சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.04. வித்தகம்: முதல் பிறழ் முடிவு தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/236260860437786/
பா.036. புனிதா கணேசன் (87778 44/55)
புன்னகை பூத்திடப் புத்திரர் செய்திடும்
புன்மை பொறுக்குந்தா யன்பு. ... 1
குலவும் கனிவால் குழவி யழுகை
பலபோக் கிடுந்தா யுலகு. ... 2
சுலாவுங் கொடுத்தாளைச் சூழ்ச்சியால் மைந்தர்
விவாதம் புரிந்திடி லாசு. ... 3
தாதாவின் செம்மையே தந்திடு சண்முகனே
மாதாவின் மாண்புந்தா தா. ... 4
சுகானுப வந்தருஞ் சூல்தாங்குந் தாய்க்குத்
தகாதது நீதருங் காசு. ... 5
★★★
02. தொ.001. இராமசாமி வெங்கடராமன் (87777 47/55)
குருவின் அருளால் குறைவிலா வாழ்வு
செருக்கு மிகுந்தால் சருகு. ... 1
குடநீரில் ஓட்டக் குழந்தை அழுமாம்
படத்தில் வரைந்த படகு. ... 2
திருமாலின் நாமம் தினந்தோறும் சொன்னால்
அருள்தரு வார்மா ருதி. ... 3
கானக வாழ்வு கசக்க மனதிலே
மோனமாய் வந்தகன கா. ... 4
குலவி யிருந்து குழப்பிட வேண்டுமோ
வீண்சண்டை வேண்டாம் விலகு. ... 5
★★★
பா.065. Ngs (78888 53/55)
குலவி மகிழவே கூப்பிடும் மூடா !
கலவி விரும்பேன் விலகு. ... 1
குருதி வராமல் குழந்தையின் காதில்
சுருதி நுழைத்தாள் திருகு. ... 2
துருவி வினாஎழுப்பும் தோகையிவள் ஆற்றல்
கருதி அளித்தார் விருது. ... 3
குரவ ருரைத்திட்டார் கொள்ளேன் உணவில்
விரதத் தினத்தில் வரகு. ... 4
வாழவா சாகவா வஞ்சிகேட்டாள் நானுரைத்தேன்
தோழனாய் ஏற்றுவாழ வா. ... 5
★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (77777 46/55)
விகட மனத்தர் அகடம் கணிக்க
நகுமதி வீரக் கவி – 1
வசம்புடன் சுக்கு மிளகென நாளும்
நசித்திட நாமே சவம் – 2
தமிழில் குறள்நெறி தந்தார் எமக்கு
இமய மெனயின் பமிதம் – 3
மிருகம் அறியா நரகம் படைப்பார்
உருமி உதவாக் கருமி - 4
பசும்பாலின் மேன்மை பருகிட நன்மை
பசித்தே புசிக்கச் சுபம் - 5
★★★
நி1. குருநாதன் ரமணி
தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
ஆத்தா தடியெடுத் தா. ... 1
வாசிவாசி யென்று மனதில் முணுமுணுத்தால்
பேசுமொழி யாகும் சிவா. ... 2.
சுவாசப் பயிற்சி சுகம்கண்டு உள்ளம்
சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3
சுகாதாரம் சிங்காரம் துய்பொருள் அல்ல
விகாரம் விளைப்பதே காசு. ... 4
வாசிக்கப் பேப்பரை மனசாரத் தந்திலன்
ஓசியா என்றான் சிவா. ... 5
புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
தன்னல மில்லாத அன்பு. ... 6
திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
உறவாவார் பார்த்’சா ரதி. ... 7
புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
அறியுமோ வாழ்வில் இரிபு? ... 8
[இரிபு=தோல்வி, வெறுப்பு]
குலவும் கலியில் குலுக்கிக் களித்துப்
பலவிதமாய் வாழும் உலகு. ... 9
விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
நிரல்களைச் செய்தார் ரவி. ... 10
[தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்]
★★★★★
No comments:
Post a Comment