Wednesday, October 24, 2018

பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/239587280105144/
தொ.001. இராமசாமி வெங்கடராமன் (88888 53/55)

ஆறுதல் சொல்வதால் ஆவதென்  தேறுதலில்
மாறுமோ பெற்றமதிப் பாறு. ... 1

அரங்கம் வருதல் அடுக்குமோ வீட்டார்
இரவினின் அந்தரங் கம். ... 2

மாறு முலகினில் மாறாநல் மாந்தருக்
கூறெண்ண லாகாக்கைம் மாறு. ... 3

வேழம் ஒலிகுழல் மேவுமிசை போல்நாங்கள்
வாழச்செய் வோன்முகம்வே ழம். ... 4

சிவத்தை விரும்பிடும் சீலராய் வாழ 
உவகையாய்க் கூடும் சிவம். ... 5

★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (88888 52/55)

படிபடியாய் முன்னேறப் பாடுபடு வோனே
படித்திடு வான்தினப்ப டி.  ... 1

மலர்க்கண் மடந்தை மகிழ்மனச் சிந்தை
மலர்வணம் மாளிகைக் கண். ... 2

மாவட்டம் தோறும் மகளிர்ச் சேர்ந்திட
மாவிட்டுப் பூசை மா. ... 3 (விலங்குப் பூஜை).

திருமணப் பெண்டிர் பெருமகன் வீடு
தெருவினில் பூந்தேர் மணம். ... 4

திருமுறை வாணர் பெரும்புகழ் பின்தேர்
ஒருகுர வைப்பா முறை. ... 5

★★★
நி1. குருநாதன் ரமணி

நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு. ... 1

கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு. ... 2

உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு? ... 3

குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி. ... 4

படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி. ... 5

தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர். ... 6

தலைப்பறி விக்கவே தான்பாட நின்றாள்
கலையின்கை சேலைத் தலைப்பு. ... 7
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]

கதையால் கயவனின் கால்வீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை. ... 8

மாடுமீ தேறி வலம்வரும் அத்தனுக்குக்
காடாக வோர்சடைச்சும் மாடு. ... 9

ஆடு புலிபார்க்க அத்தனே தில்லைவனக்
காடுயர் அம்பலத்தே ஆடு. ... 10

★★★★★

பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன்

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.05. வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன்

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/217102455686960/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 55)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => முதலடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
 5 => சரியான வேறு பொருளுடன் அமையும் முதல்-முடிவுச் சொல்லுக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்:
* குறட்பா வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன்
.. குறள் வெண்பாவில் முதற்சீரில் வரும் சொல்
.. ஈற்றுச் சீர்களில் வேறு பொருளில் வரும்.

அதாவது, முதற்சீரில் 
.. ஒரு தனிச்சொல்லோ 
.. கூட்டுச்சொல்லோ அமைதல் வேண்டும்.
.. ஈற்றடியின் சீர்களில்,
.. அதே தனிச்சொல்லோ, அல்லது
.. அந்தக் கூட்டுச் சொல்லில் முதலில் நிற்கும் தனிச்சொல்லோ,
.. அதே சொல்லாகவோ, இன்னொரு சொல்லின் உள்ளிட்டதாகவோ, 
.. வேறு பொருளில் அமைதல் வேண்டும்.

குறிப்பு:
முதற் சீர் சொல்லும் 
.. ஈற்றுச்சீர்களில் வரும் சொல்லும்
.. வேறு பொருள் தர அமைதல் வேண்டும்.

சான்றுகள்:
கதை => தண்டாயுதம், கட்டுக்கதை => அதே தனிச்சொல்
கற்கண்டு => கருப்பஞ்சாற்றுக் கட்டி, கல்(லைக்) கண்டு => அதே கூட்டுச்சொல்
மாடு, சும்மாடு => தனிச்சொல், அதை உள்ளிட்ட இன்னொரு சொல்
தேர்தல், தேர் => கூட்டுச்சொல் => முதல்நிற்கும் தனிச்சொல்

