தெரியுமா உங்களுக்கு?! - 001 குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற .. ஐந்து திணைகளில் பாடப்பெற்ற .. அகநானூற்றுச் செய்யுள்களில் .. ஒவ்வொரு திணைப் பாடலும் .. ஒன்று அல்லது மேற்பட்ட .. குறிப்பிட்ட எண்ணில் முடியும்! இங்ஙனம்: 1, 3, 5, 7. 9 எண்கொண்டு முடியும் பாடல்கள் - பாலை 4 எண்கொண்டு முடியும் பாடல்கள் - முல்லை 2, 8 எண்கொண்டு முடியும் பாடல்கள் - குறிஞ்சி 6 எண்கொண்டு முடியும் பாடல்கள் - மருதம் 10-ன் அடுக்கு எண்கொண்டு முடியும் பாடல்கள் - நெய்தல் இந்தச் செய்திகளைக் காட்டும் வெண்பாக்கள் மூன்றுண்டு. அவற்றைக் கண்டறிவோம். பயிற்சி 3.03 அகநானூறு திணை-பாடலெண் வாய்பாட்டு வெண்பா அறிதல் அகநானூறு திணை காட்டும் பாடல் எண்கள் காட்டும் .. வாய்ப்பாட்டு வெண்பாக்கள் மூன்று உள்ளன. .. அவை யாவையெனக் கண்டறிந்து .. அவற்றுள் ஒன்றை அதன் அடிகளைச் .. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.வியமெல்லாம் வெண்டே ரியக்கங் கயல்மலர்ந்த தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர் நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட வெட்டு மிரண்டுங் குறிஞ்சியாக் குட்டத் திவர்திரை பத்தா யியற்பட யாத்தான் தொகையி னடியதனைத் தோலாச் செவியான் வகையின் நெடியதனை வைப்பு. ... 1 ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை யோதாது நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - யன்றியே யாறாம் மருத மணிநெய்த லையிரண்டு கூறா தவைகுறிஞ்சிக் கூற்று. ... 2 பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்த னாலு நனிமுல்லை நாடுங்கான் - மேலையோர் தேறு மிரண்டெட் டிவைகுறிஞ்சி செந்தமிழி னாறு மருத மகம். ... 3
செந்தமிழ்ப் பாட்டுகள் செய்யுளாய் ஊற்றெடுக்க / அந்தமில் யாப்பை அறிந்தபின் - சொந்தமாய்ப் / பற்பலவாம் யாப்பினில் பாக்கள் புனைந்துநாம் / கற்கும் பயிலரங் கம்.
Thursday, August 30, 2018
தெரியுமா உங்களுக்கு?! - 001
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment