சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
திருக்குறள் செய்தித் திரட்டு 001.
திருவள்ளுவர் பெயர்களும், முதலில் அவற்றைத் தந்தவர்களும்
* தேவர்
.. செயிர்க் காவியார் மகனார் சாத்தனார்,
.. ஆலங்குடி வங்கனார், ஔவையார் (நல்வழி)
* நாயனார்
.. சைவர்கள் தந்த பட்டப்பெயர்
* தெய்வப் புலவர்
.. அசரீரி, கீரந்தையார், தேனிக்குடிக் கீரனார்
.. ஆகிய புலவர்கள் ’தெய்வத் திருவள்ளுவர்’
.. என்ற அடைமொழியைப் பயன்படுத்தியுள்ளர்.
* செந்நாப் போதார்
.. நல்கூர் வேள்வியார்
* பெருநாவலர்
* பொய்யில் புலவர்
* பொய்யாமொழிப் புலவர்
.. திருவள்ளுவர் மொழிந்த பொய்யாமொழி--வெள்ளி வீதியார்
* மாதானுபங்கி
.. நல்கூர் வேள்வியார்
* முதற்பாவலர்
.. ஆசிரியர் நல்லந்துவனார்
திருக்குறள் பெயர்களும், முதலில் அவற்றைத் தந்தவர்களும்
* உத்தரவேதம்
* பொய்யாமொழி
.. வெள்ளி வீதியார்
* வாயுறை வாழ்த்து
.. மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்
* தெய்வநூல்
* பொதுமறை
* முப்பால்
.. கல்லாடர், நாகன் தேவனார், ஆசிரியர் நல்லந்துவனார்,
.. உருத்திர சன்மகண்ணர், ஆலங்குடி வங்கனார், அக்காரக்கனி நச்சுமனார்
* தமிழ் மறை
* ஈரடி நூல்
* வான்மறை
* உலகப் பொதுமறை
மேலுள்ள அடைமொழிகள் பலவற்றில் அவற்றை முதலில் பயன்படுத்தியவர் பெயர் விட்டுப்போயுள்ளன. அறிந்தோர் அப்பெயர்களப் பின்னூட்டமாக இட்டு நிரப்பலாம்.
திருக்குறள் செய்தித் திரட்டு 002.
தொல்காப்பியமும் சங்கநூற்களும் - திருவள்ளுவர் பெருமானும்
(புலவர் என்.வி.கலைமணியின் ’திருக்குறள் சொற்பொருள் சுரபி’ நூலிலிருந்து)
★★★★★
No comments:
Post a Comment