பயிலிழை குவெ.05. வித்தகம்: 
.. முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன்
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவின் முதற்சீரில் வரும் சொல்
.. அதன் ஈற்றுச் சீர்களில்
.. வேறு பொருள் தர அமையுமாறும்
.. (இதன் விளக்கம் மேலே காண்க),
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனை அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் 
.. புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
25/05/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக

குறட்பா வித்தகம்: முதற்சொல் முடிவில், வேறு பொருளுடன்
(குறள் வெண்பா)
(வித்தகம்: குறள்வெண்பா, முதற்சொல் முடிவில்)

[முதற் சீரில் வரும் தனிச்சொல் ஈற்றுச்சீர்களில் வந்து
வேறு பொருளில் அமைதல்]

நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு. ... 1

கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு. ... 2

உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு? ... 3

குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி. ... 4

படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி. ... 5

தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர். ... 6

தலைப்பறி விக்கவே தான்பாட நின்றாள்
கலையின்கை சேலைத் தலைப்பு. ... 7
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]

கதையால் கயவனின் கால்வீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை. ... 8

மாடுமீ தேறி வலம்வரும் அத்தனுக்குக்
காடாக வோர்சடைச்சும் மாடு. ... 9

ஆடு புலிபார்க்க அத்தனே தில்லைவனக்
காடுயர் அம்பலத்தே ஆடு. ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Monday, October 8, 2018

பயிலிழை குவெ.04. வித்தகம்: முதல் பிறழ் முடிவு தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.04. வித்தகம்: முதல் பிறழ் முடிவு தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/236260860437786/
பா.036. புனிதா கணேசன் (87778 44/55)

புன்னகை பூத்திடப் புத்திரர் செய்திடும் 
புன்மை பொறுக்குந்தா யன்பு. ... 1

குலவும் கனிவால் குழவி யழுகை 
பலபோக் கிடுந்தா யுலகு. ... 2

சுலாவுங் கொடுத்தாளைச் சூழ்ச்சியால் மைந்தர்
விவாதம் புரிந்திடி லாசு. ... 3

தாதாவின் செம்மையே தந்திடு சண்முகனே 
மாதாவின் மாண்புந்தா தா. ... 4

சுகானுப வந்தருஞ் சூல்தாங்குந் தாய்க்குத் 
தகாதது நீதருங் காசு. ... 5

★★★
02. தொ.001. இராமசாமி வெங்கடராமன் (87777 47/55)

குருவின் அருளால் குறைவிலா வாழ்வு
செருக்கு மிகுந்தால் சருகு. ... 1

குடநீரில் ஓட்டக் குழந்தை அழுமாம்
படத்தில் வரைந்த படகு. ... 2

திருமாலின் நாமம் தினந்தோறும் சொன்னால்
அருள்தரு வார்மா ருதி. ... 3

கானக வாழ்வு கசக்க மனதிலே 
மோனமாய் வந்தகன கா. ... 4

குலவி யிருந்து குழப்பிட வேண்டுமோ
வீண்சண்டை வேண்டாம் விலகு. ... 5

★★★
பா.065. Ngs (78888 53/55)

குலவி மகிழவே கூப்பிடும் மூடா !
கலவி விரும்பேன் விலகு. ... 1

குருதி வராமல் குழந்தையின் காதில்
சுருதி நுழைத்தாள் திருகு. ... 2

துருவி வினாஎழுப்பும் தோகையிவள் ஆற்றல்
கருதி அளித்தார் விருது. ... 3

குரவ ருரைத்திட்டார் கொள்ளேன் உணவில் 
விரதத் தினத்தில் வரகு. ... 4

வாழவா சாகவா வஞ்சிகேட்டாள் நானுரைத்தேன்
தோழனாய் ஏற்றுவாழ வா. ... 5

★★★
தொ.002. பாவலர் சீனி பழனி (77777 46/55)

விகட மனத்தர் அகடம் கணிக்க
நகுமதி வீரக் கவி – 1

வசம்புடன் சுக்கு மிளகென நாளும்
நசித்திட நாமே சவம் – 2

தமிழில் குறள்நெறி தந்தார் எமக்கு
இமய மெனயின் பமிதம் – 3

மிருகம் அறியா நரகம் படைப்பார்
உருமி உதவாக் கருமி - 4

பசும்பாலின் மேன்மை பருகிட நன்மை
பசித்தே புசிக்கச் சுபம் - 5

★★★
நி1. குருநாதன் ரமணி

தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
ஆத்தா தடியெடுத் தா. ... 1

வாசிவாசி யென்று மனதில் முணுமுணுத்தால்
பேசுமொழி யாகும் சிவா. ... 2.

