சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன் தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/239587280105144/
தொ.001. இராமசாமி வெங்கடராமன் (88888 53/55)
ஆறுதல் சொல்வதால் ஆவதென் தேறுதலில்
மாறுமோ பெற்றமதிப் பாறு. ... 1
அரங்கம் வருதல் அடுக்குமோ வீட்டார்
இரவினின் அந்தரங் கம். ... 2
மாறு முலகினில் மாறாநல் மாந்தருக்
கூறெண்ண லாகாக்கைம் மாறு. ... 3
வேழம் ஒலிகுழல் மேவுமிசை போல்நாங்கள்
வாழச்செய் வோன்முகம்வே ழம். ... 4
சிவத்தை விரும்பிடும் சீலராய் வாழ
உவகையாய்க் கூடும் சிவம். ... 5
★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (88888 52/55)
படிபடியாய் முன்னேறப் பாடுபடு வோனே
படித்திடு வான்தினப்ப டி. ... 1
மலர்க்கண் மடந்தை மகிழ்மனச் சிந்தை
மலர்வணம் மாளிகைக் கண். ... 2
மாவட்டம் தோறும் மகளிர்ச் சேர்ந்திட
மாவிட்டுப் பூசை மா. ... 3 (விலங்குப் பூஜை).
திருமணப் பெண்டிர் பெருமகன் வீடு
தெருவினில் பூந்தேர் மணம். ... 4
திருமுறை வாணர் பெரும்புகழ் பின்தேர்
ஒருகுர வைப்பா முறை. ... 5
★★★
நி1. குருநாதன் ரமணி
நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு. ... 1
கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு. ... 2
உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு? ... 3
குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி. ... 4
படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி. ... 5
தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர். ... 6
தலைப்பறி விக்கவே தான்பாட நின்றாள்
கலையின்கை சேலைத் தலைப்பு. ... 7
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]
கதையால் கயவனின் கால்வீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை. ... 8
மாடுமீ தேறி வலம்வரும் அத்தனுக்குக்
காடாக வோர்சடைச்சும் மாடு. ... 9
ஆடு புலிபார்க்க அத்தனே தில்லைவனக்
காடுயர் அம்பலத்தே ஆடு. ... 10
★★★★★
No comments:
Post a Comment