான். ... 2
எடுப்பது பிச்சையாம் ஏறுவது பல்லாக்கு
மிடுக்கினில் உண்டோ குறை ... 3
சீரங்கக் காகமெனில் கோவிந்தா பாடுமா
ஏரங்கா காவெனலே ஏற்பு ... 4
பாரா உடைமைகள் பாழா வதுபோல்
வாராக் கடன்வெளிநா டுடைத்து ... 5
★
ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)
தூயநெறிச் சொல்லொன்றே துன்பமெலாம் போக்குவது
ஆயிரங் காக்கைக்கோர் கல். ... 6
தேம்பாகு தந்தாலும் நம்பார் அரசியலார்
பாம்பறி யும்பாம்பின் கால். ... 7
உள்ளூடிப் பொய்களைந்து உண்மைதனைக் கண்டறிதல்
முள்ளினால் முள்களைந்த வாறு. ... 8
தானைத் தலைவன் சிறையிலே தொண்டரினி
யானைபோய் வால்போகாத வாறு. ... 9
வெட்டித் தொகைதொகையாய் வீணரைச் சாய்த்திடுவோம்
தட்டாது செல்லாது உளி. ... 10
★★★
கவிஞர் குருநாதன் ரமணி
முதலடிப் பழமொழி
(குறள் வெண்பா)
அசைந்துண்ணும் மாடாம் அசையாது வீடாம்
பசையில்லா விட்டாலோ பாடு. ... 1
அடிக்க அடிக்கத்தான் பந்துவிசை கொள்ளும்
அடிகோலும் மேன்மையுற வாம். ... 2
கிழவியும் காதம் குதிரையும் காதம்
உழவனின் வேதம் உழல்வு. ... 3
நாவிற் பிறப்பதாம் நன்மையும் தீமையும்
நாவுரைத்துப் பார்த்தே நவில். ... 4
வல்லவனின் வல்லவன் வையத்தில் உண்டுகாண்
வல்லமை தேர்தலில் வாக்கு. ... 5
★
ஈற்றடிப் பழமொழி
(குறள் வெண்பா)
சாயிராம் பேர்சொன்னால் சன்மவினை கள்பறக்கும்
ஆயிரம் காக்கைக்கோர் கல். ... 6
துணையிருப்பாய் தேவியே துர்க்கையே உன்றன்
கணையினுங் கூரியவாம் கண்! ... 7
இருப்பில்லை ஏதோ எழுதுவானென் போர்சொல்
செருப்பிடைப் பட்ட பரல். ... 8
அருவுரு வாளன் அரன்பேர்கொள் நெஞ்சு
திருவினும் திட்பம் பெறும். ... 9
கட்டுண்டோம் காத்திருப்போம் காலங்கள் மாறுவன
பட்டவர்க் குண்டு பலன். ... 10
★★★★★
No comments:
Post a Comment