Wednesday, November 7, 2018

பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/219278442136028
தொ.001. இராமசாமி வெங்கடராமன் (88888 54/55)

பாக்கைச் சவைத்துப் பசிமறக்கு மெங்களின்
நாக்கிற் கதுவேதான் காப்பு. ... 1

மாசி குளிர மழையாம் மனமுருகி
யாசிக்கக் காத்திடுசா மி. ... 2
(மாசி= மேகம்).

ராதாதா னென்றும் ரமணீய  மாய்மனதில்
ஆதார மாயொளிர்தா ரா. ... 3

கருப்புட லாயி னகத்தினில் வெண்மை
இருந்திடக் காணும் ரகு. ... 4

விசாகனைப் பாட வினைபொசுங்கும் தந்தை
அசோகனைச் சுட்ட சிவா. ... 5
(அசோகன் = மன்மதன்).

★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (88888 54/55)

வகைவகையாய் தின்பண்டம் வாய்க்குச் சுவையாய்
நகையணியோ பல்மணிக்க வை.  ... 1

கதைவிடு தூதினில் காட்டா எழில்நலம்
ததைபட தேருந் தகை. ... 2
(தகை – அழகு. ததை – நிறைத்தல்)

கோதை குரலழகே கோதில் மயிலகவே
ஓதை ஒளிரிளந் தோகை. ... 3

காவுதடி கொண்டோடி காட்டுமா கொன்றதுவே
கோவலர் தோள்வலை வாகு. ... 4
(வலைவாகு – வாகுவலையம்)

நதிபதி மாந்தர் நதிமணல் கொண்டார் 
அதிபுகழ் வாழ்நாள் நிதி. ... 5

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்

கதைத்து மனமுருகக் காதல் மொழியால் 
விதைத்த கவிதை தகைத்து. ... 1

நயந்து சுமக்கிறான் நாயகனாம் மாலை 
வியந்து பணியும் அனந்து. ... 2

வேதுதந்து காத்திடுவான் வேதமுதல் நாயகன் 
தீதொழிந்ந வண்பரமாம் தேவு. ... 3

ரகம்ரகமாய்ச் சேலைகள் பாஞ்சாலி காக்க 
அகம்குளிரத் தந்த கரம். ... 4

கருமுகிற் கண்ணனே காகுத்த னாக 
மறுயுகத தோன்றல் ரகு. ... 5

சரித்தும் அசைத்தும் சதிராடி உள்ளம் 
வரித்து மகிழ்வார் ரசித்து. ... 6

காத்து வழி்போகாக் கார்க்பந்தைச் சக்தியுடன் 
சாத்து விசையோடு தாக்கு. ... 7

சீவு தலைமுடி சேராது வீழ்ந்தாலோ 
கூவாது தூக்கியதை வீசு. ... 8

தேசு படைத்த திரேதா இராமனாம் 
ஈசன் படைத்ததே சேது. ... 9

உதைத்தபெருந் தூணில் உதித்தௌணன் தன்னை 
வதைத்தததச் சீயம் துவைத்து. ... 10

★★★
நி1. குருநாதன் ரமணி

ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1

ரோம்நாட்டில் அன்று ரொட்டியே சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2

ரவைதரும் உப்புமா ராத்திரிக்குச் சட்னி
சுவைப்போமே உள்ள வரை! ... 3

வார்த்திகம் எய்தியதில் வற்றி உருமாறி
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4

குச்சுவீட்டில் ஏது குளம்பியாய்? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5
[குளம்பி = காப்பி]

தலாரூபாய் நூறுதரத் தன்பங்கு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6

சாவுபல தீவிபத்தில் சாவுற்றோர் மத்தியில்
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7

காத்துப் பயனில்லை கல்நெஞ்சன் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8

தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9

தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த,
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10

★★★★★

No comments:

Post a Comment