சுவாசப் பயிற்சி சுகம்கண்டு உள்ளம் 
சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3

சுகாதாரம் சிங்காரம் துய்பொருள் அல்ல
விகாரம் விளைப்பதே காசு. ... 4

வாசிக்கப் பேப்பரை மனசாரத் தந்திலன்
ஓசியா என்றான் சிவா. ... 5

புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
தன்னல மில்லாத அன்பு. ... 6

திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
உறவாவார் பார்த்’சா ரதி. ... 7

புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
அறியுமோ வாழ்வில் இரிபு? ... 8
[இரிபு=தோல்வி, வெறுப்பு]

குலவும் கலியில் குலுக்கிக் களித்துப்
பலவிதமாய் வாழும் உலகு. ... 9

விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
நிரல்களைச் செய்தார் ரவி. ... 10
[தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்]

★★★★★

பயிலிழை குவெ.04. வித்தகம்: முதல் பிறழ் முடிவு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.04. வித்தகம்: முதல் பிறழ் முடிவு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/214779069252632/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 55)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => முதலடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
 2 => ஈரெழுத்து முதல் பிறழ் முடிவுக்கு
 5 => சொல்லாக முதல் பிறழ் முடிவுக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

விளக்கம்:
* குறட்பா வித்தகம்: முதல் பிறழ் முடிவு
.. குறள் வெண்பாவில் முதற்சீரில் வரும்
.. முதல் இரண்டு எழுத்துகள்
.. செய்யுளின் ஈற்றுச் சீரிலோ
.. ஈற்றயல் மற்றும் ஈற்றுச் சீர்களிலோ
.. மாறி வரவேண்டும். இங்ஙனம்,
.. ஈற்றுச் சீரின் ஈற்றெழுத்து
.. முதற் சீரின் முதலெழுத்தாக அமையும்.

முதல் பிறழ் முடிவாகக் குறைந்தது 
.. இரண்டு எழுத்துகள் அமையவேண்டும்.
.. முழுச் சொல்லும் இவ்வாறு மாறி வருதல் சிறப்பு.
.. எழுத்துகளோ, சொல்லோ பிறழும்போது,
.. ஈற்றுச் சீர்கள் பொருளுடன் அமையவேண்டும்.

சான்றுகள்:
முதற்சீர் => ஈற்றுச்சீர்
சுவாச => வாசு => பிறழ்வன இரண்டு எழுத்துகள்
தமிழ் => மிதம் => தவறு (ஈற்றெழுத்து முதலெழுத்தாக இல்லை)
குடகு => குடகு => சொற் பிறழ்வு
குடகு => படகு => ஈரெழுத்துப் பிறழ்வு
குச்சு => சுக்கு => முழுச்சொற் பிறழ்வு
கிழவனார் => வடிவ ழகி => மூன்றெழுத்துப் பிறழ்வு.

பயிலிழை குவெ.04. வித்தகம்: முதல் பிறழ் முடிவு
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவின் முதற்சீரில் வரும்
.. முதலிரண்டு எழுத்துகளோ, மேலோ,
.. அல்லது இரண்டோ மேலோ எழுத்துகள் கொண்ட
.. முழுச் சொல்லோ
.. குறள் வெண்பாவின் ஈற்றுச் சீரிலோ
.. அல்லது ஈற்றயல் மற்றும் ஈற்றுச் சீர்களிலோ
.. முதல் பிறழ் முடிவாக, அதாவது,
.. முதல்வரும் எழுத்துகள் மாறி வருவதாக
.. அமையுமாறும்,
.. குறள் வெண்பா ஒரு விகற்பமாகவும்,
.. முதலடியில் பொழிப்பு மோனை அமையுமாறும்
.. 5 (ஐந்து) குறள் வெண்பாக்கள் 
.. புனைந்து எழுதுவோம்.

