Thursday, August 30, 2018

தெரியுமா உங்களுக்கு?! - 006

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
தெரியுமா உங்களுக்கு?! - 006

அகத்திணை, புறத்திணை ஆகிய இரு பிரிவுகளில்
.. புறத்திணையைப் புறப்பொருள் வெண்பாமாலை
.. பன்னிரண்டு திணைகளாகப் பகுத்துள்ளவற்றில்
.. ஏழு பூக்கள் பெயர்களைக் கொண்டு
.. இரு மன்னர்களுக்கிடையே 
.. கொள்ளும் போர் நெறிகளில்
.. அவர்களும் சேர்ந்தோரும் அணிவதாகச் சொல்கிறது.

இங்ஙனம் இரு மன்னர்களின் படையினர் அணியும் மலர்கள்
.. வெட்சி - படையெடுத்து ஆநிரை கவர்தல் செய்வோர்
.. கரந்தை - ஆநிரை மீட்டல் செய்வோர்
.. வஞ்சி - பகைவர்மேல் போர் தொடுப்போர்
.. காஞ்சி - போரில் கலந்துகொள்ளாதோர், காயமடைந்தோர் காத்தல் செய்வோர்
.. உழிஞை - எதிரியின் கோட்டையை முற்றுகையிட்டுத் தகர்ப்போர்
.. நொச்சி - கோட்டையைக் காப்போர்
.. தும்பை - உக்கிரமாகப் போர் செய்வோர்
.. வாகை - போரில் வெற்றி பெற்றோர்.

(மேல்விவரம்: http://thamizinperumai.blogspot.in/2013/07/blog-post_3851.html)
இந்தச் செய்தியைக் குறிக்கும் வெண்பா வொன்றுண்டு.

பயிற்சி 3.08 புறத்திணை போர்நெறி வாய்பாட்டு வெண்பா அறிதல்

புறத்திணையின் போர்நெறிகளில் சூடும் மலர்களை
.. மேற்சொன்னவாறு காட்டும்
.. வாய்ப்பாட்டு வெண்பா வொன்றுளது.
.. அது யாதெனக் கண்டறிந்து
.. அதன் அடிகளைச் 
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.


வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
யதுவளைத்த லாகு முழிஞை யதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.

No comments:

Post a Comment