1. புலவர்க்கு வெண்பா புலி! புலவர்க்கு வெண்பா புலி என்றார் ஔவையார்! காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம் பேசுமுலா விற்பெதும் பைப்புலி - ஆசு வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப் புலவர்க்கும் வெண்பா புலி. --தனிப்பாடல் பொருள் உலகில் பிள்ளைக்கவிப் புலவர்க்கு .. அம்புலிப் பருவம் பாடுவது புலியாம்; சிறப்பாகப் பேசப்படும் உலாப் பாடும் புலவர்க்கு .. பெதும்பைப் பருவம் பாடுவது புலியாம்; ஆசு கவியோர்க்கு (நினைத்தவுடன் பாடும் கவியோர்க்கு) .. வண்ணப் பாடல் புலியாம்; மற்றெல்லாப் பாவலர்க்கும் .. வெண்பா பாடுதல் புலியாம் .. (அச்சத்துடன் எதிர்கொள்ளும் செயலாகும்). கணினியின் வரவாலோ என்னவோ .. இன்று வெண்பா புலி .. மரபு கவிஞர் ஒவ்வொருவரும் .. முதலில் விழைந்து பயின்று எழுதிப் .. பாராட்டும் செல்லப் பூனையாகி விட்டது! 2. வெண்பா நூல்கள் (புலவர் குழந்தையின் ’தொடையதிகாரம்’ நூலிலிருந்து)
செந்தமிழ்ப் பாட்டுகள் செய்யுளாய் ஊற்றெடுக்க / அந்தமில் யாப்பை அறிந்தபின் - சொந்தமாய்ப் / பற்பலவாம் யாப்பினில் பாக்கள் புனைந்துநாம் / கற்கும் பயிலரங் கம்.
Wednesday, August 29, 2018
வெண்பா செய்தித் திரட்டு - 01.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment