Friday, September 21, 2018

பயிற்சி 3.16. திருக்குறளில் தாவரங்கள்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

திருக்குறள் செய்தித் திரட்டு 003.

பயிற்சி 3.16. திருக்குறளில் தாவரங்கள்

திருக்குறளில் காணும் மலர், விதை, மரம், கனி வகைகள் இவை:
.. அனிச்ச்ம் 4 குறட்பாக்கள்
.. குவளை 1 குறட்பா
.. தினை 4 குறட்பாக்கள்
.. குன்றிமணி 2 குறட்பா
.. பனை 3 குறட்பாக்கள்
.. மூங்கில் 2 குறட்பாக்கள்
.. நெருஞ்சி 1 குறட்பா
.. ஆக மொத்தம் 17 குறட்பாக்கள்.

இந்தப் பதினேழு குறட்பாக்களையும் கண்டறிந்து
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுவோம்.


மலர்: அனிச்சம் (4)
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. ... 90

நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு
மென்னீரள் யாம்வீழ் பவள். ... 1111

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. ... 1115

அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம். ... 1120

***
மலர்: குவளை (1)
காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு
மாணிழை கண்ணெவ்வே மென்று. ... 1114

***
விதை: தினை (4)
தினைத்துணை நன்றி செயெனும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார். ... 104

எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல். ... 144

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். ... 433

தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங்
காம நிறைய வரின். ... 1282

***
விதை: குன்றிமணி (குன்றி) (2)
புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து. ... 277

குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின். ... 965

***
மரம்: பனை (3)
தினைத்துணை நன்றி செயெனும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார். ... 104

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். ... 433

தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங்
காம நிறைய வரின். ... 1282

***
மரம்: மூங்கில் (வேய்) (2)
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர். ... 66

முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. ... 1113

***
கனி (நெருஞ்சி) (1)
அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம். ... 1120

*****

திருக்குறள் செய்தித் திரட்டு 003.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

திருக்குறள் செய்தித் திரட்டு 003.

திருக்குறள் பற்றித் தெரிந்த, தெரியாத விவரங்கள் சில.

* திரு + குறள் = திருக்குறள்
.. திரு => மேன்மை சுட்டும் அடைமொழி
.. குறள் => குறள் வெண்பாவைச் சுட்டாது நூலைச் சுட்டுவதால் கருவியாகு பெயர்
.. திருக்குறள் => அடையடுத்த கருவியாகு பெயர்.

* திருக்குறளை முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்
.. மலயத்துவான் மகன் ஞானப்பிரகாசம்
.. ஆண்டு 1812, தஞ்சையில்.
.. மேல்விவரம்: http://rssairam.blogspot.in/2013/03/1892.html

* தமிழின் 247 எழுத்துகளில்,
.. 37 எழுத்துகள் திருக்குறளில் இல்லை.
.. இல்லாத ஒரே உயிரெழுத்து: ஔ.
.. அதிகம் வரும் ஓரெழுத்து: னி.
.. ஒருமுறை மட்டும் வருவன: ளீ, ங

* எண்கள்
.. இல்லாத ஓரே எண்: ஒன்பது
.. கோடி என்ற சொல் ஏழு இடங்களில்
.. எழுபது கோடி என்று ஒரு குறளில்
.. எழு (ஏழு) என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்.

* இல்லாத இரு சொற்கள்: தமிழ், கடவுள்
.. தமிழ் என்னும் சொல் பயிலும் 
.. சங்க இலக்கிய நூல்கள் இங்கே:
.. http://tamilconcordance.in/SANGconc-1-ta1.html#தமிழ்
.. கடவுள் என்னும் சொல் பயிலும்
.. சங்க இலக்கிய நூல்கள் இங்கே:
.. http://tamilconcordance.in/SANGconc-1-ka1.html#கடவுள்

* திருக்குறளில் வரும் மலர்கள்: அனிச்சம், குவளை
.. கனி: நெருஞ்சிப் பழம் மட்டுமே
.. விதை: குன்றிமணி, தினை
.. மரங்கள்: பனை, மூங்கில்

* திருக்குறள் 80 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.
.. நரிக்குறவர்கள் பேசும் வக்ரிபோலி மொழியிலும்.

★★★★★

பயிற்சி 3.14.-3.15.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

திருக்குறள் செய்தித் திரட்டு 001.

பயிற்சி 3.14. தேவர் குறளும்... 
ஔவையின் நல்வழிப் பாடல் குறிப்பு அறிதல்
திருக்குறளைத் துதிசெய்யும் ஔவையின் கீழுள்ள நல்வழிப் பாடலை நோக்குக. தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழு முனிமொழியும் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். ... 40 இப்பாடலில் திருக்குறள் தவிர, .. ஆறு நூல்களைக் குறிக்கிறார், ஔவை. .. அந்நூல்களின் பெயர்களை, .. அவற்றைக் குறிக்கும் செய்யுள் பதத்துடன் .. கண்டறிந்து எழுதுவோம்.
தேவர் குறளும் => திருக்குறள்
திருநான் மறைமுடிவும் => திருநான்மறை முடிவும் => உபநிடதங்கள்
மூவர் தமிழும் => அப்பர், சம்பந்தர், சுந்தரர் தேவாரப் பதிகங்கள்
முனிமொழியும் => வியாச முனிவர் பிரம்மசூத்திரம்
கோவை => மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக் கோவை என்னும் திருக்கோவையார்
திருவாசகமும் => மாணிக்கவாசகரின் திருவாசகம்
திருமூலர் சொல் => திருமந்திரம்
பயிற்சி 3.15. திருக்குறள் பழைய உரையாசிரியர்கள்
வாய்பாட்டு வெண்பா அறிதல்
பண்டை நாளில் திருக்குறளுக்கு உரைசெய்தோர் பதின்மர்: .. தருமர், மணக்குடவர், நச்சர், தாமத்தர், .. பரிதி, திருமலையர், பரிமேலழகர், .. பரிப்பெருமாள், மல்லர், கலிங்கர். இவர்கள் பெயரைத் தொகுத்துச் சொல்லும் .. வாய்பாட்டு வெண்பா ஒன்றுளது. .. அதைக் கண்டறிந்து எழுதுவோம்.
தருமர் மணக்குடவர் தாமத்தர் தச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தார் இவர்.

திருக்குறள் செய்தித் திரட்டு 001-002.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

திருக்குறள் செய்தித் திரட்டு 001.

திருவள்ளுவர் பெயர்களும், முதலில் அவற்றைத் தந்தவர்களும்
* தேவர்
.. செயிர்க் காவியார் மகனார் சாத்தனார், 
.. ஆலங்குடி வங்கனார், ஔவையார் (நல்வழி)

* நாயனார்
.. சைவர்கள் தந்த பட்டப்பெயர்

* தெய்வப் புலவர்
.. அசரீரி, கீரந்தையார், தேனிக்குடிக் கீரனார்
.. ஆகிய புலவர்கள் ’தெய்வத் திருவள்ளுவர்’
.. என்ற அடைமொழியைப் பயன்படுத்தியுள்ளர்.

* செந்நாப் போதார்
.. நல்கூர் வேள்வியார்

* பெருநாவலர்

* பொய்யில் புலவர்

* பொய்யாமொழிப் புலவர்
.. திருவள்ளுவர் மொழிந்த பொய்யாமொழி--வெள்ளி வீதியார்

* மாதானுபங்கி
.. நல்கூர் வேள்வியார்

* முதற்பாவலர்
.. ஆசிரியர் நல்லந்துவனார்

திருக்குறள் பெயர்களும், முதலில் அவற்றைத் தந்தவர்களும்
* உத்தரவேதம்

* பொய்யாமொழி
.. வெள்ளி வீதியார்

* வாயுறை வாழ்த்து
.. மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்

* தெய்வநூல்

* பொதுமறை

* முப்பால்
.. கல்லாடர், நாகன் தேவனார், ஆசிரியர் நல்லந்துவனார், 
.. உருத்திர சன்மகண்ணர், ஆலங்குடி வங்கனார், அக்காரக்கனி நச்சுமனார்

* தமிழ் மறை

* ஈரடி நூல்

* வான்மறை

* உலகப் பொதுமறை

மேலுள்ள அடைமொழிகள் பலவற்றில் அவற்றை முதலில் பயன்படுத்தியவர் பெயர் விட்டுப்போயுள்ளன. அறிந்தோர் அப்பெயர்களப் பின்னூட்டமாக இட்டு நிரப்பலாம்.

திருக்குறள் செய்தித் திரட்டு 002.

தொல்காப்பியமும் சங்கநூற்களும் - திருவள்ளுவர் பெருமானும்
(புலவர் என்.வி.கலைமணியின் ’திருக்குறள் சொற்பொருள் சுரபி’ நூலிலிருந்து)












★★★★★

Thursday, September 13, 2018

பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா! தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா! தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/218865942177278/
01. தொ.001. இராமசாமி வெங்கடராமன் (88888 39/40)
இனிப்பு
கற்கண்டாய்த் தித்திக்கும் கண்ணேயுன் வாய்மொழிச்
சொற்கேட்காக் காதுக்குச் சோர்வு. ... 1

புளிப்பு
புளிபோட்டுத் தேய்த்த புதுப்பாத் திரம்போல்
பளிச்செனத் தோன்றிடும் பாங்கு. ... 2

கைப்பு
கைப்பேனோ பாகல்போல் கண்ணே மனதிலேயுன்
கைப்பாவை தானேநான் காண். ... 3

உவர்ப்பு
உவர்ப்பாய் உடனே உகுத்திடும் கண்ணீர்
துவக்கமே அந்தோ துயர். ... 4

துவர்ப்பு
உவத்தலே என்றும் உமக்குயர்வு பாக்காய்த்
துவர்த்திடி லென்றும் துயர். ... 5

கார்ப்பு
மிளகாய்த்தூள் கார்ப்பு மிதமெனில் நன்று
இளகுமோவுன் காட்டமும் இன்று. ... 6

★★★
02. பா.040. செல்லப்பன்(88888 38/40)

தித்திப்பு—ஆண்
செப்பும் ஒருசொல்லில் செந்தேனின் தித்திப்பை
எப்படிநீ சேர்த்தாய் இயம்பு? ... 1

கார்ப்பு—பெண்
என்சொல் உறைக்கிறதாய் என்றன்தாய் ஓலமிடில்
என்செய்வேன் அன்பே இனி? ... 2

துவர்ப்பு—ஆண்
பிஞ்சில் துவர்த்தாலும் பின்னர் இனிக்கின்ற
நெஞ்சத்தாள் உன்தாய் நினை! ... 3

கைப்பு—பெண்
சொல்கசந்த போதிலுமென் தூய மனத்தன்னை
நல்லதையே செய்வாள்நீ நம்பு. ... 4

புளிப்பு—ஆண்
பேச்சில் புளிப்பின்றிப் பேசிச் சரிசெய்தால்
ஓச்சல் ஒழியும் உணர் ... 5
[ஓச்சல்=எறிதல், வெட்டல்]

உவர்ப்பு—பெண்
உணவுக் குவர்ப்பேபோல் உன்னோடுவாழ்வேன்
மணக்கும்நம் வாழ்க்கையதன் மாண்பு. ... 6

★★★
03. பா.060. திசேசு (88888 37/40)
இல்லறத்தில் அறுசுவை

உப்பின் கரிப்பொக்கும் ஒண்டொடியாள் ஊடலது
செப்புமின் துய்த்ததன் பின். ... 1

நீரிழிவு நோயுற்றோர் நேடும் துவர்ப்பாகி
நேரிழையாள் வாழ்ந்தனள் நெஞ்சு. ... 2

கற்கண்டு தேனைக் கசப்பாக்கும் காதலியாள்
சொற்கனிய ஊறும் சுவை. ... 3

என்றனைக் காய்வோர்க்கு ஏந்திழையாள் காரமாய்
கொன்றிடப் பார்த்திடும் கூற்று. ... 4

என்னிலவை ஏசுகின்ற பேச்செலாம் எப்பொழுதும்
மன்னனெற்கு மாறாக் கசப்பு. ... 5

பழகப் பழகப் புளிக்காத பாலாம்
அழகியொடு ஆர்த்த உறவு. ... 6

★★★
நி1.. குருநாதன் ரமணி

கன்னலின் சாறினிமை கற்கண் டதனினும்-நீ
சொன்னதால் தித்திக்கும் சொல். ... 1

பாகற்காய் கைப்பாகப் பாவையுன் அன்னைசொல்
சோகம் விளைத்துச் சுடும். ... 2

புளிக்காய்ச்சல் தின்றது போலவுன் வாக்கு
இளித்தது போதும் எழு. ... 3

பாக்குத் துவர்ப்பாய்ப் பரிகாசம் பண்ணுமுன்
நாக்கில் கவிதை நயம். ... 4

கடல்நீரைக் காட்டிலுமுன் கண்ணீர்க் கரிப்பு
சுடுமென்றன் நெஞ்சம் தொடும். ... 5

கண்ணில் கனல்மிளகின் காரமுன் சொல்லிலே
பெண்ணேநீ ஆனாயோ பேய்! ... 6

★★★★★

பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா!

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா!

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/209941296403076/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 40)
(ஆறு குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => ஓரடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

அறுசுவை:
இனிப்பு, புளிப்பு, கைப்பு (கசப்பு), 
உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்).

பயிலிழை குவெ.02. அறுசுவைக் குறள் வெண்பா!
பாடுபொருள்: காதலர்கள் உரையாடல்
பாவகை: குறள் வெண்பா

காதல் வயப்பட்ட ஆண்-பெண் சோடிகள்
.. தம் காதல் போக்கிற் கேற்ப
.. அறுசுவையில் பேசிக்கொள்வதாக,
.. சுவைக்கு ஒன்றென
.. மொத்தம் 6 குறள் வெண்பாக்கள்
.. புனைந்து பதிவோம்.

ஒவ்வொரு குறளிலும் வரும் 
.. சுவையைத் தரும் தூலப் பொருள்
.. அதில் உவமை அல்லது உருவகமாக 
.. அமையுமாறு புனையவேண்டும்.

தொகுப்பு
04/05/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக
காதலில் அறுசுவை!
(குறள் வெண்பா)
(அறுசுவை: காதல்)

கன்னலின் சாறினிமை கற்கண் டதனினும்-நீ
சொன்னதால் தித்திக்கும் சொல். ... 1

பாகற்காய் கைப்பாகப் பாவையுன் அன்னைசொல்
சோகம் விளைத்துச் சுடும். ... 2

புளிக்காய்ச்சல் தின்றது போலவுன் வாக்கு
இளித்தது போதும் எழு. ... 3

பாக்குத் துவர்ப்பாய்ப் பரிகாசம் பண்ணுமுன்
நாக்கில் கவிதை நயம். ... 4

கடல்நீரைக் காட்டிலுமுன் கண்ணீர்க் கரிப்பு
சுடுமென்றன் நெஞ்சம் தொடும். ... 5

கண்ணில் கனல்மிளகின் காரமுன் சொல்லிலே
பெண்ணேநீ ஆனாயோ பேய்! ... 6

--குருநாதன் ரமணி, 26/04/2018

★★★★★

Sunday, September 9, 2018

பயிலிழை குவெ.01. திருக்குறள் துதிகுறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.01. திருக்குறள் துதிகுறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/215859792477893/
01. தொ.006. இரா.கி ஒரத்தநாடு. தஞ்சை

நெறிமுறை காட்டியுள் நேர்வழி போற்றிப்
புரிதலில் வாழ்குறள் போற்று.

★★★
02. பா.034. இளவல் ஹரிஹரன்

குறள்வழி வாழ்தல் குவலயம் போற்றும்
அறவழி என்றே அறி. ... 1

திறங்கொண்டு வாழ்வார் திருக்குறள்சொல் கேட்பார்
அறங்கொண்டே ஆள்வார் அகம். ... 2

மழைகூடப் பொய்க்கும் மறந்தும்பொய் யாச்சொல்
விழையுந் திருக்குறளை வேண்டு. ... 3

அகஞ்சீர் அடைதற்கே அவ்வப்போ திங்கு
சுகக்குறள் ஒன்றிரண்டு சொல். ... 4

காசில னாயினுங் காசினியில் நம்குறள்
மாசில னாக்கும் மதி. ... 5

★★★
03. பா.002. பாப்பணன் தனராஜ்

தமிழ்மறை கற்றோர் தரணியில் தாழார்
சமலை யறுக்குமோர் சால்பு. ... 1
(சமலை => அழுக்கு; சால்பு. => கல்வி)

அறம்பொரு ளின்பத்தி னான்ற குறளால்
திறம்பட வாழ்வோம் தெளிந்து. ... 2

அருங்குற ளாய்ந்தார்தா மாயிரம் நூல்படைத்து
பெரும்பு கழெய்தினர் பேறு. ... 3

மறைநூல் பலகற்றும் உய்யாதார் உய்ய
குறளே புவிகாக்கும் கூழ். ... 4

குன்றின் விளக்காம் குறள்நெறி ; கொண்டார்க்கு
என்றும் இடும்பை இல. ... 5

★★★
04. தொ.002. பாவலர் சீனி பழனி

கல்லா மனத்தைக் கனிவாய்க் கரைத்திட
நல்லோர் நவிலும் குறள். ... 1

அறிவே கருவி அறைவதும் குறளே
அறிதல் அறமதே தான். ... 2

மழைதரு வானம் நிழல்தரு சோலை
இழையணி வாழ்வே குறள். ... 3

மனிதம் உயர்வே மனமும் இனிதே
கனியே குறளின் நெறி. ... 4

மருந்தும் விருந்தே நறுந்தேன் குறளே
அருந்திடத் தந்தார் அறி. ... 5

★★★
05. பா.060. திசேசு

ஈரடிக்குக் காலடி மட்டாகி ஈந்துயர்
பாரடிமை கொண்டகுறட் பா. ... 1

தமிழர்தம் வாழ்நெறி சீராகத் தாய்போல்
அமிழ்தம் அருளும் குறள். ... 2

முப்பால் புகன்றுலகு மூவா துறையநெறி
தப்பா துரைத்த குறள். ... 3

இனமொழி எம்மதம் கொண்டார்க்கும் நன்மை
மனநிறை வானகுறள் மாண். ... 4

எந்நிலை எந்நிறை மாந்தர்க்கும் ஏற்றதாம்
தன்னிலை தாழாக் குறள். ... 5

★★★
06. பா.062. விசு. இம்மானுவேல்

வள்ளுவன் வாய்மொழி வானினும் மாபெரிதே 
தெள்ளிய சீர்மைத் தெளி. ... 1 

முப்பால் உணர்ந்தால் முழுமையே வாழ்வினில் 
அப்பால் அருமை அறி. ... 2

சாற்றிக் குறளின் சமத்துவம் நாட்டினில் 
போற்றி யொழுகினால் பொன். ... 3

ஓதும் மனிதர் ஒருமித்து நிற்கையில் 
வேதங்கள் வேண்டா விலக்கு. ... 4

பூதமைந்தும் ஆற்றப் புவியில் குறளெனும் 
வேதம் சிறந்திட வேண்டு. ... 5

★★★
07. நி1. குருநாதன் ரமணி

அறத்தால் வரும்பொருளால் ஆமின்பம் துய்க்கும்
நெறிதரும்நூல் நிற்கும் நிலைத்து. ... 1

