சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/219278442136028
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.
புள்ளிகள் (மொத்தம்: 55)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
1 => ஒவ்வோர் அடிக்கும்
1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
1 => முதலடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
5 => சரியாக ஒலிபிறழ்ந்து அமையும் முதல்-முடிவுச் சொல்லுக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.
ஐம்மீன் மதிப்பீடு:
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).
***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.
ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.
விளக்கம்:
* குறட்பா வித்தகம்: முதற்சீர் எழுத்துகள்
.. இரண்டோ, மூன்றோ இறுதிச் சீரில்
.. ஒலி மாறி வரவேண்டும்.
.. ராம் என்பது மார் என்றும்
.. கூத்து என்பது தூக்கு என்றும்
.. ஒலி மாறி வருவது போல.
ஒலிபிறழ் உத்தி
* ஒரு சொல் ஒலிபிறழ்ந்து
.. வேறு சொல்லாக ஒலிக்க,
அதன் முதல்-இறுதி எழுத்துகள்
.. தம் குறில்/நெடில் ஒலியைத்
.. தம்முள் மாற்றிக்கொள்ளலாம்.
சான்றுகள்:
.. கவை => வகை, மீசை => சீமை
.. ராம் => மார், ரோம் => மோர்
.. கச்சு => சக்கு, கோப்பு => போக்கு
இறுதி எழுத்து ஒற்றானால்
.. முதல்-ஒற்று முன்னுள்ள எழுத்துகள்
.. தம்மொலியை மாற்றிக்கொள்ளலாம்.
சான்றுகள்:
.. தரம் => ரதம், கப்பல் => பக்கல், சுத்தம் => துச்சம்,
.. பொத்தல் => தொப்பல், வேதம் => தேவம்.
இறுதி எழுத்து ஒற்றில்லை எனினும்
.. முதல்-ஈற்றயல் எழுத்துகள்
.. தம்மொலியை மாற்றிக்கொள்ளலாம்.
சான்றுகள்:
.. கேசரி => சேகரி, சானகி => நாசகி
.. மானிலை => நாமிலை, வேதனை => தேவனை.
ஒலிபிறழ் சொற்களில்
.. இடையில் உள்ள எழுத்துகள்
.. தக்கபடி மாறுதல் காண்க.
.. கப்பல் => பக்கல், சுத்தம் => துச்சம்
.. குச்சு => சுக்கு,
சான்றுகள் தொகுப்பு:
ஒலிபிறழ் இரண்டெழுத்துச் சொற்கள்
.. கவை => வகை, சதை => தசை, சீமை => மீசை,
.. சூது => தூசு, தூவு => ஊது, தேசு => சேது,
.. பசி => சபி, பசை => சபை, மாது => தாமு (பெயர்),
.. மாசி => சாமி, ராம் => மார், யார் => ராய் (பெயர்)
.. வார் => ராவ் (பெயர்), வாசு => சாவு, வீசு => சீவு.
ஒலிபிறழ் மூன்றெழுத்துச் சொற்கள்
.. கச்சு => சக்கு, கப்பல் => பக்கல், குருவி => உருகி,
.. காப்பு => பாக்கு, கேசரி => சேகரி, கோப்பு => போக்கு,
.. சாக்கு => காச்சு, சீப்பு => பீச்சு, சுத்தம் => துச்சம்,
.. தரம் => ரதம், தாடகை => காடதை (காடு+அதை)
.. தாக்கு => காத்து, பாசம் => சாபம், பொத்தை => தொப்பை,
.. பொத்தல் => தொப்பல், போத்து => தோப்பு, மாதம் => தாமம்,
.. மாதுளை => தாமுளை (தாம்+உளை), மோசம் => சோமம்,
.. வசம் => சவம். வனம் => நவம், வாசல் => சாவல்.
பயிலிழை குவெ.06. வித்தகம்:
.. முதல் ஒலிபிறழ் முடிவு
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா
விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவின் முதற்சீரில் வரும் சொல்
.. அதன் ஈற்றுச் சீர்களில்
.. ஒலிபிறழ்ந்து வரும் சொல்லாய் அமையுமாறும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க),
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனை அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள்
.. புனைந்து எழுதுவோம்.
தொகுப்பு
01/06/2018 (வெள்ளி) இரவு வரை
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில்
.. பின்னர் வெளியிடப்படும்.
***
அடியேன் பங்காக
குறட்பா வித்தகம்: முதற்சொல் முடிவில், ஒலிபிறழ் சொல்லாக
(குறள் வெண்பா)
(வித்தகம்: குறள்வெண்பா, முதற்சொல் ஒலிபிறழ் முடிவில்)
ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1
ரோம்நாட்டில் அன்று ரொட்டியே சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2
ரவைதரும் உப்புமா ராத்திரிக்குச் சட்னி
சுவைப்போமே உள்ள வரை! ... 3
வார்த்திகம் எய்தியதில் வற்றி உருமாறி
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4
குச்சுவீட்டில் ஏது குளம்பியாய்? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5
[குளம்பி = காப்பி]
தலாரூபாய் நூறுதரத் தன்பங்கு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6
சாவுபல தீவிபத்தில் சாவுற்றோர் மத்தியில்
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7
காத்துப் பயனில்லை கல்நெஞ்சன் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8
தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9
தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த,
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10
--குருநாதன் ரமணி
★★★★★