Friday, August 31, 2018

வெண்பா செய்தித் திரட்டு - 04.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

வெண்பா செய்தித் திரட்டு - 04.

சங்கம் மருவிய கால வெண்பா யாப்பு 

சங்கம் மருவிய காலத்தை 
.. வெண்பாவின் பொற்காலம் எனலாம். 
.. ஒரு நூல் முழுவதும் வெண்பாவில் 
.. யாக்கப்பட்டது இக்காலத்தில் தான்.

சங்கம் மருவிய காலத்தெழுந்த நூல்கள் 
.. பதினெண் கீழ்க்கணக்கு என்னும் 
.. பெயரில் வழங்கப்படுகின்றன. 
.. செய்யுள் அளவிற் சிறியதாக அமைவதாலும், 
.. அறம், பொருள், இன்பம் என்னும் 
.. நெறிகளைப் பற்றிக் கூறுவதாலும் இப்பெயர். 
.. இவற்றுள் பெரும்பான்மை நீதி நூல்களாகும். 

இன்றும் வெண்பா யாப்பு, அறிவுரைச் செய்யுள் புனைவதற்கே பெரிதும் கையாளப்படுகிறது!

பயிற்சி 3.09. பதினெண் கீழ்க்கணக்கு வாய்பாட்டு வெண்பா அறிதல்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பெயரிட்டுச் சொல்லும் 
.. பழைய வெண்பா வொன்றுண்டு.
.. அது யாதெனக் கண்டறிந்து
.. அதன் அடிகளைச் 
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.


நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்
கைந்நிலையு மாக்க்கீழ்க் கணக்கு.

No comments:

Post a Comment