Thursday, August 30, 2018

தெரியுமா உங்களுக்கு?! - 002

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
தெரியுமா உங்களுக்கு?! - 002

ஐங்குறுநூறு தொகுப்பு
.. ஐந்து திணைகளாக ஒவ்வொன்றுக்கும் 
.. நூறு செய்யுள்கள் கொண்டதாக உள்ளது.
.. இவற்றைப் படியோர் ஐந்து புலவர்கள்:
.. குறிஞ்சி - கபிலர்
.. முல்லை - பேயனார்
.. மருதம் - ஓரம்போகியார்
.. நெய்தல் - அம்மூவனார்
.. பாலை - ஓதலாந்தையார்.

இந்தச் செய்தியைக் குறிக்கும் வெண்பா வொன்றுண்டு.

பயிற்சி 3.04 ஐங்குறுநூறு புலவர்கள் பெயர்

ஐங்குறுநூறு தொகுப்பின் 
.. ஐந்து புலவர்பேர் காட்டும் 
.. வாய்ப்பாட்டு வெண்பா வொன்றுளது.
.. அது யாதெனக் கண்டறிந்து
.. அதன் அடிகளைச் 
.. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.


மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.
தெரியுமா உங்களுக்கு?! - 003 கலித்தொகை .. ஐந்து திணைகளாக உள்லது. .. இவற்றைப் படியோர் ஐந்து புலவர்கள்: .. குறிஞ்சி - கபிலர் .. முல்லை - சோழன் நல்லுருத்திரனார் .. மருதம் - மருதனிள நாகனார் .. நெய்தல் - நல்லந்துவனார் .. பாலை - பெருங்கடுங்கோ. இந்தச் செய்தியைக் குறிக்கும் வெண்பா வொன்றுண்டு. பயிற்சி 3.05 கலித்தொகை புலவர்கள் பெயர் வாய்பாட்டு வெண்பா அறிதல் கலித்தொகையின் .. ஐந்து புலவர்பேர் காட்டும் .. வாய்ப்பாட்டு வெண்பா வொன்றுளது. .. அது யாதெனக் கண்டறிந்து .. அதன் அடிகளைச் .. சீர்ப் புணர்ச்சியுடன் எழுதுக.
பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருத - மருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லை நல்லந் துவன்நெய்தல்
கல்விவலார் கண்ட கலி.

No comments:

Post a Comment