சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள் தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/268508533879685/
கவிஞர் சியாமளா ராஜசேகர்
வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்
அலைகளி லாடு மழகிய மீனை
வலைவீசி வாரிடநீ வா. ... 1
கைவிர லாலே கவிதை எழுதியே
மைவிழி யாளை வளை. ... 2
முழுமதி போலே முகமுடை யாளை
அழவிட லாமோ அழை. ... 3
பெரிய வுருவொடு பேரழ கான
அரிய வரிமா வது. ... 4
கருநீல மேனியனே காதலொடு பாட
வருவாயா தேடி மனை. ... 5
வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு
தனிமை யிரவு வனிதை மகிழ
இனிய கவிதை எழுது. ... 6
இரவு நிலவோ டினிய உறவு
விரிய விரிய இளகு. ... 7
★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்
நிசமா கனவா நினைவி லிலையே
வசமா மவனே விபு. ... 1
குழலி னினிய குழக னிசையே
கழலி லொலிசெ யசைவு. ... 2
அயனோ அரனோ அரியோ உளமே
பயனோ பணிவே பரவு. ... 3
வளமா நலமா வரமா வசவா
களமோ கழலே கருது... 4
உறவே இலதா உலகே களரே
பிறவா வரமே பெரிது. ... 5
★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
அழிபசி தீர அறநெறி தேறா
வழிதனை நாடுவதே னோ? ... 1 (வகை 2)
ஆடியோடி வேலையே ஆதாய மேதுமிலை
வாடிவதை யாவதே னோ? ... 2
மாறு முலகிலே மாறா ததருளிட
ஏறு மயிலேறி வா. ... 3
ஆகா மனிதா அவசர மாயழிய
போகா வழியிலே போ. ... 4
தேடி வருதுயரே தேயுமவ னாசியாலே
நாடி வருமே வழி. ... 5
★★★
கவிஞர் பாவலர் சீனி பழனி
படியுடை யேணி முடிதலை யேறா
அடிதொழு பேடி கரி. ... 1
மலையின் மகிமையால் வானிழி நீரே
குலையென வாழை வரவு. ... 2
சிலையென நாளோ செலவது தானே
நிலையெனவோ நாளிர வு. ... 3
கிழவது தானே பழகா இளமை
நிழலது காணா நிலவு. ... 4
தாயொடு பிள்ளை தலைப்படு பாசமோ
காயொடு நீடு கனி. ... 5
மரமிடை ஓரிள மானுட னோட
பரிவுடை மாமயி லாடு. ... 6
உடலு முயிறு மொருமை யுலகே
திடமு முரமுமே தேடு. ... 7
★★★
கவிஞர் குருநாதன் ரமணி
வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு
அருவி யழகு மருவு குவடு!
குருவி யழகது கூடு! ... 1
பரிதி சிகரி பரவி யொளிர
உருவி யுருவி யுறை. ... 2
[சிகரி=மலை, உருவி=பூமி, நாயுருவி]
அகட விகட மகுடி யுருள
எகிரி யெழுவ தரவு. ... 3
காசினி வாசினி ஆசினிவி லாசினி
பூசிநீ மாசிலை யே. ... 4
[ஆசினி=>வானுறைபவள், விலாசினி=ஒளிமிக்க பெண்]
வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்
நாலடி யாருள நாயக மாமணி
மேலடி யாருள மே! ... 5
குகனே முருகா குமரா விசாகா
அகமே றியெனை யணை! ... 6
உளதோ இலதோ உறவோ தனியோ
வளமோ வறிதோ வழி! ... 7
ஓதுமறை நாயகனே ஊனமிலி யேயெனது
வாதுமன மாயையறு வா! ... 8
மலையி லருவி மறையு மழகு
விலையி லதனை விழை! ... 9
உடலி லுயிரென வோடு மிறையே!
மடமா மனமே வளை! ... 10
★★★
கவிஞர் திசேசு
உரலுறு கோலென வாட லொழிய
அரனது பாத மடை. ... 1
பணம தழகோ பயனோ மனைவி
குணமது கூடா வழி. ... 2
ஆதி சிவனுடை பாதியினை நாடுவதே
வேதநெறி கூறு மொழி. ... 3
எதுஇனிது யாழோ தமிழோ வினவு
மதுமழலை கேளாத காது. ... 4
கணநா தனடிதொழ ஏனோ கவலை
வினைதீ ரவழிலையே வேறு. ... 5
உளதா யுணர உளதது மாறி
இலதா யுளது மது. ... 6
★★★★★
No comments:
Post a Comment