Monday, November 26, 2018

பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/268508533879685/
கவிஞர் சியாமளா ராஜசேகர்
வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்

அலைகளி லாடு மழகிய மீனை 
வலைவீசி வாரிடநீ வா. ... 1

கைவிர லாலே கவிதை எழுதியே 
மைவிழி யாளை வளை. ... 2

முழுமதி போலே முகமுடை யாளை
அழவிட லாமோ அழை. ... 3

பெரிய வுருவொடு பேரழ கான
அரிய வரிமா வது. ... 4

கருநீல மேனியனே காதலொடு பாட 
வருவாயா தேடி மனை. ... 5

வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு

தனிமை யிரவு வனிதை மகிழ
இனிய கவிதை எழுது. ... 6

இரவு நிலவோ டினிய உறவு
விரிய விரிய இளகு. ... 7

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன் 

நிசமா கனவா நினைவி லிலையே 
வசமா மவனே விபு. ... 1

குழலி னினிய குழக னிசையே 
கழலி லொலிசெ யசைவு. ... 2

அயனோ அரனோ அரியோ உளமே
பயனோ பணிவே பரவு. ... 3

வளமா நலமா வரமா வசவா 
களமோ கழலே கருது... 4

உறவே இலதா உலகே களரே 
பிறவா வரமே பெரிது. ... 5

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன் 

அழிபசி தீர அறநெறி தேறா
வழிதனை நாடுவதே னோ? ... 1 (வகை 2)

ஆடியோடி வேலையே ஆதாய மேதுமிலை 
வாடிவதை யாவதே னோ? ... 2

மாறு முலகிலே மாறா ததருளிட
ஏறு மயிலேறி வா. ... 3

ஆகா மனிதா அவசர மாயழிய
போகா வழியிலே  போ. ... 4

தேடி வருதுயரே தேயுமவ னாசியாலே
நாடி வருமே வழி. ... 5

★★★
கவிஞர் பாவலர் சீனி பழனி 

படியுடை யேணி முடிதலை யேறா
அடிதொழு பேடி கரி. ... 1

மலையின் மகிமையால் வானிழி நீரே
குலையென வாழை வரவு. ... 2

சிலையென நாளோ செலவது தானே
நிலையெனவோ நாளிர வு. ... 3

கிழவது தானே பழகா இளமை
நிழலது காணா நிலவு. ... 4

தாயொடு பிள்ளை தலைப்படு பாசமோ
காயொடு நீடு கனி. ... 5

மரமிடை ஓரிள மானுட னோட
பரிவுடை மாமயி லாடு. ... 6

உடலு முயிறு மொருமை யுலகே
திடமு முரமுமே தேடு. ... 7

★★★
கவிஞர் குருநாதன் ரமணி
வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு

அருவி யழகு மருவு குவடு!
குருவி யழகது கூடு! ... 1

பரிதி சிகரி பரவி யொளிர
உருவி யுருவி யுறை. ... 2
[சிகரி=மலை, உருவி=பூமி, நாயுருவி]

அகட விகட மகுடி யுருள
எகிரி யெழுவ தரவு. ... 3

காசினி வாசினி ஆசினிவி லாசினி
பூசிநீ மாசிலை யே. ... 4
[ஆசினி=>வானுறைபவள், விலாசினி=ஒளிமிக்க பெண்]

வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்

நாலடி யாருள நாயக மாமணி
மேலடி யாருள மே! ... 5

குகனே முருகா குமரா விசாகா
அகமே றியெனை யணை! ... 6

உளதோ இலதோ உறவோ தனியோ
வளமோ வறிதோ வழி! ... 7

ஓதுமறை நாயகனே ஊனமிலி யேயெனது
வாதுமன மாயையறு வா! ... 8

மலையி லருவி மறையு மழகு
விலையி லதனை விழை! ... 9

உடலி லுயிரென வோடு மிறையே!
மடமா மனமே வளை! ... 10

★★★
கவிஞர் திசேசு

உரலுறு கோலென வாட லொழிய
அரனது பாத மடை. ... 1

பணம தழகோ பயனோ மனைவி
குணமது கூடா வழி. ... 2

ஆதி சிவனுடை பாதியினை நாடுவதே
வேதநெறி கூறு மொழி. ... 3

எதுஇனிது யாழோ தமிழோ வினவு
மதுமழலை கேளாத காது. ... 4

கணநா தனடிதொழ ஏனோ கவலை
வினைதீ ரவழிலையே வேறு. ... 5

உளதா யுணர உளதது மாறி
இலதா யுளது மது. ... 6

★★★★★

பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/268508533879685/
உத்தி அமைப்பு: 
.. பைந்தமிழ்ச் சோலைப் பாவலர் மா. வரதராசன் அமைத்த 
.. ஒற்றிலா வெண்பா உத்தியை மூலமாகக் கொண்டு, 
.. அதைக் குறள் வெண்பாவுக்கு இரண்டு வகைகளாக 
.. அடியேன் அமைத்தது.

