Monday, November 26, 2018

பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/268508533879685/
கவிஞர் சியாமளா ராஜசேகர்
வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்

அலைகளி லாடு மழகிய மீனை 
வலைவீசி வாரிடநீ வா. ... 1

கைவிர லாலே கவிதை எழுதியே 
மைவிழி யாளை வளை. ... 2

முழுமதி போலே முகமுடை யாளை
அழவிட லாமோ அழை. ... 3

பெரிய வுருவொடு பேரழ கான
அரிய வரிமா வது. ... 4

கருநீல மேனியனே காதலொடு பாட 
வருவாயா தேடி மனை. ... 5

வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு

தனிமை யிரவு வனிதை மகிழ
இனிய கவிதை எழுது. ... 6

இரவு நிலவோ டினிய உறவு
விரிய விரிய இளகு. ... 7

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன் 

நிசமா கனவா நினைவி லிலையே 
வசமா மவனே விபு. ... 1

குழலி னினிய குழக னிசையே 
கழலி லொலிசெ யசைவு. ... 2

அயனோ அரனோ அரியோ உளமே
பயனோ பணிவே பரவு. ... 3

வளமா நலமா வரமா வசவா 
களமோ கழலே கருது... 4

உறவே இலதா உலகே களரே 
பிறவா வரமே பெரிது. ... 5

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன் 

அழிபசி தீர அறநெறி தேறா
வழிதனை நாடுவதே னோ? ... 1 (வகை 2)

ஆடியோடி வேலையே ஆதாய மேதுமிலை 
வாடிவதை யாவதே னோ? ... 2

மாறு முலகிலே மாறா ததருளிட
ஏறு மயிலேறி வா. ... 3

ஆகா மனிதா அவசர மாயழிய
போகா வழியிலே  போ. ... 4

தேடி வருதுயரே தேயுமவ னாசியாலே
நாடி வருமே வழி. ... 5

★★★
கவிஞர் பாவலர் சீனி பழனி 

படியுடை யேணி முடிதலை யேறா
அடிதொழு பேடி கரி. ... 1

மலையின் மகிமையால் வானிழி நீரே
குலையென வாழை வரவு. ... 2

சிலையென நாளோ செலவது தானே
நிலையெனவோ நாளிர வு. ... 3

கிழவது தானே பழகா இளமை
நிழலது காணா நிலவு. ... 4

தாயொடு பிள்ளை தலைப்படு பாசமோ
காயொடு நீடு கனி. ... 5

மரமிடை ஓரிள மானுட னோட
பரிவுடை மாமயி லாடு. ... 6

உடலு முயிறு மொருமை யுலகே
திடமு முரமுமே தேடு. ... 7

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு

அருவி யழகு மருவு குவடு!
குருவி யழகது கூடு! ... 1

பரிதி சிகரி பரவி யொளிர
உருவி யுருவி யுறை. ... 2
[சிகரி=மலை, உருவி=பூமி, நாயுருவி]

அகட விகட மகுடி யுருள
எகிரி யெழுவ தரவு. ... 3

காசினி வாசினி ஆசினிவி லாசினி
பூசிநீ மாசிலை யே. ... 4
[ஆசினி=>வானுறைபவள், விலாசினி=ஒளிமிக்க பெண்]

வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்

நாலடி யாருள நாயக மாமணி
மேலடி யாருள மே! ... 5

குகனே முருகா குமரா விசாகா
அகமே றியெனை யணை! ... 6

உளதோ இலதோ உறவோ தனியோ
வளமோ வறிதோ வழி! ... 7

ஓதுமறை நாயகனே ஊனமிலி யேயெனது
வாதுமன மாயையறு வா! ... 8

மலையி லருவி மறையு மழகு
விலையி லதனை விழை! ... 9

உடலி லுயிரென வோடு மிறையே!
மடமா மனமே வளை! ... 10

★★★
கவிஞர் திசேசு

உரலுறு கோலென வாட லொழிய
அரனது பாத மடை. ... 1

பணம தழகோ பயனோ மனைவி
குணமது கூடா வழி. ... 2

ஆதி சிவனுடை பாதியினை நாடுவதே
வேதநெறி கூறு மொழி. ... 3

எதுஇனிது யாழோ தமிழோ வினவு
மதுமழலை கேளாத காது. ... 4

கணநா தனடிதொழ ஏனோ கவலை
வினைதீ ரவழிலையே வேறு. ... 5

உளதா யுணர உளதது மாறி
இலதா யுளது மது. ... 6

★★★★★

No comments:

Post a Comment