Monday, October 8, 2018

பயிலிழை குவெ.04. வித்தகம்: முதல் பிறழ் முடிவு தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.04. வித்தகம்: முதல் பிறழ் முடிவு தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/236260860437786/
பா.036. புனிதா கணேசன் (87778 44/55)

புன்னகை பூத்திடப் புத்திரர் செய்திடும் 
புன்மை பொறுக்குந்தா யன்பு. ... 1

குலவும் கனிவால் குழவி யழுகை 
பலபோக் கிடுந்தா யுலகு. ... 2

சுலாவுங் கொடுத்தாளைச் சூழ்ச்சியால் மைந்தர்
விவாதம் புரிந்திடி லாசு. ... 3

தாதாவின் செம்மையே தந்திடு சண்முகனே 
மாதாவின் மாண்புந்தா தா. ... 4

சுகானுப வந்தருஞ் சூல்தாங்குந் தாய்க்குத் 
தகாதது நீதருங் காசு. ... 5

★★★
02. தொ.001. இராமசாமி வெங்கடராமன் (87777 47/55)

குருவின் அருளால் குறைவிலா வாழ்வு
செருக்கு மிகுந்தால் சருகு. ... 1

குடநீரில் ஓட்டக் குழந்தை அழுமாம்
படத்தில் வரைந்த படகு. ... 2

திருமாலின் நாமம் தினந்தோறும் சொன்னால்
அருள்தரு வார்மா ருதி. ... 3

கானக வாழ்வு கசக்க மனதிலே 
மோனமாய் வந்தகன கா. ... 4

குலவி யிருந்து குழப்பிட வேண்டுமோ
வீண்சண்டை வேண்டாம் விலகு. ... 5

★★★
பா.065. Ngs (78888 53/55)

குலவி மகிழவே கூப்பிடும் மூடா !
கலவி விரும்பேன் விலகு. ... 1

குருதி வராமல் குழந்தையின் காதில்
சுருதி நுழைத்தாள் திருகு. ... 2

துருவி வினாஎழுப்பும் தோகையிவள் ஆற்றல்
கருதி அளித்தார் விருது. ... 3

குரவ ருரைத்திட்டார் கொள்ளேன் உணவில் 
விரதத் தினத்தில் வரகு. ... 4

வாழவா சாகவா வஞ்சிகேட்டாள் நானுரைத்தேன்
தோழனாய் ஏற்றுவாழ வா. ... 5

★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (77777 46/55)

விகட மனத்தர் அகடம் கணிக்க
நகுமதி வீரக் கவி – 1

வசம்புடன் சுக்கு மிளகென நாளும்
நசித்திட நாமே சவம் – 2

தமிழில் குறள்நெறி தந்தார் எமக்கு
இமய மெனயின் பமிதம் – 3

மிருகம் அறியா நரகம் படைப்பார்
உருமி உதவாக் கருமி - 4

பசும்பாலின் மேன்மை பருகிட நன்மை
பசித்தே புசிக்கச் சுபம் - 5

★★★
நி1. குருநாதன் ரமணி

தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
ஆத்தா தடியெடுத் தா. ... 1

வாசிவாசி யென்று மனதில் முணுமுணுத்தால்
பேசுமொழி யாகும் சிவா. ... 2.

சுவாசப் பயிற்சி சுகம்கண்டு உள்ளம் 
சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3

சுகாதாரம் சிங்காரம் துய்பொருள் அல்ல
விகாரம் விளைப்பதே காசு. ... 4

வாசிக்கப் பேப்பரை மனசாரத் தந்திலன்
ஓசியா என்றான் சிவா. ... 5

புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
தன்னல மில்லாத அன்பு. ... 6

திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
உறவாவார் பார்த்’சா ரதி. ... 7

புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
அறியுமோ வாழ்வில் இரிபு? ... 8
[இரிபு=தோல்வி, வெறுப்பு]

குலவும் கலியில் குலுக்கிக் களித்துப்
பலவிதமாய் வாழும் உலகு. ... 9

விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
நிரல்களைச் செய்தார் ரவி. ... 10
[தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்]

★★★★★

No comments:

Post a Comment