Tuesday, December 4, 2018

பயிலிழை குவெ.10. இயைபுக் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.10. இயைபுக் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/269467760450429/
கவிஞர் திசேசு
(சீர்கள் 4-3 இயைபு)

அழகுதமிழ் வாசமுறு தென்றலேநீ வீசு
பழுகுதமிழ்ப் பாவெடுத்துப் பேசு. ... 1

மயங்கிமான் மங்கைவிழி கண்டு வியந்து
வயங்கிவனம் ஓடும் ஒளிந்து. ... 2

அவனவன் வேலை அவனவனே பார்த்துச்
சிவனவனை நாடுவுளம் சேர்த்து. ... 3

உலகுவளம் அத்தனையும் உன்னதமாய் ஆக்கு
நலமடையக் கெட்டதெலாம் நீக்கு. ... 4

பழகுதமிழ்ச் சொல்லெடுத்து பாரதியைப் பாடு
அழகுவளர் தேசமென்றே ஆடு. ... 5

உழவினமே மாய்ந்தொழிய செய்யாதே ஊறு
கழனிகாய காணுவியோ சோறு. ... 6
★
(சீர்கள் 3-3 இயைபு)
சீறி வருங்காளை மாடு சினந்துவர
கீறியுடல் போடுமுன்னே ஓடு. ... 7

நெருப்பருகே வைக்காதே பஞ்சு நிலைமை
பொறுப்பற்றுப் போவதற்கே அஞ்சு. ... 8

ஓய்வின்றி உண்டால் விருந்து நலங்கெட்டு
நோயுண்ண உண்பாய் மருந்து. ... 9

ஆறுமுகன் வேற்புகழைப் பேசு அவனருட்
பேறாய்த் திருநீறு பூசு. ... 10

மன்னுபெருஞ் சீராய் விருந்து மகிழ்ந்துண்ட
பின்னரே நீரை அருந்து. ... 11

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
(சீர்கள் 4-3 இயைபு)

நடையழ கென்னவோ நாட்டிய மேதான்
சடைமுடி மட்டுமே சாண். ... 1

அருகிப் பழக அவளுள்ளம் வெற்பு 
கருகுமோ மாதவள் கற்பு? ... 2

தயங்காத பொய்யனின் சத்தியம் கண்டு 
மயங்கிடில் நாமென்றும் மண்டு. ... 3

பழச்சாறு தன்னைப் பதமாய்ப் பருகு 
பழக்கம் சிறக்க அருகு. ... 4

அவன்தான் தருவான் அருமை விருந்து 
இவன்வலிக் கெங்கே மருந்து? ... 5
★
(சீர்கள் 3-3 இயைபு)
வயலை அழித்திடும் வண்டு வருமந்தக் 
கயலை  வதைக்குமாம்  நண்டு. ... 6

வறியவர் மீது வெறுப்பு மடமை
வெறித்தா லவரே நெருப்பு. ... 7

சின்னக் குழந்தை குறும்புச் சிரிப்பது
அன்றலரும் ரோஜா அரும்பு. ... 8

மேடையில் பேசிடும் பேச்சு மெதுவாக
ஜாடையில் கேட்டாலே போச்சு. ... 9

அலைமே லசையும் படகு அவனின்
தலைமேல் கடனால் அடகு. ... 10

★★★
கவிஞர் பாவலர் சீனி பழனி
(சீர்கள் 4-3 இயைபு)

வாழ்வும் பயனும் வழியென வேவரும்
தாழ்வில் சுகமே தரும். ... 1

நெருப்பில் துயிலும் நிலவுக ளிங்கு
விருப்பம் கனவிலுஞ் சங்கு. ... 2

விடியற் கனவு விடியா இரவு
முடியா விழைவி னுறவு. ... 3

நடந்திடக் கால்கள் நமதுடல் எண்ணம்
கடந்திடும் காலமோ திண்ணம். ... 4
★
(சீர்கள் 3-3 இயைபு)
திருக்குறள் நாளும் பெருங்கு ரலானால் 
ஒருகுறை யில்லை ஒருங்கு. ... 7

மனமகி ழுந்து நனவுகள் சிந்து
தினம்கொள் கனவுகள் தேன். ... 8

முன்கைநீள முன்னம் முழுமதி தூமலரே
வன்கை குறைவாழ் மதி. ... 9

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
குறட்பா வித்தகம்: இயைபுக் குறள்
(குறள் வெண்பா)

(சீர்கள் 4-3 இயைபு)
பணம்சேர்த்து வந்த பகட்டான வாழ்வு
குணமுயர வில்லையெனில் தாழ்வு! ... 1

கடவுளாய்க் கற்சிலை கண்டால் வெறுப்பு?
கடந்தீரோ எல்லை, செருப்பு! ... 2

மதுரம் தமிழென்று வால்மீகி வாக்கு
நிதம்பயிலா தேதேதோ சாக்கு! ... 3

மழலை மிழற்றி மடியமரப் பேச்சு
கழலும் மனமெங்கோ போச்சு! ... 4

கழலிணை போற்றியே கண்ணனுருத் தொட்டு
வழுத்தினேன் என்மனம் விட்டு! ... 5

துளிர்விடும் காய்மலர்த் தோட்டமென் வீடு
நளிவுறும் ஓய்விலென் நாடு. ... 6
★
(சீர்கள் 3-3 இயைபு)
நறும்பூவில் தும்பி அரும்பு நளியும்
எறும்பூர்ந்து ஓட்டும் குறும்பு! ... 7

வண்ணத்துப் பூச்சி அமர்ந்து மலர்தேடும்
எண்ணமதை யின்றும் சுமந்து! ... 8

கன்னியவள் கண்விழிப் பூமலர்ந்து புன்னகைத்தாள்
என்னுள்ளம் தேன்பா மலர்ந்து! ... 9

நிலவியே எங்கும் நிறைந்து பிரம்மம்
பலவுரு கொள்ளும் குறைந்து. ... 10

★★★
கவிமாமணி இலந்தை இராமசாமி
(அன்புடன் இசைந்து தந்த இயைபுக் குறள்கள்)
(சீர்கள் 4-3 இயைபு)

கிழக்கு வெளுக்கக்  கிறங்கும் பொறுப்பு
முழக்கொலி சேவற் சிறப்பு. ... 1

மரக்கிளை மேலொரு மன்மதக் கூடு
சிரத்தைப் பறவையின் வீடு. ... 2

களிமகன் வார்த்தைகள் காதினுக்கு ஊறு
தெளிவுடன் சொல்கையில் வேறு. ... 3

கவிதை சிறந்திடச் சொல்க உணர்ந்து
சுவைமிகு சொற்கள் புணர்ந்து. ... 4

இலக்கியம்  நோய்தீர் இதமாம் மருந்து
நலம்தரும் நல்ல விருந்து. ... 5

மிறைப்பா  ரமணி நடத்தும் அரங்கு
சிறப்புரை நெஞ்சே நெருங்கு. ... 6

விழிகளை மூடி விமலனை வேண்டு
தொழுகையில் உன்மனம் தூண்டு. ... 7

இலந்தை

★★★★★

No comments:

Post a Comment