தொகுப்பு
18/05/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக

குறட்பா வித்தகம்: முதல் பிறழ் முடிவு
(குறள் வெண்பா)
(வித்தகம்: குறள்வெண்பா, முதல்பிறழ் முடிவு)

[முதற் சீரின் முதல் இரண்டு எழுத்துகள் ஈற்றுச் சீரிலோ 
அல்லது ஈற்றயல்-ஈற்றுச் சீர்களிலோ மாறி வருவது]

தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
ஆத்தா தடியெடுத் தா. ... 1

வாசிவாசி யென்று மனதில் முணுமுணுத்தால்
பேசுமொழி யாகும் சிவா. ... 2.

சுவாசப் பயிற்சி சுகம்கண்டு உள்ளம் 
சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3

சுகாதாரம் சிங்காரம் துய்பொருள் அல்ல
விகாரம் விளைப்பதே காசு. ... 4

வாசிக்கப் பேப்பரை மனசாரத் தந்திலன்
ஓசியா என்றான் சிவா. ... 5

புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
தன்னல மில்லாத அன்பு. ... 6

திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
உறவாவார் பார்த்’சா ரதி. ... 7

புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
அறியுமோ வாழ்வில் இரிபு? ... 8
[இரிபு=தோல்வி, வெறுப்பு]

குலவும் கலியில் குலுக்கிக் களித்துப்
பலவிதமாய் வாழும் உலகு. ... 9

விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
நிரல்களைச் செய்தார் ரவி. ... 10
[தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்]

--குருநாதன் ரமணி

★★★★★

Sunday, October 7, 2018

திருக்குறள் செய்தித் திரட்டு 005.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

திருக்குறள் செய்தித் திரட்டு 005.

திருக்குறளில் அணியிலக்கணம்
(http://duraiarasan.blogspot.in/2013/01/blog-post_26.html)

* உவமையணி
.. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
.. கோடாமை சான்றோர்க்கு நன்று. ... 118
.. இன்னும் சில
.. 109, 274, 279, 308, 532, 576, 624, 650, 828, 929,
.. 969, 1010, 1073, 1076, 1082, 1122, 1124, 1260

* உருவக அணி
.. அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
.. பகவன் முதற்றே உலகு. ... 1

* சொற்பின் வருநிலை அணி
.. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
.. துறந்தார் துறந்தார் துணை.
.. இன்னும் சில
.. 225, 739, 965, 973, 985

* சொற்பொருள்பின் வருநிலை அணி
.. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
.. சொல்லிற் பயனிலாச் சொ.  ... 200
.. இன்னும் சில
.. 12, 202, 297, 320, 350, 359, 365, 411, 428, 466, 
.. 504, 553, 602, 603, 623, 641, 645, 666, 672, 841, 
.. 849, 881, 948, 962, 973, 1041, 1194, 1279, 1286

* நிரல் நிறை அணி
.. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
.. பண்பும் பயனும் அது. ... 45
.. இன்னும் சில
.. 182, 254, 856, 876, 926 

* எதிர் நிரல் நிறை அணி
.. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
.. கற்றாரோ டேனை யவர். ... 410
.. இன்னும் சில
.. 1183

* தீவக அணி
.. முதல்நிலைத் தீவகம் (ஒழுக்கம்)
.. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
.. இழிந்த பிறப்பாய் விடும்.  ... 133
..
.. இடைநிலைத் தீவகம் (ஊன்)
.. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
.. அண்ணாத்தல் செய்யா தளறு.  ... 255

.. கடைநிலைத் தீவகம் (உண்டு)
.. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
.. கள்ளுக்கில் காமத்திற் குண்டு. ... 1281
.. இன்னும் சில
.. 371, 617, 773, 1094, 1196, 1281

* விற்பூட்டணி
.. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
.. சான்றோன் எனக்கேட்ட தாய். 

வேறு அணிகள் கண்டு அன்பர்கள் பின்னூட்டமாகப் பதியலாம்.

★★★★★

திருக்குறள் செய்தித் திரட்டு 004.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

திருக்குறள் செய்தித் திரட்டு 004.