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்
* குறட்பா வித்தகம்: ஒற்றிலாக் குறள் (இருவகை)
.. குறட்பாவின் சீர்களில் எங்கும் ஒற்று வராமல் அமைவது.

இந்த உத்தியை இரண்டு வகைகளில் அமைக்கலாம்.

1. அகம் மற்றும் புறப் புணர்ச்சிகளில் ஒற்றுகளை மறைத்தல்.
* அகப்புணர்ச்சி என்பது
.. ஒரு சொல்லின் உறுப்புகள் இணைந்து
.. ஒரே சொல்லாக வருவது.
.. அகம் புணர்ந்த சொற்கள் இடைவெளியின்றி எழுதப்படும்.
.. சான்றுகள்
.. நாம்+கள்=>நாங்கள், மரம்+அத்து+ஐ=>மரத்தை, வெட்டு+இன்+ஓம்=>வெட்டினோம்.

* புறப்புணர்ச்சி என்பது
.. இரண்டோ மேலோ சொற்கள் இணையும் போது
.. எழும் புணர்ச்சி விகாரங்களுடன் 
.. எழுதப்படும் சொற்றோடர்.
.. புறம் புணரும் சொற்றொடரில் சொற்கள்
.. இடைவெளி விட்டு எழுதப்படும்.
.. சான்றுகள்
.. மலைவீ ழருவி யாறென வோடியது.
.. சோற்றைத் தின்றான்.

எனவே,
.. சீர்களின் அகம் மற்றும் புறப் புணர்ச்சியில் 
.. ஒற்றுகள் மறைய அமைக்கும் போது 
.. வல்லினம் மிகுமிடங்களில் ஒற்று வருவதை அறிந்து
.. அதுபோன்ற சொற்களைத் தவிர்க்கவேண்டும்.

கீழ்வரும் குறட்பாவின் ஒற்றிலா அமைப்பு சரி.
.. முருக னருள விருளு மகல
.. மருளை யறியு மனது.

கீழ்வரும் குறட்பாவின் ஒற்றிலா அமைப்பில் தவறென்ன?
.. கருணை மனது கனிய கனிய 
.. அருணை முனியை யறி.
தவறு: கனியக் கனிய => ஒற்று மிகும்.

இதைத் தவிர்க்க இப்படி அமைக்கலாம்:
.. கருணை மனது கனிய விரிய
.. அருணை முனியை யறி.

2. ஒற்றுகளே வராத சொற்களில் அமைத்தல்
.. இவ்வகையில் அகம், புறப் புணர்ச்சிகளில் 
.. மறையும் ஒற்றுகள் இல்லாத
.. சொற்களைத் தேர்ந்தெடுத்து குறட்பா அமைக்கவேண்டும்.

கீழவரும் குறள் இவ்வகைத்தே.
.. பிறவி யிறவு யறவு விழைவா?
.. உறவு வரவு குறை.
.. [இறவு=>இறப்பு, அறவு=>ஒழிகை]

பயிலிழை குவெ.09. ஒற்றிலாக் குறள்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒற்றுகள் முழுதும் இல்லாமலோ (இரண்டாம் வகை)
.. மறைந்தோ அமைவதாகவும் (முதலாம் வகை) 
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனையோ எதுகையோ அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் புனைந்து
.. மேற்சொன்ன இரு வகைகளாகப் பிரித்து எழுதுவோம்.

* நாம் எழுதும் ஒற்றிலாக் குறளில் ஒற்றுகள்
.. சீர்களின் அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் முதல் வகையாகவோ
.. ஒற்றுகளே வராத இரண்டாம் வகையாகவோ அமையலாம்.
* இவ்விரு வமைகளில்
.. ஒற்றுகள் மறையும் முதலாவது சிறப்பெனில்
.. ஒற்றுகளே வரவியலா இரண்டாவது மிகுசிறப்பு என்று கொள்வோம்.

தொகுப்பு
29/06/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக
குறட்பா வித்தகம்: ஒற்றிலாக் குறள்
(குறள் வெண்பா)
வகை 2. ஒற்றுகளே வராத சொல்லமைப்பு

அருவி யழகு மருவு குவடு!
குருவி யழகது கூடு! ... 1

பரிதி சிகரி பரவி யொளிர
உருவி யுருவி யுறை. ... 2
[சிகரி=மலை, உருவி=பூமி, நாயுருவி]

அகட விகட மகுடி யுருள
எகிரி யெழுவ தரவு. ... 3

காசினி வாசினி ஆசினிவி லாசினி
பூசிநீ மாசிலை யே. ... 4
[ஆசினி=>வானுறைபவள், விலாசினி=ஒளிமிக்க பெண்]

