சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
வெண்பா செய்தித் திரட்டு - 03.
சங்க இலக்கியத்தில் வெண்பா யாப்பு
கலித்தொகை
குறள் வெண்பா
யானுற்ற எவ்வம் உரைப்பில் பலர்துயிற்றும்
யாமநீ துஞ்சலை மன். ... (கலித்.14:36-37)
சிந்தியல் வெண்பா
ஆறு விலங்கித் தெருவின்க ணின்றொருவன்
கூறுஞ்சொல் வாயெனக் கொண்டதன் பண்புணராந்
தேற வெளிதென்பா நாம். ... (கலித்.60:23-25)
இன்னிசை வெண்பா
வறந்தெற மாற்றிய வானமும் போலுந்
நிறைந்தென்னை மாய்ப்பதோர் வெள்ளமும் போலும்
சிறந்தவன் தூவற நீப்பப் பிறங்கிவந்
தென்மேல் நிலைஇய நோய். ... (கலித்.146:14-17)
நேரிசை வெண்பா
ஒடுங்கா வெழில்வேழம் வீழ்பிடிக் குற்ற
கடுஞ்சூல் வயாவிற் கமர்ந்து - நெடுஞ்சினைத்
தீங்கட் கரும்பின் கழைவாங்கு முற்றாரி
ணீங்கல மென்பான் மலை. ... (கலித்.40:26-29)
பஃறொடை வெண்பா
கொலையுண்கட் கூறெயிற்றுக் கொய்தளிர் மேனி
யினைவனப்பின் மாயோய் நின்னிற் சிறந்தார்
நிலவுலகத் தின்மை தெளிநீ வருதி
மலையொடு மார்பமைந்த செல்வ னடியைத்
றலையினாற் றொருட்டுற்றேன் சூள். ... (கலித்.108:46-50)
பரிபாடல்
குறள் வெண்பா
மாறுமா றுற்றனபோன் மாறெதிர் கோடல்
மாறற்றான் குண்ற முடைத்து. ... (பரி.17:20-21)
சிந்தியல் வெண்பா
கானலங் காவுங் கயமுந் துருத்தியுந்தேன்
தேனுண்டு பாடத் திசைதிசைப் பூநலம்
பூத்தன்று வையை வரவு. ... (பரி.16:17-19)
இன்னிசை வெண்பா
ஆமா மதுவொக்குங் காதலன் காமம்
ஒருக்க வொருதன்மை நிற்குமோ வொல்லைச்
சுருக்கமு மாக்கமுஞ் சூளுறல் வைஅயைப்
பெருக்கமன்றோ பெற்றாய் பிழை. ... (பரி.6:71-74)
நேரிசை வெண்பா
முன்புற் றறியா முதற்புணர்ச்சி மொய்குழலை
இன்புற் றணிந்த வியலணியும் - வன்பணியும்
நாணேனுந் தொல்லை யணியென்ன நன்னுதலை
... ... னந்து. ... (பரி.திர.5)
பஃறொடை வெண்பா
ஒய்யப்போ வாளை உறழ்ந்தோனிவ் வாணுதல்
வையை மடுத்தாற் கடலெனத் - தெய்ய
நெறிமண னேடினர் செல்லச்சொல் லேற்று
செறிநிறைப்பெண் வல்லுறழ் பியாது தொடர்பென்ன
மறலினாள் மாற்றாள் மலர். ... (பரி.20:41-45)
பத்துப்பாட்டு
இன்னிசை வெண்பா
தூஉஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல்
பாஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்
மாஅ மிசையான்கொ னன்ன னறுநுதலார்
மாஅமை எல்லாம் பசப்பு. ... (மலைபடுகடாம்)
நேரிசை வெண்பா
வண்டடைந்த கண்ணி வறராய்ச்சி வாணெடுங்கண்
சென்றடைந்த நோக்க மினிப்பெறுவ - தென்றுகொல்
கன்றெடுத் தோச்சிக் கனிவிளவின் காய்குத்துக்
குன்றெடுத்து நின்ற நிலை. ... (முல்லைப்பாட்டு.1)
★★★★★
No comments:
Post a Comment