சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
02. சிந்தியல் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை சிவெ.03. ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா: தனிச்சொல் இன்றி
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/327682967962241/
நினைவிற் கொணர
ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பாவில்
.. மூன்று அடிகளுக்கும் ஒரே எதுகை (ஒரு விகற்பம்).
.. இரண்டாம் அடியில் சீர்கள் 1-4-இல் வரும்
.. ஒரூஉ எதுகை பெற்ற தனிச்சொல்.
.. அடிகளில் பொழிப்பு மோனை அமைதல் மரபு.
பயிலிழை சிவெ.03. ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா: தனிச்சொல் இன்றி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: இன்னிசைச் சிந்தியல் வெண்பா
விரும்பும் பாடுபொருள்களில்
.. பொருளுக் கொன்றாக, புதிதாக,
.. மொத்தம் ஐந்து (5)
.. தனிச்சொல் இல்லாத
.. ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா
.. புனைந்தெழுதுவோம்.
தொகுப்பு
30/11/2018 இரவு வரை வரும் பதிவுகளில்
.. தேர்வுபெற்றவை தொகுக்கப்பட்டுக்
.. குழுமத்தில் பின்னர் வெளியிடப்படும்.
*****
அடியேன் பங்காக
(தனிச்சொல் அற்ற ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உணவு
வற்றல் குழம்புடன் வட்டில் சுடுசோறு
குற்றிக் கரம்பிசைந்தே கொண்டோர் கவளத்தைப்
பற்சுவைக்கத் தீரும் பசி.
கவிதை
எண்ணம் மொழியாக ஏதோ குறைதெரியும்
வண்ணம் ஒலியும் வளம்பொருளும் கொண்டாலும்
நண்ணியது காணா நலிவு.
காலம்
நேற்றெல்லம் உள்ளே நினைவாகும் இன்றெனத்
தேற்றுவதும் போமே தெளியாதே நாளையும்
காற்றாய்ப் பறந்திடும் கால்.
குடும்பம்
கூட்டுக் குடும்பம் குலைத்தே இருவரும்தம்
வீட்டுக் குடும்பமாய் வெல்லப் பணத்தாசை
ஆட்டு குடும்பமென் றாம்.
பேச்சு
மூச்சைத் தடைசெய் மொழியதுவே வாயுறும்
பேச்சாகும் அஃது பெருகினால் உள்ளத்தின்
வீச்சைக் குறைக்கும் விழல்.
--குருநாதன் ரமணி
★★★★★
No comments:
Post a Comment