வகை 1. அகம்/புறப்புணர்ச்சியில் மறையும் ஒற்றுகள்

நாலடி யாருள நாயக மாமணி
மேலடி யாருள மே! ... 5

குகனே முருகா குமரா விசாகா
அகமே றியெனை யணை! ... 6

உளதோ இலதோ உறவோ தனியோ
வளமோ வறிதோ வழி! ... 7

ஓதுமறை நாயகனே ஊனமிலி யேயெனது
வாதுமன மாயையறு வா! ... 8

மலையி லருவி மறையு மழகு
விலையி லதனை விழை! ... 9

உடலி லுயிரென வோடு மிறையே!
மடமா மனமே வளை! ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Saturday, November 17, 2018

பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/250610645669474/
01. கவிஞர் சியாமளா ராஜசேகர்

வெண்மதியைக் கார்மேகம் மூடித் திறப்பதைக் 
கண்ணிருந்தும் காணாதோ சம்பு. ... 1
( சம்பு - சூரியன் )

ஆடா(து) அசையாது செந்நெல் பசும்வயலில்
பாடாமல் பாடிநீ யாடு. ... 2

இரவும் பகலும் உறங்கி விழித்தால்.
வருவாயும் வாரா(து) ஒளி. ... 3

நல்லன கெட்டன ஆராய்ந் தறியாயேல்
நில்லாமல் செல்லுமோ தீது. ... 4

போய்விடும் வந்ததுபோல் இன்பமும் துன்பமும் 
வாய்மையுடன் பொய்விலக்கி வா. ... 5

★★★
02. கவிஞர் வெங்கடேசன்

உள்ளதும் இல்லதும் உண்மையும் பொய்யுமாய்க்
கொள்ளும் இறையினுக்கொப் பில். ... 1

கைகொடு கால்தொடக் கற்றவர் கல்லார்ந்த
மெய்கொண் டுயிர்ப்பர்பற் கால். ... 2 

கைகொடு காலளத்தல் ஒல்லுமோ மாட்டாதே
பொய்கொடு மெய்வளர்க்குங் கால். ... 3

துயில்வோர் விழித்திடச் சோம்பர் உழைக்கப்
பயின்றிடக் கற்பித் தெழுப்பு. ... 4

கருப்பானை வெண்கோ டுடைத்தற்றே இல்லார்க்(கு)
உருக்குலைந்தும் நேர்மை ஒளி. ... 5

★★★
03. கவிஞர் ஐயப்பன்

சேரும் பிரியும் சிவப்பு கருப்பொடு 
நீரும் நெருப்பும் முரண். ... 1

நஞ்சை அமுதாக்கும் நாட்டானே காட்டானே 
நஞ்சோ அமுதர்க் கமுது. ... 2

அறிவிலி ஞானம் அறமிலா நீதி 
திறக்க வடைக்கும் அறிவு. ... 3

ஊடலாற் கூடலே வாயென்க போயென்பாள் 
நாட விலக்கும் நயந்து. ... 4

இணைந்தார் பிரிந்தால் சுனைநீர் கனலாம் 
கணமும் யுகமாய்ப் பிரிவு. ... 5

★★★
04. கவிஞர் இராமசாமி வெங்கடராமன்

கல்லாரோ கற்றோரோ இல்லாரோ உள்ளோரோ
எல்லோரு மோர்நாள் மண். ... 1

வெட்டுதலோ ஒட்டுதலோ கோபமோ சாந்தமோ
கெட்டியாயின் நீர்க்குமோ நட்பு? ... 2

காலு மரையு முழுவது முக்காலும் 
ஆலுண் டமுதன் தலை. ... 3

எண்ணு மெழுத்து முரைத்தபின்னும் ஊமையாயின் 
கண்ணிருந்து மந்தகனென் றெள். ... 4
(எண் = மதிப்பு, எள் = நிந்தை ஆகவே முரண்)

பொய்யினை உண்மைபோல் போற்றிவாழ் ஊமையர்க்குத் 
தெய்வமும் பேயுமோ மெய்? ... 5

★★★
05. கவிஞர் சீனி பழனி

இரவும் பகலும் எண்ணம் எழுத்து
பெருகும் அரிதே ஒளி. – 1.

இரவில் கதிரியக்க வெம்மை குளுமை
தெரியும் மறையும் நிலவு. = 2.

அலையும் நிலைக்கும் ஆர்க்கும் அமைதி
தலைதொடப் பாதம் தணி. - 3.

கனியும் காயாய்ப் பேச்சினில் மௌனம்
கனவில் நனவெனக் காய். - 4.

துறவைத் துறவா மொழியும் மனமும்
சிறைகொள் பறவைச் சிறை. - 5.

