பயிற்சி 3.10. நாலடியார் புகழ் பாடல் 'சொல்லுக் குறுதி' அறிதல்
நாலடியார், திருக்குறள் நூல்களிரண்டையும் புகழும்
.. செய்யுள் வரிகள் சிலவற்றை நாம் அறிவோம்.
.. அவற்றுள் எல்லோர்க்கும் தெரிந்தது இவ்வடி:
.. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
இந்த அடி பயிலும் செய்யுளைக் கண்டறிந்து
.. அதன் நான்கு அடிகளையும்
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுவோம்.
பயிற்சி 3.11. நாலடியார் புகழ் வெண்பா 'பழகுதமிழ்ச் சொல்லருமை' அறிதல்
நாலடியார், திருக்குறள் நூல்களிரண்டையும் புகழும்
.. செய்யுள் வரிகள் சிலவற்றை நாம் அறிவோம்.
.. அவற்றுள் பலருக்கும் தெரிந்தது இவ்வடி:
.. பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்.
இந்த அடி பயிலும் வெண்பாவைக் கண்டறிந்து
.. அதன் நான்கு அடிகளையும்
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுவோம்.
பயிற்சி 3.12. நாலடியார் புகழ் வெண்பா 'சொல்லாய்ந்த நாலடி நானூறு' அறிதல்
நாலடியார், திருக்குறள் நூல்களிரண்டையும் புகழும்
.. செய்யுள் வரிகள் சிலவற்றை நாம் அறிவோம்.
.. அவற்றுள் சிலருக்குத் தெரிந்தது இவ்வடி:
.. சொல்லாய்ந்த நாலடி நானூறு.
இந்த அடி பயிலும் வெண்பாவைக் கண்டறிந்து
.. அதன் நான்கு அடிகளையும்
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுவோம்.
பயிற்சி 3.13. நாலடியார் வரலாறு புகழ் வெண்பா 'பழுதிலா நாலடியைப் பார்' அறிதல்
எண்ணாயிரம் சமண முனிவர்கள் ஆளுக்கோர் ஓலை
.. எழுதிவைத்துவிட்டுத் தன்னை விட்டு நீங்கியது கண்ட
.. பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி
.. அவற்றை வைகையாற்றில் எறியச் செய்தான்.
.. எறிந்த சுவடிகளில் நானூறு கரைசேர்ந்தன.
.. அவற்றின் தொகுப்பே நாலடி நானூறாம் நாலடியார்.
இவ்வரலாற்றைப் ’பழுதிலா நாலடியைப் பார்’
.. என்னும் புகழுரை தெரிவிக்கிறது.
.. இந்த அடி பயிலும் வெண்பாவைக் கண்டறிந்து
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுவோம்.
மன்னன் வழுதியர் கோன்வையைப் பேராற்றின்
எண்ணி யிருநான்கோ டாயிரவர் - உன்னி
எழுதியிடு யேட்டி லெதிரே நடந்த
பழுதிலா நாலடியைப் பார்.
No comments:
Post a Comment