தினைத்துணை யாம்குறள்சொல் தீதுநன்று காணப் 
பனைத்துணை யாகும் பயன். ... 2

தேவராம் நாயனார் தெய்வப் புலவர்சொல்
யாவர்க்கும் வேதமென வாம். ... 3

அடிமூன்றால் வாமனன் ஆள்மூ வுலகும்
அடியிரண்டில் ஆள்குற ளாம். ... 4

நால்வருணத் தாரும்கொள் நல்லறம் தந்துமுப்
பால்வண்ணம் காட்டும் பரம். ... 5

★★★★★

பயிலிழை குவெ.01. திருக்குறள் துதிகுறள்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.01. திருக்குறள் துதிகுறள்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/207408699989669/
குறள் வெண்பா என்றேலே நினைவில் குதித்தெழுவது 
.. வள்ளுவரின் திருக்குறள் தானே! 
.. எனவே நம் முதற் பயிலரங்கத்தில்
.. திருக்குறளைப் போற்றும் துதிகுறள் எழுதுவோம்.

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
திருக்குறளின் பெருமையை 
.. நாம் அவரவர் அறிந்த வரையில் சொல்வதால் 
.. பாடல் மதிப்பீடோ புள்ளிகளோ இல்லை.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.01. திருக்குறள் துதிகுறள்
பாடுபொருள்: திருக்குறள் பெருமை
பாவகை: குறள் வெண்பா

திருக்குறளின் பெருமையைப் போற்றி
.. ஒரு விகற்பத்தில் (இரண்டடிக்கும் ஓரெதுகை) அமையுமாறும்
.. அடிதோறும் பொழிப்பு மோனை அமைத்தும்
.. குறள் வெண்பாக்கள் ஐந்து புனைவோம்.

தொகுப்பு
28/04/2018 இரவு வரை வரும் பதிவுகளில்
.. தேர்வுபெற்றவை தொகுக்கப்பட்டுக்
.. குழுமத்தில் பின்னர் வெளியிடப்படும்.

அடியேன் பங்காக
வாமனர் வள்ளுவர்!
(குறள் வெண்பா)
(திருக்குறள்: துதிகுறள்)

அறத்தால் வரும்பொருளால் ஆமின்பம் துய்க்கும்
நெறிதரும்நூல் நிற்கும் நிலைத்து. ... 1

தினைத்துணை யாம்குறள்சொல் தீதுநன்று காணப் 
பனைத்துணை யாகும் பயன். ... 2

தேவராம் நாயனார் தெய்வப் புலவர்சொல்
யாவர்க்கும் வேதமென வாம். ... 3

அடிமூன்றால் வாமனன் ஆள்மூ வுலகும்
அடியிரண்டில் ஆள்குற ளாம். ... 4

நால்வருணத் தாரும்கொள் நல்லறம் தந்துமுப்
பால்வண்ணம் காட்டும் பரம். ... 5

--குருநாதன் ரமணி, 14/04/2018

★★★★★

Saturday, September 1, 2018

பயிற்சி 3.10.-3.13.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

வெண்பா செய்தித் திரட்டு - 02.

பயிற்சி 3.10. நாலடியார் புகழ் பாடல் 'சொல்லுக் குறுதி' அறிதல்

நாலடியார், திருக்குறள் நூல்களிரண்டையும் புகழும்
.. செய்யுள் வரிகள் சிலவற்றை நாம் அறிவோம்.
.. அவற்றுள் எல்லோர்க்கும் தெரிந்தது இவ்வடி:
.. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

இந்த அடி பயிலும் செய்யுளைக் கண்டறிந்து
.. அதன் நான்கு அடிகளையும் 
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுவோம்.