★★★

06. கவிஞர் அரங்க இரகுநாதன்

பிறப்பும் இறப்பும் பிறர்க்கும் நமக்கும் 
மறப்பும் நினைவும் மறைந்து. ... 1

மலையில் மடுவில் மறையும் தெரியும் 
நிலையாய் அலையாய்க் கடல். ... 2

பாராதே பார்த்திடுவான் வாராதே வந்திடுவான் 
தேராதே தேரிக்கண் மூடு. ... 3

பாற்கடல் கரியவான் பார்,கடல் அண்டமும் 
சேர்பல பூதங்கள் நீர். ... 4

★★★
007. கவிஞர் திசேசு

துன்பமும் இன்பமும தொட்டும் தொடாமலும்
தோன்றி மறைதல் சுகம். ... 1

தீயினுள் நீரென நீரினுள் தீயெனத்
தாயினுள் சேயதும் நீர். ... 2

ஓடியது நிற்கும் உடைந்ததும் ஒட்டுமே
தேடியது கிட்டி வரின். ... 3

பல்லுயிரும் ஒவ்வொன்றாய்க் காக்கப் படைத்ததை
இல்லையென ஆக்குவதும் ஒன்று. ... 4

கூடிவர ஓடிவிடும் கொண்டதும் தந்ததுமே
இன்பந்தான் துன்பே விலகு. ... 5

உறவில் பிரிவோ உண்மையோ பொய்யில்
நறவில் நஞ்சோ பகை. ... 6

பேதையை மேதையில் மௌனத்தைப் பேச்சினில்
காணாமல் காண்ப தறிவு. ... 7

தலையொடு காலையும் தாங்கிடும் வீழ்த்தும்
நிலையினில் நில்லாத தொண்டு. ... 8

இலையதுவே உணடென் றிசைவார் மறுத்திடுவார்
நல்லவரில் கெட்டவரு முண்டு. ... 9

★★★
008. கவிஞர் குருநாதன் ரமணி

செல்வம் வருமது தீர்ந்திடும் மீள்வரினும்
கல்லும் கொழுவற் கடம். ... 1

[கல்லும் = அரித்திடும்; கொழு = செழித்த; 
வற்கடம் = வறட்சி என்பது முரண்.]

உயிரும் உடலும் துயிலும் விழிக்கும்
கயிற்றில் அரவின் அழிவு. ... 2

[உயிர் அழிவற்றது என்பதால் இறுதிச் சொல் 
அழிவு என்பது முரண்.]

தூளியில் தூங்காக் குழந்தைதன் அன்னையை
ஏளனத்தில் போற்றத் தெளிவு. ... 3

[தூளி = குழந்தைத் தொட்டில், புழுதி; 
எனவே தெளிவு என்பது முரண்.

அன்னை எவ்வளவுதான் ஆட்டித் தூங்கவைக்க முயன்றாலும் தூங்காத குழந்தை
தூளியை விலக்கித் தன் அன்னையை ஏளனமாக எட்டிப் பார்க்கிறது. இருப்பினும்
அதன் பார்வையில் ஏளனத்தை விட அன்னையைப் போற்றும் பாசமே தெரிவதால்
அன்னைக்கு குழப்பமோ சினமோ விளையாது ஒரு தெளிவு பிறக்கிறது.]

சிவம்:
இயைபில் முரணாய் இலங்கி யொடுங்கி
முயல்விலே நிற்கும் முரண். ... 4

அலையெலாம் ஓய்ந்தபின் செய்திட எண்ணில்
நிலையாகிப் போகும் கரை. ... 5

கணமே யுகமாகிக் காதல் சினமாகும்
தணத்தல் அணத்தல் தனி. ... 6

[தணத்தல் = நீங்குதல், பிரிதல்; அணத்தல் = மேலெழும்புதல், பொருந்துதல்;
கணம் என்றால் கூட்டம் என்னும் பொருளில் தனி என்பது முரண்.]

நிருத்தத்தில் நிற்கும் இறையினைக் கல்லென்
றிருந்திடும் போக்கை நிறுத்து. ... 7

விருத்தம் இளமை விழிப்பினில் ஓய்வு
அருத்தனை முழுதும் ஒன்று. ... 8

[விருத்தம் = விருத்தி, மூப்பு. ஓன்று என்பது விருத்திக்கு முரண்.
அருத்தன் = பாதி உடலோன், எனவே முழுதும் என்றது முரண்.]

தூங்காமல் தூங்கிடும் தூக்க விழிப்பினில்
நீங்காமல் நிற்றல் விழிப்பு. ... 9

[ஈற்றுச் சீரில் விழிப்பு என்பதற்கு எச்சரிக்கை என்னும் பொருள்.]

மெய்யிது பொய்யெனும் எண்ணம் செயலுறுதல்
உய்வெனவே ஆழும் உயிர். ... 10

★★★★★

பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/228540057876533/
உத்தி அமைப்பு: கவிமாமணி இலந்தை இராமசாமி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்:
* குறட்பா வித்தகம்: அடிமுடி இடைமுரண் குறள்
.. 1. முதற்சீர், ஈற்றுச்சீர் (சீர்கள் 1,7) சொற்களில் முரண் அமையவேண்டும்.
.. 2. அப்படி அமையும் முரண் பொருள் முரணாக இருத்தல் வேண்டும்.
.. 3. இது தவிர, சீர்கள் 1-2, 3-4, 5-6 இவற்றில் முரண் அமையவேண்டும்.
.. இது சொல்முரணாகவோ, பொருள் முரணாகவோ இருக்கலாம்.