திருக்குறள் யாப்பமைதி

(மு.வரதராசனார் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து, சென்னைப் 
பல்கலைக் கழகம் 1971-இல் வெளியிட்ட திருக்குறள் ஆராய்ச்சி 
நூல்களில் மு.சண்முகம் பிள்ளை எழுதிய நூலிலிருந்து)

* செப்பலோசை
.. வெண்சீர் மட்டும் வரும் ஏந்திசைச் செப்பல்:
.. "யாதானு நாடாமால்" (குறள் 397) மட்டுமே.
.. 12, 110, 735, 758 எண்களுள்ள
.. குறட்பாக்களில் இயற்சீர் ஒன்று மட்டுமே.
..
.. இயற்சீர் மட்டும் வரும் தூங்கிசைச் செப்பல்:
.. 110 குறட்பாக்கள்.
..
.. இரண்டு தளைகளும் விரவும் ஒழுகிசைச் செப்பல்:
.. மீதமுள்ள 1219 குறட்பாக்களும்.
.. முதற் குறளில் ஒரேயொரு வெண்சீரே.

* எதுகை விகற்பம்
.. ஒரு விகற்பக் குறட்பாக்கள்: 899
.. ஒரு விகற்பக் குறள் ஒரூஉ எதுகையுடன்: 68
.. இரு விகற்பக் குறட்பாக்கள்: 431
.. இரு விகற்பக் குறள் ஒரூ எதுகை பெறாதவை: 21
.. முதலடியில் பொழிப்பெதுகை: 12
.. இரண்டாம் அடியில் பொழிப்பெதுகை:  4
.. ஒரூஉ எதுகை:  438
.. முற்றெதுகை:  6

* போலி எழுத்தெதுகை
.. வையத்துள் - தெய்வத்துள் (குறள் 90)
.. ஐயுணர் - மெய்யுணர் (குறள் 354)

.. செய்யாமற் - வையகமும் (குறள் 101)
.. பொய்படு - கையறியாப் (குறள் 836)

* மோனை
.. சீர்கள் நான்கு-ஐந்தில் மோனை: 254
.. ஈரடிகளிலும் பொழிப்பு மோனை:  14
.. முதலடியில் மட்டும் பொழிப்பு மோனை:  192
.. இரண்டாம் அடியில் மட்டும் பொழிப்பு மோனை:  59
.. ஒரூஉ மோனை:  75
.. முற்று மோனை, முதலடி:  20

* மற்ற தொடைகள்
.. பொழிப்பு முரண், முதலடி:  14
.. ஒரூஉ முரண்:  23

.. புலவர் குழந்தை காட்டும் செந்தொடை
.. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
.. நிலத்தறைந்தான் கைப்பிழையா தற்று. ... 307

திருக்குறள் யாப்பு வண்ணம்
* முன்னிலை
.. நாலடியார், பழமொழி நூல்களில் உள்ளன போன்று,
.. ஆண்மகனை விளித்துப் பாடும் ஆடூஉ முன்னிலையும்
.. பெண்மகளை விளைத்துப் பாடும் மகடூஉ முன்னிலையும்
.. திருக்குறளில் இல்லை.

* பாநடை
.. வெண்பா அளவடியில் பொழிப்பு மோனை வரின், அதுவே சிறப்பு.
.. அஃதின்றி ஒரூஉ எதுகை வரின், இதுவே சிறப்பு.
.. திருக்குறள் முதலடிகளில்
.. ஏதேனும் வகையில் தொடை சிறக்கக் காணலாம்.
..
.. குறளைப் படிக்கும் போது, சீர்களில் நிறுத்தி
.. மோனையில் எடுப்பாகவும்
.. எதுகையில் அழுத்தமாகவும் படிக்கவேண்டும்.
.. தொடையமைப்பிற் கேற்ப, அடிகளில்
.. எடுத்தும் படுத்தும் அழுத்தமாகவும் மெதுவாகவும் 
.. படித்தால் திருக்குறள்,
.. பிள்ளைப் பெருமாளையங்கார் எனும் 
.. அழகிய மணவாள தாசரின் பாடல்கள்போல்
..
.. சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும்
.. எந்நோக்கும் காண இலக்கியம் ஆவது -- காளலாம்.