பாலு நெய்யு முடலுக் குறுதி
வேலும் வாளு மடலுக் குறுதி
ஆலும் வேலும் பல்லுக்குக் குறுதி
நாலு மிரண்டுஞ் சொல்லுக் குறுதி.
பயிற்சி 3.11. நாலடியார் புகழ் வெண்பா 'பழகுதமிழ்ச் சொல்லருமை' அறிதல் நாலடியார், திருக்குறள் நூல்களிரண்டையும் புகழும் .. செய்யுள் வரிகள் சிலவற்றை நாம் அறிவோம். .. அவற்றுள் பலருக்கும் தெரிந்தது இவ்வடி: .. பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில். இந்த அடி பயிலும் வெண்பாவைக் கண்டறிந்து .. அதன் நான்கு அடிகளையும் .. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுவோம்.
நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின் - பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை
புல்லரிடைத் தேயறிமின் போய்.
--ஔவையார் தனிப்பாடல், 61
பயிற்சி 3.12. நாலடியார் புகழ் வெண்பா 'சொல்லாய்ந்த நாலடி நானூறு' அறிதல் நாலடியார், திருக்குறள் நூல்களிரண்டையும் புகழும் .. செய்யுள் வரிகள் சிலவற்றை நாம் அறிவோம். .. அவற்றுள் சிலருக்குத் தெரிந்தது இவ்வடி: .. சொல்லாய்ந்த நாலடி நானூறு. இந்த அடி பயிலும் வெண்பாவைக் கண்டறிந்து .. அதன் நான்கு அடிகளையும் .. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுவோம்.
வெள்ளான் மரபுக்கு வேதமெனச் சான்றோர்க
ளெல்லாருங் கூடி எடுத்துரைத்த - சொல்வாய்ந்த
நாலடி நானூறு நன்கினி வென்மனத்தே
சீலமுட னிற்கத் தெளிந்து.
பயிற்சி 3.13. நாலடியார் வரலாறு புகழ் வெண்பா 'பழுதிலா நாலடியைப் பார்' அறிதல் எண்ணாயிரம் சமண முனிவர்கள் ஆளுக்கோர் ஓலை .. எழுதிவைத்துவிட்டுத் தன்னை விட்டு நீங்கியது கண்ட .. பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி .. அவற்றை வைகையாற்றில் எறியச் செய்தான். .. எறிந்த சுவடிகளில் நானூறு கரைசேர்ந்தன. .. அவற்றின் தொகுப்பே நாலடி நானூறாம் நாலடியார். இவ்வரலாற்றைப் ’பழுதிலா நாலடியைப் பார்’ .. என்னும் புகழுரை தெரிவிக்கிறது. .. இந்த அடி பயிலும் வெண்பாவைக் கண்டறிந்து .. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுவோம்.
மன்னன் வழுதியர் கோன்வையைப் பேராற்றின்
எண்ணி யிருநான்கோ டாயிரவர் - உன்னி
எழுதியிடு யேட்டி லெதிரே நடந்த
பழுதிலா நாலடியைப் பார்.

வெண்பா செய்தித் திரட்டு - 05.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

வெண்பா செய்தித் திரட்டு - 05.

சங்கம் மருவிய கால வெண்பா யாப்பு 

முனைவர் ப.திருஞானசம்பந்தம் எழுதிய
.. 'பதினெண்கீழ்க்கணக்கின் யாப்பமைதி'
.. நூல்தரும் செய்திகள் கீழே.

சங்கம் மருவிய காலத்தில் 
.. தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்
.. முதுமொழிக் காஞ்சி தவிர்த்த
.. ஏனைய பதினேழு நூல்களும்
.. வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.
.. முதுமொழிக் காஞ்சி குறள் வெண்பாவின் இனமான
.. குறள் வெண்செந்துறை யாப்பில் அமைந்துள்ளதாக
.. உரையாசிரியர்கள் குறிப்பர்.

கீழ்க்கணக்கு நூல்களில்
.. குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, 
.. பஃறொடை என்னும் வெண்பாவின் அனைத்து 
.. வடிவங்களும் பயின்று வந்துள்ளன.

அறம், அகம், புறம் என்னும் முப்பொருண்மையில்
.. பெரும்பான்மை அளவியல் (நாலடி) வெண்பாக்கள்.
.. இன்னா, இனியவை நாற்பது நூல்கள்
.. முழுதும் இன்னிசை வெண்பாக்கள்.