சான்றுச் சொற்கள்
சொல் முரண்
.. கால்-கை, நாங்கள்-நீங்கள், பிறப்பு-இறப்பு, 
.. உயர்வு-தாழ்வு, செம்மனம்-கருநாக்கு.
பொருள் முரண்
.. மேடு-பள்ளம், செல்வம்-வறுமை, தீ-நீர், 
.. அமுதம்-விடம், உடல்-உயிர்.
சொற்பொருள் முரண்
.. மௌனம்-கலவரம், பெருமலை-சிறுநிலம்,
.. கருவண்டு-பைங்கிளி, அறம்-மறம், இன்பம்-துன்பம்.

பயிலிழை குவெ.08. அடிமுடி இடைமுரண் குறள்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவில் சீர்கள் 1-7, 1-2, 3-4, 5-6
.. இவற்றில் வரும் சொற்கள் முரணாகவும்,
.. அவற்றுள் சீர்கள் 1-7 பொருள் முரணாகவும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க)
.. அமைத்தே,
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. (முரண் தொடை வருவதால் 
.. பொழிப்பு மோனை கட்டாயமில்லை)
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் 
.. புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
22/06/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக
குறட்பா வித்தகம்: அடிமுடி இடைமுரண் குறள்
(குறள் வெண்பா)

செல்வம் வருமது தீர்ந்திடும் மீள்வரினும்
கல்லும் கொழுவற் கடம். ... 1

[கல்லும் = அரித்திடும்; கொழு = செழித்த; 
வற்கடம் = வறட்சி என்பது முரண்.]

உயிரும் உடலும் துயிலும் விழிக்கும்
கயிற்றில் அரவின் அழிவு. ... 2

[உயிர் அழிவற்றது என்பதால் இறுதிச் சொல் 
அழிவு என்பது முரண்.]

தூளியில் தூங்காக் குழந்தைதன் அன்னையை
ஏளனத்தில் போற்றத் தெளிவு. ... 3

[தூளி = குழந்தைத் தொட்டில், புழுதி; 
எனவே தெளிவு என்பது முரண்.

அன்னை எவ்வளவுதான் ஆட்டித் தூங்கவைக்க முயன்றாலும் தூங்காத குழந்தை
தூளியை விலக்கித் தன் அன்னையை ஏளனமாக எட்டிப் பார்க்கிறது. இருப்பினும்
அதன் பார்வையில் ஏளனத்தை விட அன்னையைப் போற்றும் பாசமே தெரிவதால்
அன்னைக்கு குழப்பமோ சினமோ விளையாது ஒரு தெளிவு பிறக்கிறது.]

சிவம்:
இயைபில் முரணாய் இலங்கி யொடுங்கி
முயல்விலே நிற்கும் முரண். ... 4

அலையெலாம் ஓய்ந்தபின் செய்திட எண்ணில்
நிலையாகிப் போகும் கரை. ... 5

கணமே யுகமாகிக் காதல் சினமாகும்
தணத்தல் அணத்தல் தனி. ... 6

[தணத்தல் = நீங்குதல், பிரிதல்; அணத்தல் = மேலெழும்புதல், பொருந்துதல்;
கணம் என்றால் கூட்டம் என்னும் பொருளில் தனி என்பது முரண்.]

நிருத்தத்தில் நிற்கும் இறையினைக் கல்லென்
றிருந்திடும் போக்கை நிறுத்து. ... 7

விருத்தம் இளமை விழிப்பினில் ஓய்வு
அருத்தனை முழுதும் ஒன்று. ... 8

[விருத்தம் = விருத்தி, மூப்பு. ஓன்று என்பது விருத்திக்கு முரண்.
அருத்தன் = பாதி உடலோன், எனவே முழுதும் என்றது முரண்.]

தூங்காமல் தூங்கிடும் தூக்க விழிப்பினில்
நீங்காமல் நிற்றல் விழிப்பு. ... 9

[ஈற்றுச் சீரில் விழிப்பு என்பதற்கு எச்சரிக்கை என்னும் பொருள்.]

மெய்யிது பொய்யெனும் எண்ணம் செயலுறுதல்
உய்வெனவே ஆழும் உயிர். ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Saturday, November 10, 2018

பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/244255799638292/
தொ.001. இராமசாமி வெங்கடராமன்

மாலவனின் தங்கை மகனாம் பழனிமலை
வேலவனுன் கையிலென்வே லா? ... 1

ஆதிசிவன் மைந்தன் அருள்பெற் றடியார்க்கு
மேதினியில் தாழ்வோ பகர்? ... 2

மிழற்றும் மொழியால் வியக்கச் செயும்சேய்
மழலைக் கிணயெது சொல்? ... 3

நோக்கம் நிறைவேற நோன்பிருக்கும் அன்பரைக்
காக்க வருமய்ய னார்? ... 4

எல்லையில்லா இன்பமே என்னாட்ட மென்றுசொல்லும்
தில்லை நடராச னார்? ... 5

★★★
தொ.002. பாவலர் சீனி பழனி

கூடிழந்து வாடுமே குஞ்சுகள் என்றறிந்தும்
காடழிக்கச் சொன்னதார் சொல்? ... 1

கழனியெலாம் பச்சையாய்க் கண்ணில் நிறையும்
உழவர் உழைப்பன்றோ சொல்? ... 2
[சொல் => சொல்லு, புகழ்]

மாற்றம் உலகினில் மாறா நியதிகாண்
நேற்றெல்லாம் இன்றென்ன கூறு? ... 3
[கூறு => பங்கு, சொல்லு]

★★★
நி1. குருநாதன் ரமணி

இணைக்கும் பிரிக்கும் பிணைக்கும் எரிக்கும்
தணலா வதெது மொழி? ... 1

பிரித்தால் பொருள்தராப் பேரளவில் நிற்கும்
இரட்டைக் கிளவியா சொல்? ... 2

கல்லாய்க் கடவுளாய்க் காண்பதே உள்ளத்தில்
பல்வகை யாமோ பகர்? ... 3
[பகர் = சொல், ஒளி]

இயலிசை நாடகம் என்னும் தமிழில்
ஒயில்குன் றுவதெ(து) உரை. ... 4
[ஒயில் = ஒய்யாரம், அலங்காரம்]

பேத்தலாய்க் கேட்டனன் பிட்டைக் கிழவியிடம்
கூத்தனவன் கொண்டதெது கூறு? ... 5

சீதைக்கு ராகவன் என்ன உறவென்று
பேதையே இப்போது கேள்? ... 6
[கேள் = வினவு, கணவன்]

சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
முந்தாச் சிவநந் தனார்? ... 7

பரிமேல் அமர்ந்தவண்ணம் பாழியெல்லைக் காவல் 
புரந்தருள் செய்யுமைய னார்? ... 8
[பாழி = ஊர்]

வாழைத்தார் முன்வைத்தே வாசமுறும் வண்ணமலர் 
ஏழையிறைக் குத்தந்த தார்? ... 9
[தந்ததார் = தந்த மாலை, தந்தது ஆர்]

வெள்ளைத் தலையுடுத்தி வீர முறுக்குடன்
அள்ளுதமிழ் பாரதி யார்? ... 10

★★★★★

பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/219278442136028/
உத்தி அமைப்பு: கவிமாமணி இலந்தை இராமசாமி

அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 55)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => முதலடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
 5 => சரியாக எதிரொலித்து அமையும் வினா-விடைச் சொல்லுக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்:
* குறட்பா வித்தகம்: எதிரொலிக் குறள்
.. குறட்பாவின் ஈற்றுச் சொல்
.. வினாவாகவும் அந்த வினாவின் விடையாகவும் 
.. இருத்தல் வேண்டும்.

அதாவது
.. ஈற்றுச் சொல்லில் ஒரு வினாவும்
.. அதற்கான விடையும் அமைதல் வேண்டும்.

அவ்வாறு அமையும் ஈற்றுச் சொல்
.. தன்னளவிலோ, முன்வந்த
.. சொல்லுடன் சேர்ந்தோ
.. வினா-விடையாக அமையும்.

இவ்வாறு ஒரே சொல்
.. வினா-விடையை எதிரொலிப்பதால்
.. இங்ஙனம் எழும் குறள் வெண்பா
.. எதிரொலிக் குறள் என்னும் பெயர் பெறும்.

சான்றுகள்:
தன்னளவில் வினா-விடைச் சொல்:
சொல், கூறு, செப்பு, கேள், மொழி, உரை போன்றன.

முன்வரும் சொல்லுடன் சேர்ந்து:
யார் => பாரதியார், ஔவையார், ஐயனார்
ஏன் => நாடுவதேன், இருந்ததேன்

பயிலிழை குவெ.07. எதிரொலிக் குறள்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவின் ஈற்றுச்சீரில் வரும் சொல்
.. தன்னளவிலோ அல்லது 
.. முன்னுள்ள சொல்லுடன் சேர்ந்தோ
.. வினாவாகவும் விடையாகவும் அமையுமாறும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க),
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனை அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் 
.. புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
08/06/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக

குறட்பா வித்தகம்: எதிரொலிக் குறள்
(குறள் வெண்பா)
(வித்தகம்: குறள்வெண்பா, ஈற்றுச்சொல் தன்னளவிலோ, முன்சேர்ந்தோ வினா-விடையாக)

இணைக்கும் பிரிக்கும் பிணைக்கும் எரிக்கும்
தணலா வதெது மொழி? ... 1

பிரித்தால் பொருள்தராப் பேரளவில் நிற்கும்
இரட்டைக் கிளவியா சொல்? ... 2

கல்லாய்க் கடவுளாய்க் காண்பதே உள்ளத்தில்
பல்வகை யாமோ பகர்? ... 3
[பகர் = சொல், ஒளி]