★★★★★

Wednesday, October 3, 2018

பயிலிழை குவெ.03. குறள் வெண்பா அந்தாதி மாலை தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.03. குறள் வெண்பா அந்தாதி மாலை தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/221292071934665/
01. பா.040. செல்லப்பன் (88888 68/70)

வள்ளுவர் தந்த வளமார் திருக்குறளே
உள்ளிருள் நீக்கும் ஒளி. ... 1

ஒளியால் இருளொழியும், ஓங்கும் அறிவின்
தெளிவால் நலம்பொழியும் தேர். ... 2

தேர்ந்துசெயும் எச்செயலும் தீங்கின்றி வெற்றிபெறும்
சோர்ந்து விடாதே துணி. ... 3

துணிவே துணையாய்த் தொடங்கும் தொழிலால்
அணியணியாய் நல்வளங்கள் அள்ளு. ... 4

நல்வளங்கள் அள்ளியபின் நல்லறங்கள் செய்தால்தான்
உள்ளின்பென் றார்வள் ளுவர். ... 5

★★★
02. தொ.001. இராமசாமி வெங்கடராமன் (77777 67/70)

சேர்ந்து பணியினைச் செய்திட வேண்டுமே
சோர்ந்த வயிற்றிற்குச் சோறு. ... 1

சோறுமட்டும் போதுமோ சுள்ளெனக் காரமாய்நா
ஊறும் குழம்புதான் ஒன்று. ... 2

ஒன்றுபோது மென்றே உரைத்தது தப்புதான்
நன்றாய்த்தான் கூட்டுகேட்கும் நா. ... 3

நாவிற் கினியதாய் நாலு பொறியலும்
பாவிக் கடங்காப் பசி. ... 4

பசியென்று ஏனோ பறக்கின்றாய் பாவி
புசித்திட வேண்டுமொன்றாய்ச் சேர்ந்து. ... 5

★★★
03. தொ.002. பாவலர் சீனி பழனி (77777 60/70)

நிழலின் அருமை வெயிலில் உணர 
பழசுவை நீரொடு நேர்! ... 1

நேர்நடை மாக்கள் நிமிர்நடை வாழ்வியல் 
பாரினில் பால்பசு மாடு. ... 2

மாடு மனைகள் மருவும் குடியினில் 
கூடும் உழைப்பில் உயர்வு. ... 3

உயர்வே உடையும் ஒளிதரு எண்ணம் 
பயிர்விளை வேளாண் பரிசு. ... 4

பரிசென வாழ்வு பலனோ விருந்து 
முரசதிர் வெற்றி மகிழ்! ... 5

★★★
நி1. குருநாதன் ரமணி

தமிழுரை யாடல் தமிழ்மொழி வீட்டில்
தமிழில் நினைவெனில் சால்பு. ... 1

சால்புறு மாந்தர் தமிழ்மொழி யிற்செய்த 
நூல்பயிலக் கொள்வோம் நுனிப்பு. ... 2

நுனிப்புல்லை மேயாது நுண்மை விரிப்போர்
தனிநின்றே ஆய்வர் தமிழ். ... 3

தமிழில் சிறுவர் சகலமும் கற்க
அமைபாடத் திட்டம் அணி. ... 4

அணிவோம் தமிழை அகத்தில் புறத்தில்
தணிபுன லாம்நம் தமிழ். ... 5

[சால்பு = மேன்மை, சான்றாண்மை; நுனிப்பு = கூர்ந்தறிகை]

★★★★★

பயிலிழை குவெ.03. குறள் வெண்பா அந்தாதி மாலை

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.03. குறள் வெண்பா அந்தாதி மாலை

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/212437962820076/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
வரும் பாடல்களுக்கு ஐம்மீன் மதிப்பீடு தரலாம்.

புள்ளிகள் (மொத்தம்: 70)
(ஐந்து குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும்)
 1 => ஒவ்வோர் அடிக்கும்
 1 => ஒருவிகற்பக் குறட்பாவாவெனில்
 1 => ஓரடியில் இயல்பாக அமையும் பொழிப்பு மோனைக்கு
 1 => ஒவ்வொரு எழுத்தந்தாதிக்கும்
 2 => ஒவ்வொரு அசையந்தாதிக்கும்
 5 => ஒவ்வொரு சீரந்தாதிக்கும்
10 => அந்தாதி மாலைக்கு
10 => சொற்பொருள் ஒலிநயம் பொறுத்து போனஸ்.