செப்பலோசையின் மூன்று வகைகளாகும்
.. ஏந்திசைச் செப்பல் (வெண்சீர் வெண்டளை மட்டும் பயிவது)
.. தூங்கிசைச் செப்பல் (இயற்சீர் வெண்டளை மட்டும்)
.. ஒழுகிசைச் செப்பல் (வெண்டளை யிரண்டும் விரவி)
.. இவற்றில், கீழ்க்கணக்கு அளவியல் வெண்பாக்களில்
.. ஏந்திசைச் செப்பல் பயில்வது ஏதுமில்லை!
.. தூங்கிசைச் செப்பலாக ஏழு மட்டுமே!
.. மற்றவை யெல்லாம் ஒழுகிசைச் செப்பலில் அமைந்தவை!

அளவியல் வெண்பா வகைகளான
.. நேரிசை, இன்னிசை வெண்பாக்களில்
.. இன்னிசை வெண்பாவே தொன்மை மிக்க வடிவம்.

கீழ்க்கணக்கு நூல்களில்
.. நேரிசை வெண்பாக்கள் அதிக எண்ணிக்கையிலும் (1067)
.. இன்னிசை வெண்பாக்கள் அதைவிடக் குறைந்த எண்ணிக்கையிலும் (665)
.. காணப்படுகின்றன.

நேரிசை வெண்பா
.. தனிசொல் ஒரூஉ எதுகையாக அமைய
.. அவ்வெதுகை அது வரும், அதற்கு முன்னுள்ள
.. அடியெதுகைக் கேற்ப அமைவதால்
.. நேரிய இசையாகி இப்பெயர் பெற்றது.

நேரிசை வெண்பா
.. தொல்காப்பியர் சொன்ன ’ஒத்திசைக்’ குறிப்பில்
.. அடங்குவதாகக் கொள்வார் உளர்.
.. ஆயினும் அது தனி வடிவமாக அவர் காலத்தில் இல்லை.

சங்கம் மருவிய காலத்தில் வளர்ச்சிபெற்ற
.. நேரிசை வெண்பாவின் தனிச்சொல் பற்றி:

ஏட்டுச் சுவடிகளில் தனிச்சொல் முன்
.. சிறு கோடியின்றியே எழுதப் பெற்றது.

1831-இல் தாண்டவராய முதலியாரால்
.. ’பழுதற ஆராயப்பட்டு’ வெளிவந்த
.. ’திருக்குறண் மூலமும் நாலடிநானூற்றின் மூலமும்’
.. பதிப்பில் தனிச்சொல் இடைவெளி விட்டு எழுதப்பட்டது.
.. வேறு சிலர் இடைவெளியுடன் உடுக்குறி யிட்டனர்.

1875 முதல் வெளிவந்த நூல்களில்தான்
.. தனிச்சொல் சிறு கோடிட்டுக் காட்டப்பெற்றது.
.. கோடிடுவது இலக்கணத்தில் இல்லை, 
.. ஆயின் வழக்கமாக நிலைபெற்றுவிட்டது.

ஆசாரக் கோவையின் பதினாறவது பாடலான
.. அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
.. நிகரில் குரவ ரிவரிவரத்
.. தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே
.. யாவரும் கண்ட நெறி
..
.. இப்பாடலில்
.. இரண்டாமடி மூன்று சீர்களே கொண்டுள்ளதால்
.. பொதுவாகச் சவலை வெண்பாவாகக் கொள்ளப்படுகிறது.

இரண்டாம் அடியை
.. நிகரில் குரவரிவ் வைவர் இவரிவரத்
.. என்னும் பாடபேதமாகக் கொண்டு இதை 
.. நேரிசை வெண்பாவாய்க் கொள்வதும் உண்டு.

வெண்பாவில் சிறுபானமை ஐஞ்சீரடி வராம்
.. என்ற தொல்காப்பிய உரையின் கருத்துக் கேற்ப
.. ஐந்திணை ஐம்பது நூலில் கீழ்வரும் வெண்பா:

உதிரத் துவரிய வேங்கை யுகிர்போ
வெதிரி முருக்கம்ப வீர்ந்தண்கார் நீங்க - வெதிருநர்க்
கின்பம் பயந்த விளவேனில் காண்டொறுந்
துன்பங் கலந்தழியு நெஞ்சு. ... (ஐந்திணை ஐம்.31

★★★★★