இயலிசை நாடகம் என்னும் தமிழில்
ஒயில்குன் றுவதெ(து) உரை. ... 4
[ஒயில் = ஒய்யாரம், அலங்காரம்]

பேத்தலாய்க் கேட்டனன் பிட்டைக் கிழவியிடம்
கூத்தனவன் கொண்டதெது கூறு? ... 5

சீதைக்கு ராகவன் என்ன உறவென்று
பேதையே இப்போது கேள்? ... 6
[கேள் = வினவு, கணவன்]

சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
முந்தாச் சிவநந் தனார்? ... 7

பரிமேல் அமர்ந்தவண்ணம் பாழியெல்லைக் காவல் 
புரந்தருள் செய்யுமைய னார்? ... 8
[பாழி = ஊர்]

வாழைத்தார் முன்வைத்தே வாசமுறும் வண்ணமலர் 
ஏழையிறைக் குத்தந்த தார்? ... 9
[தந்ததார் = தந்த மாலை, தந்தது ஆர்]

வெள்ளைத் தலையுடுத்தி வீர முறுக்குடன்
அள்ளுதமிழ் பாரதி யார்? ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Wednesday, November 7, 2018

பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/219278442136028
தொ.001. இராமசாமி வெங்கடராமன் (88888 54/55)

பாக்கைச் சவைத்துப் பசிமறக்கு மெங்களின்
நாக்கிற் கதுவேதான் காப்பு. ... 1

மாசி குளிர மழையாம் மனமுருகி
யாசிக்கக் காத்திடுசா மி. ... 2
(மாசி= மேகம்).

ராதாதா னென்றும் ரமணீய  மாய்மனதில்
ஆதார மாயொளிர்தா ரா. ... 3

கருப்புட லாயி னகத்தினில் வெண்மை
இருந்திடக் காணும் ரகு. ... 4

விசாகனைப் பாட வினைபொசுங்கும் தந்தை
அசோகனைச் சுட்ட சிவா. ... 5
(அசோகன் = மன்மதன்).

★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (88888 54/55)

வகைவகையாய் தின்பண்டம் வாய்க்குச் சுவையாய்
நகையணியோ பல்மணிக்க வை.  ... 1

கதைவிடு தூதினில் காட்டா எழில்நலம்
ததைபட தேருந் தகை. ... 2
(தகை – அழகு. ததை – நிறைத்தல்)

கோதை குரலழகே கோதில் மயிலகவே
ஓதை ஒளிரிளந் தோகை. ... 3

காவுதடி கொண்டோடி காட்டுமா கொன்றதுவே
கோவலர் தோள்வலை வாகு. ... 4
(வலைவாகு – வாகுவலையம்)

நதிபதி மாந்தர் நதிமணல் கொண்டார் 
அதிபுகழ் வாழ்நாள் நிதி. ... 5

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்

கதைத்து மனமுருகக் காதல் மொழியால் 
விதைத்த கவிதை தகைத்து. ... 1

நயந்து சுமக்கிறான் நாயகனாம் மாலை 
வியந்து பணியும் அனந்து. ... 2

வேதுதந்து காத்திடுவான் வேதமுதல் நாயகன் 
தீதொழிந்ந வண்பரமாம் தேவு. ... 3

ரகம்ரகமாய்ச் சேலைகள் பாஞ்சாலி காக்க 
அகம்குளிரத் தந்த கரம். ... 4

கருமுகிற் கண்ணனே காகுத்த னாக 
மறுயுகத தோன்றல் ரகு. ... 5

சரித்தும் அசைத்தும் சதிராடி உள்ளம் 
வரித்து மகிழ்வார் ரசித்து. ... 6

காத்து வழி்போகாக் கார்க்பந்தைச் சக்தியுடன் 
சாத்து விசையோடு தாக்கு. ... 7

சீவு தலைமுடி சேராது வீழ்ந்தாலோ 
கூவாது தூக்கியதை வீசு. ... 8

தேசு படைத்த திரேதா இராமனாம் 
ஈசன் படைத்ததே சேது. ... 9

உதைத்தபெருந் தூணில் உதித்தௌணன் தன்னை 
வதைத்தததச் சீயம் துவைத்து. ... 10

★★★
நி1. குருநாதன் ரமணி

ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1

ரோம்நாட்டில் அன்று ரொட்டியே சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2

ரவைதரும் உப்புமா ராத்திரிக்குச் சட்னி
சுவைப்போமே உள்ள வரை! ... 3

வார்த்திகம் எய்தியதில் வற்றி உருமாறி
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4

குச்சுவீட்டில் ஏது குளம்பியாய்? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5
[குளம்பி = காப்பி]

தலாரூபாய் நூறுதரத் தன்பங்கு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6

சாவுபல தீவிபத்தில் சாவுற்றோர் மத்தியில்
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7

காத்துப் பயனில்லை கல்நெஞ்சன் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8

தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9

தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த,
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10

★★★★★

பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.06. வித்தகம்: முதல் ஒலிபிறழ் முடிவு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/219278442136028
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 55)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => முதலடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
 5 => சரியாக ஒலிபிறழ்ந்து அமையும் முதல்-முடிவுச் சொல்லுக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்:
* குறட்பா வித்தகம்: முதற்சீர் எழுத்துகள் 
.. இரண்டோ, மூன்றோ இறுதிச் சீரில்
.. ஒலி மாறி வரவேண்டும்.
.. ராம் என்பது மார் என்றும்
.. கூத்து என்பது தூக்கு என்றும்
.. ஒலி மாறி வருவது போல.

