Wednesday, October 24, 2018

பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/239587280105144/
தொ.001. இராமசாமி வெங்கடராமன் (88888 53/55)

ஆறுதல் சொல்வதால் ஆவதென்  தேறுதலில்
மாறுமோ பெற்றமதிப் பாறு. ... 1

அரங்கம் வருதல் அடுக்குமோ வீட்டார்
இரவினின் அந்தரங் கம். ... 2

மாறு முலகினில் மாறாநல் மாந்தருக்
கூறெண்ண லாகாக்கைம் மாறு. ... 3

வேழம் ஒலிகுழல் மேவுமிசை போல்நாங்கள்
வாழச்செய் வோன்முகம்வே ழம். ... 4

சிவத்தை விரும்பிடும் சீலராய் வாழ 
உவகையாய்க் கூடும் சிவம். ... 5

★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (88888 52/55)

படிபடியாய் முன்னேறப் பாடுபடு வோனே
படித்திடு வான்தினப்ப டி.  ... 1

மலர்க்கண் மடந்தை மகிழ்மனச் சிந்தை
மலர்வணம் மாளிகைக் கண். ... 2

மாவட்டம் தோறும் மகளிர்ச் சேர்ந்திட
மாவிட்டுப் பூசை மா. ... 3 (விலங்குப் பூஜை).

திருமணப் பெண்டிர் பெருமகன் வீடு
தெருவினில் பூந்தேர் மணம். ... 4

திருமுறை வாணர் பெரும்புகழ் பின்தேர்
ஒருகுர வைப்பா முறை. ... 5

★★★
நி1. குருநாதன் ரமணி

நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு. ... 1

கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு. ... 2

உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு? ... 3

குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி. ... 4

படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி. ... 5

தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர். ... 6

தலைப்பறி விக்கவே தான்பாட நின்றாள்
கலையின்கை சேலைத் தலைப்பு. ... 7
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]

கதையால் கயவனின் கால்வீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை. ... 8

மாடுமீ தேறி வலம்வரும் அத்தனுக்குக்
காடாக வோர்சடைச்சும் மாடு. ... 9

ஆடு புலிபார்க்க அத்தனே தில்லைவனக்
காடுயர் அம்பலத்தே ஆடு. ... 10

★★★★★

No comments:

Post a Comment