Sunday, October 7, 2018

திருக்குறள் செய்தித் திரட்டு 004.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

திருக்குறள் செய்தித் திரட்டு 004.

திருக்குறள் யாப்பமைதி

(மு.வரதராசனார் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து, சென்னைப் 
பல்கலைக் கழகம் 1971-இல் வெளியிட்ட திருக்குறள் ஆராய்ச்சி 
நூல்களில் மு.சண்முகம் பிள்ளை எழுதிய நூலிலிருந்து)

* செப்பலோசை
.. வெண்சீர் மட்டும் வரும் ஏந்திசைச் செப்பல்:
.. "யாதானு நாடாமால்" (குறள் 397) மட்டுமே.
.. 12, 110, 735, 758 எண்களுள்ள
.. குறட்பாக்களில் இயற்சீர் ஒன்று மட்டுமே.
..
.. இயற்சீர் மட்டும் வரும் தூங்கிசைச் செப்பல்:
.. 110 குறட்பாக்கள்.
..
.. இரண்டு தளைகளும் விரவும் ஒழுகிசைச் செப்பல்:
.. மீதமுள்ள 1219 குறட்பாக்களும்.
.. முதற் குறளில் ஒரேயொரு வெண்சீரே.

* எதுகை விகற்பம்
.. ஒரு விகற்பக் குறட்பாக்கள்: 899
.. ஒரு விகற்பக் குறள் ஒரூஉ எதுகையுடன்: 68
.. இரு விகற்பக் குறட்பாக்கள்: 431
.. இரு விகற்பக் குறள் ஒரூ எதுகை பெறாதவை: 21
.. முதலடியில் பொழிப்பெதுகை: 12
.. இரண்டாம் அடியில் பொழிப்பெதுகை:  4
.. ஒரூஉ எதுகை:  438
.. முற்றெதுகை:  6

* போலி எழுத்தெதுகை
.. வையத்துள் - தெய்வத்துள் (குறள் 90)
.. ஐயுணர் - மெய்யுணர் (குறள் 354)

.. செய்யாமற் - வையகமும் (குறள் 101)
.. பொய்படு - கையறியாப் (குறள் 836)

* மோனை
.. சீர்கள் நான்கு-ஐந்தில் மோனை: 254
.. ஈரடிகளிலும் பொழிப்பு மோனை:  14
.. முதலடியில் மட்டும் பொழிப்பு மோனை:  192
.. இரண்டாம் அடியில் மட்டும் பொழிப்பு மோனை:  59
.. ஒரூஉ மோனை:  75
.. முற்று மோனை, முதலடி:  20

* மற்ற தொடைகள்
.. பொழிப்பு முரண், முதலடி:  14
.. ஒரூஉ முரண்:  23

.. புலவர் குழந்தை காட்டும் செந்தொடை
.. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
.. நிலத்தறைந்தான் கைப்பிழையா தற்று. ... 307

திருக்குறள் யாப்பு வண்ணம்
* முன்னிலை
.. நாலடியார், பழமொழி நூல்களில் உள்ளன போன்று,
.. ஆண்மகனை விளித்துப் பாடும் ஆடூஉ முன்னிலையும்
.. பெண்மகளை விளைத்துப் பாடும் மகடூஉ முன்னிலையும்
.. திருக்குறளில் இல்லை.

* பாநடை
.. வெண்பா அளவடியில் பொழிப்பு மோனை வரின், அதுவே சிறப்பு.
.. அஃதின்றி ஒரூஉ எதுகை வரின், இதுவே சிறப்பு.
.. திருக்குறள் முதலடிகளில்
.. ஏதேனும் வகையில் தொடை சிறக்கக் காணலாம்.
..
.. குறளைப் படிக்கும் போது, சீர்களில் நிறுத்தி
.. மோனையில் எடுப்பாகவும்
.. எதுகையில் அழுத்தமாகவும் படிக்கவேண்டும்.
.. தொடையமைப்பிற் கேற்ப, அடிகளில்
.. எடுத்தும் படுத்தும் அழுத்தமாகவும் மெதுவாகவும் 
.. படித்தால் திருக்குறள்,
.. பிள்ளைப் பெருமாளையங்கார் எனும் 
.. அழகிய மணவாள தாசரின் பாடல்கள்போல்
..
.. சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும்
.. எந்நோக்கும் காண இலக்கியம் ஆவது -- காளலாம்.

★★★★★

No comments:

Post a Comment