ஒலிபிறழ் உத்தி
* ஒரு சொல் ஒலிபிறழ்ந்து 
.. வேறு சொல்லாக ஒலிக்க,
அதன் முதல்-இறுதி எழுத்துகள்
.. தம் குறில்/நெடில் ஒலியைத்
.. தம்முள் மாற்றிக்கொள்ளலாம்.
சான்றுகள்:
.. கவை => வகை, மீசை => சீமை
.. ராம் => மார், ரோம் => மோர்
.. கச்சு => சக்கு, கோப்பு => போக்கு

இறுதி எழுத்து ஒற்றானால்
.. முதல்-ஒற்று முன்னுள்ள எழுத்துகள்
.. தம்மொலியை மாற்றிக்கொள்ளலாம்.
சான்றுகள்:
.. தரம் => ரதம், கப்பல் => பக்கல், சுத்தம் => துச்சம்,
.. பொத்தல் => தொப்பல், வேதம் => தேவம்.

இறுதி எழுத்து ஒற்றில்லை எனினும்
.. முதல்-ஈற்றயல் எழுத்துகள்
.. தம்மொலியை மாற்றிக்கொள்ளலாம்.
சான்றுகள்:
.. கேசரி => சேகரி, சானகி => நாசகி
.. மானிலை => நாமிலை, வேதனை => தேவனை.

ஒலிபிறழ் சொற்களில்
.. இடையில் உள்ள எழுத்துகள்
.. தக்கபடி மாறுதல் காண்க.
.. கப்பல் => பக்கல், சுத்தம் => துச்சம்
.. குச்சு => சுக்கு, 

சான்றுகள் தொகுப்பு:
ஒலிபிறழ் இரண்டெழுத்துச் சொற்கள்
.. கவை => வகை, சதை => தசை, சீமை => மீசை, 
.. சூது => தூசு, தூவு => ஊது, தேசு => சேது, 
.. பசி => சபி, பசை => சபை, மாது => தாமு (பெயர்),
.. மாசி => சாமி, ராம் => மார், யார் => ராய் (பெயர்)
.. வார் => ராவ் (பெயர்), வாசு => சாவு, வீசு => சீவு.

ஒலிபிறழ் மூன்றெழுத்துச் சொற்கள்
.. கச்சு => சக்கு, கப்பல் => பக்கல், குருவி => உருகி,
.. காப்பு => பாக்கு, கேசரி => சேகரி, கோப்பு => போக்கு,
.. சாக்கு => காச்சு, சீப்பு => பீச்சு, சுத்தம் => துச்சம்,
.. தரம் => ரதம், தாடகை => காடதை (காடு+அதை)
.. தாக்கு => காத்து, பாசம் => சாபம், பொத்தை => தொப்பை,
.. பொத்தல் => தொப்பல், போத்து => தோப்பு, மாதம் => தாமம்,
.. மாதுளை => தாமுளை (தாம்+உளை), மோசம் => சோமம், 
.. வசம் => சவம். வனம் => நவம், வாசல் => சாவல்.

பயிலிழை குவெ.06. வித்தகம்: 
.. முதல் ஒலிபிறழ் முடிவு
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவின் முதற்சீரில் வரும் சொல்
.. அதன் ஈற்றுச் சீர்களில்
.. ஒலிபிறழ்ந்து வரும் சொல்லாய் அமையுமாறும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க),
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனை அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் 
.. புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
01/06/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக

குறட்பா வித்தகம்: முதற்சொல் முடிவில், ஒலிபிறழ் சொல்லாக
(குறள் வெண்பா)
(வித்தகம்: குறள்வெண்பா, முதற்சொல் ஒலிபிறழ் முடிவில்)

ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1

ரோம்நாட்டில் அன்று ரொட்டியே சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2

ரவைதரும் உப்புமா ராத்திரிக்குச் சட்னி
சுவைப்போமே உள்ள வரை! ... 3

வார்த்திகம் எய்தியதில் வற்றி உருமாறி
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4

குச்சுவீட்டில் ஏது குளம்பியாய்? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5
[குளம்பி = காப்பி]

தலாரூபாய் நூறுதரத் தன்பங்கு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6

சாவுபல தீவிபத்தில் சாவுற்றோர் மத்தியில்
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7

காத்துப் பயனில்லை கல்நெஞ்சன் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8

தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9

தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த,
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10

--குருநாதன் ரமணி

★★★★★