சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.20. மிறைக்கவி வகைக்குறள்: நிரோட்டியம் தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/332692777461260/
தொ.002. பாவலர் சீனி பழனி
(மிறைப்பா: நிரோட்டியக் குறள் வெண்பா)
ஏழைக ளில்லினில் இல்லை இலக்கியங்கள்
ஆழி அதிஞானந் தான் . ... 1
ஏணியெண் திக்கினில் ஈகை யிருகைகள்
கேணி யிறைநீரோ கேள். ... 2
ஆற்றங் கரையில் அரிநெற் கதிர்களை
ஆற்றுஞ் செயலழ கே. ... 3
இசையினில் எண்டிசை யீகை யெதிரே
யிசைதலில் கச்சிடைக் கண். ... 4
ஏதிலி யீர்காள் எருதாய் இயக்குதற்
காதல் அனைத்தே அறன். ... 5
★★★
கவிஞர் குருநாதன் ரமணி
(மிறைப்பா: நிரோட்டியக் குறள் வெண்பா)
சர்பத்
கடைதன்னில் தண்டேன் கனிச்சா றிறக்க
நடையிற் செறிந்த நசை. ... 1
கழுதை
காள்காள் எனநால் கரங்கள் கதறலில்!
ஆளில்லாச் சாலை யனல்! ... 2
[கரம் = கழுதை]
சீட்டு
சீட்டாட்டக் கச்சேரித் திண்ணையினி யில்லையென்றாள்
கேட்ட கணத்தில் கிலி. ... 3
கன்னி
கன்னி கலியாணக் காலங் கடந்தனள்
தன்நிலை யானாள் தனி. ... 4
கதகளி
இதழியை யாதே யெழுதினாள் நெஞ்சில்
கதகளி யாட்டக் கனி. ... 5
★★★★★
No comments:
Post a Comment