சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/219278442136028
தொ.001. இராமசாமி வெங்கடராமன் (88888 54/55)
பாக்கைச் சவைத்துப் பசிமறக்கு மெங்களின்
நாக்கிற் கதுவேதான் காப்பு. ... 1
மாசி குளிர மழையாம் மனமுருகி
யாசிக்கக் காத்திடுசா மி. ... 2
(மாசி= மேகம்).
ராதாதா னென்றும் ரமணீய மாய்மனதில்
ஆதார மாயொளிர்தா ரா. ... 3
கருப்புட லாயி னகத்தினில் வெண்மை
இருந்திடக் காணும் ரகு. ... 4
விசாகனைப் பாட வினைபொசுங்கும் தந்தை
அசோகனைச் சுட்ட சிவா. ... 5
(அசோகன் = மன்மதன்).
★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (88888 54/55)
வகைவகையாய் தின்பண்டம் வாய்க்குச் சுவையாய்
நகையணியோ பல்மணிக்க வை. ... 1
கதைவிடு தூதினில் காட்டா எழில்நலம்
ததைபட தேருந் தகை. ... 2
(தகை – அழகு. ததை – நிறைத்தல்)
கோதை குரலழகே கோதில் மயிலகவே
ஓதை ஒளிரிளந் தோகை. ... 3
காவுதடி கொண்டோடி காட்டுமா கொன்றதுவே
கோவலர் தோள்வலை வாகு. ... 4
(வலைவாகு – வாகுவலையம்)
நதிபதி மாந்தர் நதிமணல் கொண்டார்
அதிபுகழ் வாழ்நாள் நிதி. ... 5
★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்
கதைத்து மனமுருகக் காதல் மொழியால்
விதைத்த கவிதை தகைத்து. ... 1
நயந்து சுமக்கிறான் நாயகனாம் மாலை
வியந்து பணியும் அனந்து. ... 2
வேதுதந்து காத்திடுவான் வேதமுதல் நாயகன்
தீதொழிந்ந வண்பரமாம் தேவு. ... 3
ரகம்ரகமாய்ச் சேலைகள் பாஞ்சாலி காக்க
அகம்குளிரத் தந்த கரம். ... 4
கருமுகிற் கண்ணனே காகுத்த னாக
மறுயுகத தோன்றல் ரகு. ... 5
சரித்தும் அசைத்தும் சதிராடி உள்ளம்
வரித்து மகிழ்வார் ரசித்து. ... 6
காத்து வழி்போகாக் கார்க்பந்தைச் சக்தியுடன்
சாத்து விசையோடு தாக்கு. ... 7
சீவு தலைமுடி சேராது வீழ்ந்தாலோ
கூவாது தூக்கியதை வீசு. ... 8
தேசு படைத்த திரேதா இராமனாம்
ஈசன் படைத்ததே சேது. ... 9
உதைத்தபெருந் தூணில் உதித்தௌணன் தன்னை
வதைத்தததச் சீயம் துவைத்து. ... 10
★★★
நி1. குருநாதன் ரமணி
ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1
ரோம்நாட்டில் அன்று ரொட்டியே சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2
ரவைதரும் உப்புமா ராத்திரிக்குச் சட்னி
சுவைப்போமே உள்ள வரை! ... 3
வார்த்திகம் எய்தியதில் வற்றி உருமாறி
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4
குச்சுவீட்டில் ஏது குளம்பியாய்? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5
[குளம்பி = காப்பி]
தலாரூபாய் நூறுதரத் தன்பங்கு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6
சாவுபல தீவிபத்தில் சாவுற்றோர் மத்தியில்
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7
காத்துப் பயனில்லை கல்நெஞ்சன் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8
தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9
தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த,
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10
★★★★★
No comments:
Post a Comment