சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
திருக்குறள் செய்தித் திரட்டு 003.
பயிற்சி 3.16. திருக்குறளில் தாவரங்கள்
திருக்குறளில் காணும் மலர், விதை, மரம், கனி வகைகள் இவை:
.. அனிச்ச்ம் 4 குறட்பாக்கள்
.. குவளை 1 குறட்பா
.. தினை 4 குறட்பாக்கள்
.. குன்றிமணி 2 குறட்பா
.. பனை 3 குறட்பாக்கள்
.. மூங்கில் 2 குறட்பாக்கள்
.. நெருஞ்சி 1 குறட்பா
.. ஆக மொத்தம் 17 குறட்பாக்கள்.
இந்தப் பதினேழு குறட்பாக்களையும் கண்டறிந்து
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுவோம்.
மலர்: அனிச்சம் (4)
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. ... 90
நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு
மென்னீரள் யாம்வீழ் பவள். ... 1111
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. ... 1115
அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம். ... 1120
***
மலர்: குவளை (1)
காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு
மாணிழை கண்ணெவ்வே மென்று. ... 1114
***
விதை: தினை (4)
தினைத்துணை நன்றி செயெனும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார். ... 104
எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல். ... 144
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். ... 433
தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங்
காம நிறைய வரின். ... 1282
***
விதை: குன்றிமணி (குன்றி) (2)
புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து. ... 277
குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின். ... 965
***
மரம்: பனை (3)
தினைத்துணை நன்றி செயெனும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார். ... 104
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். ... 433
தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங்
காம நிறைய வரின். ... 1282
***
மரம்: மூங்கில் (வேய்) (2)
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர். ... 66
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. ... 1113
***
கனி (நெருஞ்சி) (1)
அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம். ... 1120
*****
No comments:
Post a Comment