தெரியுமா உங்களுக்கு?! - 004 பரிபாடலில் .. மொத்தம் 70 பாடல்கள் இருந்தன. .. அவற்றில் 22 பாடல்களே கிடைத்துள்ளன. .. தொகுக்கப்பெற்ற எழுபது பாடல்கள் .. திருமால்லுக்கு 8 .. செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 .. காடுகாளுக்கு (காளிக்கு) 1 .. வையைக்கு 26 .. மதுரைக்கு 4 .. என்ற எண்ணிக்கையில் அமைந்திருந்தன. இந்தச் செய்தியைக் குறிக்கும் வெண்பா வொன்றுண்டு. பயிற்சி 3.06 பரிபாடல் அமைதி வாய்பாட்டு வெண்பா அறிதல் பரிபாடல் அமைதியை .. மேற்சொன்னவாறு காட்டும் .. வாய்ப்பாட்டு வெண்பா வொன்றுளது. .. அது யாதெனக் கண்டறிந்து .. அதன் அடிகளைச் .. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.தெரியுமா உங்களுக்கு?! - 005 அகத்திணை, புறத்திணை ஆகிய இரு பிரிவுகளில் .. அகத்திணையைத் தொல்காப்பியம் .. ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளது: .. கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், .. நெய்தல், பாலை, பெருந்திணை. .. கைக்கிளை என்பது ஒருதலைக் காமம் .. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். .. மற்றைந்தும் ஐந்து நிலத்திணகளுடன் .. இணைத்துக் கூறப்பட்டமை காண்க. அகவாழ்வின் ஐந்து அம்சங்களும் .. அவற்றின் நிலத்திணகளும் இவை: .. புணர்தல் - குறிஞ்சி .. இருத்தல் - முல்லை .. ஊடல் - மருதம் .. இரங்கல் - நெய்தல் .. பிரிதல் - பாலை. இந்தச் செய்தியைக் குறிக்கும் வெண்பா வொன்றுண்டு. பயிற்சி 3.07 அகத்திணை வாய்பாட்டு வெண்பா அறிதல் அகத்திணையின் ஐந்து அம்சங்களை .. மேற்சொன்னவாறு காட்டும் .. வாய்ப்பாட்டு வெண்பா வொன்றுளது. .. அது யாதெனக் கண்டறிந்து .. அதன் அடிகளைச் .. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டு காடுகாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடற் றிறம்.போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கஞ்சே ரூட லணிமருதம் - நோக்குங்கால் இல்லிருத்தல் முல்லை இரங்கல் நறுநெய்தல் சொல்லிருத்த நூலின் தொகை. போக்கெலாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கமளி யூட லணிமருதம் - நோக்கொன்றி இல்லிருத்தல் முல்லை யிரங்கியபோக் கேர்நெய்தல் புல்லுங் கவிமுறைக் கொப்பு.
செந்தமிழ்ப் பாட்டுகள் செய்யுளாய் ஊற்றெடுக்க / அந்தமில் யாப்பை அறிந்தபின் - சொந்தமாய்ப் / பற்பலவாம் யாப்பினில் பாக்கள் புனைந்துநாம் / கற்கும் பயிலரங் கம்.
Thursday, August 30, 2018
தெரியுமா உங்களுக்கு?! - 004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment