சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.01. திருக்குறள் துதிகுறள்
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/207408699989669/
குறள் வெண்பா என்றேலே நினைவில் குதித்தெழுவது
.. வள்ளுவரின் திருக்குறள் தானே!
.. எனவே நம் முதற் பயிலரங்கத்தில்
.. திருக்குறளைப் போற்றும் துதிகுறள் எழுதுவோம்.
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
திருக்குறளின் பெருமையை
.. நாம் அவரவர் அறிந்த வரையில் சொல்வதால்
.. பாடல் மதிப்பீடோ புள்ளிகளோ இல்லை.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.
ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.
பயிலிழை குவெ.01. திருக்குறள் துதிகுறள்
பாடுபொருள்: திருக்குறள் பெருமை
பாவகை: குறள் வெண்பா
திருக்குறளின் பெருமையைப் போற்றி
.. ஒரு விகற்பத்தில் (இரண்டடிக்கும் ஓரெதுகை) அமையுமாறும்
.. அடிதோறும் பொழிப்பு மோனை அமைத்தும்
.. குறள் வெண்பாக்கள் ஐந்து புனைவோம்.
தொகுப்பு
28/04/2018 இரவு வரை வரும் பதிவுகளில்
.. தேர்வுபெற்றவை தொகுக்கப்பட்டுக்
.. குழுமத்தில் பின்னர் வெளியிடப்படும்.
அடியேன் பங்காக
வாமனர் வள்ளுவர்!
(குறள் வெண்பா)
(திருக்குறள்: துதிகுறள்)
அறத்தால் வரும்பொருளால் ஆமின்பம் துய்க்கும்
நெறிதரும்நூல் நிற்கும் நிலைத்து. ... 1
தினைத்துணை யாம்குறள்சொல் தீதுநன்று காணப்
பனைத்துணை யாகும் பயன். ... 2
தேவராம் நாயனார் தெய்வப் புலவர்சொல்
யாவர்க்கும் வேதமென வாம். ... 3
அடிமூன்றால் வாமனன் ஆள்மூ வுலகும்
அடியிரண்டில் ஆள்குற ளாம். ... 4
நால்வருணத் தாரும்கொள் நல்லறம் தந்துமுப்
பால்வண்ணம் காட்டும் பரம். ... 5
--குருநாதன் ரமணி, 14/04/2018
★★★★★
No comments:
Post a Comment