ஐம்மீன் மதிப்பீடு: 
யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு ஆகிய
.. ஐந்து அமைதிகள் => ஐம்மீன்கள்
.. ஒவ்வொன்றுக்கும் கீழெல்லை: 1
.. மேலெல்லை: 8
.. தொடர் எண்ணாகக் குறிக்கவும்.
.. (சான்று: 87675 => எண்கள் முறையே
.. யாப்பு, சொல், பொருள், ஒலி, உணர்வு
.. அமைதிகளின் மதிப்பீட்டைக் குறிப்பது).

***
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

அந்தாதிச் செய்யுள்:
பின்னால் வரும் செய்யுளின் முதற்சீர் தொடக்கமாக
.. முன்னால் வந்த செய்யுளின் ஈற்றில் அமையும்
.. சீர் முழுதும் அமைவது சீரந்தாதி
.. ஈற்றசை மட்டும் அமைவது அசையந்தாதி
.. ஈற்றெழுத்து மட்டும் அமைவது எழுத்தந்தாதி.

சான்றாக, முன்வரும் செய்யுளின் ஈற்றில்
.. அவிர்மதி என்ற சீர் இருந்தால்
.. வரும் செய்யுளின் முதற்சீர் 
.. திறமுடன் என்றாலது எழுத்தந்தாதி
.. மதிநலன் என்றால் அசையந்தாதி
.. அவிர்மதி என்று முழுதும் வந்தால் சீரந்தாதி.

அந்தாதி மாலையில்
.. முதற்செய்யுளின் முதற்சீர்
.. இறுதிச் செய்யுளின் ஈற்றுச் சீருடன்
.. சீர்முழுதுமோ, அசைமட்டுமோ
.. அந்தாதித் தொடை வகையில் 
.. ஒரு மாலையின் மலர்கள்போல் 
.. கட்டப்பட்டுத் தொடர்ந்து அமையும்.
.. சீர் முழுதும் அமைந்து மாலையாதல் சிறப்பு.

அந்தாதிச் சரம்
.. மாலையாக அமையாத 
.. அந்தாதிச் செய்யுள் தொடரை
.. அந்தாதிச் சரம் எனலாம்.

பயிலிழை குவெ.03. குறள் வெண்பா அந்தாதி மாலை
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா அந்தாதி மாலை

விரும்பிய பாடுபொருளில்
.. சீர்/அசை/எழுத்து அந்தாதித் தொடையும் 
.. ஒரு விகற்பமும், பொழிப்பு மோனையும் பயில
.. 5 குறள் வெண்பாக்கள் புனைவோம்.

அந்தாதி மாலை
.. முதற் செய்யுளின் முதற் சீரும்
.. இறுதிச் செய்யுளின் ஈற்றுச் சீரும்
.. சீர்/அசை வகையில் அந்தாதியாகக் கட்டி 
.. அந்தாதி மாலை செய்வோம்.

தொகுப்பு
11/05/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

***
அடியேன் பங்காக
வாணாள் முழுதும் தமிழ் கற்போம்!
(குறள் வெண்பா அந்தாதி மாலை)
(தமிழ்: மொழி வளர்ச்சி)

தமிழுரை யாடல் தமிழ்மொழி வீட்டில்
தமிழில் நினைப்பெனில் சால்பு. ... 1

சால்புறு மாந்தர் தமிழ்மொழி யிற்செய்த 
நூல்பயிலக் கொள்வோம் நுனிப்பு. ... 2

நுனிப்புல்லை மேயாது நுண்மை விரிப்போர்
தனிநின்றே ஆய்வர் தமிழ். ... 3

தமிழில் சிறுவர் சகலமும் கற்க
அமைபாடத் திட்டம் அணி. ... 4

அணிவோம் தமிழை அகத்தில் புறத்தில்
தணிபுன லாம்நம் தமிழ். ... 5

[சால்பு = மேன்மை, சான்றாண்மை; நுனிப்பு = கூர்ந்தறிகை]

--குருநாதன் ரமணி, 02/05/2018

★★★★★