சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
திருக்குறள் செய்தித் திரட்டு 003.
திருக்குறள் பற்றித் தெரிந்த, தெரியாத விவரங்கள் சில.
* திரு + குறள் = திருக்குறள்
.. திரு => மேன்மை சுட்டும் அடைமொழி
.. குறள் => குறள் வெண்பாவைச் சுட்டாது நூலைச் சுட்டுவதால் கருவியாகு பெயர்
.. திருக்குறள் => அடையடுத்த கருவியாகு பெயர்.
* திருக்குறளை முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்
.. மலயத்துவான் மகன் ஞானப்பிரகாசம்
.. ஆண்டு 1812, தஞ்சையில்.
.. மேல்விவரம்: http://rssairam.blogspot.in/2013/03/1892.html
* தமிழின் 247 எழுத்துகளில்,
.. 37 எழுத்துகள் திருக்குறளில் இல்லை.
.. இல்லாத ஒரே உயிரெழுத்து: ஔ.
.. அதிகம் வரும் ஓரெழுத்து: னி.
.. ஒருமுறை மட்டும் வருவன: ளீ, ங
* எண்கள்
.. இல்லாத ஓரே எண்: ஒன்பது
.. கோடி என்ற சொல் ஏழு இடங்களில்
.. எழுபது கோடி என்று ஒரு குறளில்
.. எழு (ஏழு) என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்.
* இல்லாத இரு சொற்கள்: தமிழ், கடவுள்
.. தமிழ் என்னும் சொல் பயிலும்
.. சங்க இலக்கிய நூல்கள் இங்கே:
.. http://tamilconcordance.in/SANGconc-1-ta1.html#தமிழ்
.. கடவுள் என்னும் சொல் பயிலும்
.. சங்க இலக்கிய நூல்கள் இங்கே:
.. http://tamilconcordance.in/SANGconc-1-ka1.html#கடவுள்
* திருக்குறளில் வரும் மலர்கள்: அனிச்சம், குவளை
.. கனி: நெருஞ்சிப் பழம் மட்டுமே
.. விதை: குன்றிமணி, தினை
.. மரங்கள்: பனை, மூங்கில்
* திருக்குறள் 80 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.
.. நரிக்குறவர்கள் பேசும் வக்ரிபோலி மொழியிலும்.
★★★★★
No comments:
Post a Comment