சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.15. அலங்காரக் குறள்: உவமையணி தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/297913020939236/
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
விரி உவமையணி
மின்னல்போல் வந்து விசுக்கெனப் போனாளே
குன்றெனக் காணும் உரு. ... 1
தொகை உவமையணி
மாதேவி ஸ்ரீதேவி வாயோயா வம்பினள்
மூதேவி ஆக்கும் மொழி. ... 2
விரி, தொகை கலப்புவமையணி
மலையனைய துக்கம் மறையும் பனியாய்
மலைமகள்பூந் தாளை வாழ்த்து. ... 3
எடுத்துக்காட்டுவமையணி
ஆதவன் வந்தால் அகலுமிருள் வாழ்வினில்
மாதவன்பூந் தாளால் மருள். ... 4
இல்பொருளுவமையணி
வால்முளைத்த பிள்ளைகள் வாய்த்ததென் பாவமோ
கால்முளைத்துக் கஞ்சியூற்று மோ. ... 5
★★★
பாவலர் சீனி பழனி
விரி உவமையணி
கார்போல் குழலாள் கருணைக் கருவிழியாள்
வார்கொள் சிலைபோல் வடிவு. ... 1
நாறும் மலர்போல் நம்மனம் பார்மீது
கூறும் கவிதை முகம். ... 2
தொகை உவமையணி
அஞ்சன மாமலை வெள்ளி அடுக்கலாய்க்
குஞ்சரக் கோடுயர்காக் குன்று. ... 3
பொன்திகழ் ஆகந்தனில் புல்லிடும் பூமலரே
மன்னவன் மேனி மயல். ... 4
விரி, தொகை கலப்புவமையணி
பாரிபோல் வான்மழை மண்ணில் மகிழ்நிறை
வாரிவளம் வாழ்வு மலர். ... 5
காதல் குயில்கள் கனிமொழி கீதமொடு
ஓதுகவி போல உயிர். ... 6
எடுத்துக்காட்டுவமையணி
மாணவன் ஓர்விண்மீன் வான்பரப்பில் ஆசிரியர்
பேணுவோம் பௌர்ணமி யென்று. ... 7
நேற்றிருந்த பண்டம் நிலைகுலையும் காலத்தால்
கூற்றிருந்தால் காற்றறுந்த கூடு. ... 8
இல்பொருளுவமையணி
செந்திங்கள் வான்வழியே சேர்ந்தணைந்தேன் செவ்விதழில்
சொந்தங்கள் சூழொளி மன் ... 9
கருநாகம் கக்குவிடம் கார்க்கோடன் ஆயின்
உருவேடம் போதலர்ப் பூ. ... 10
★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்
விரி உவமையணி
காரேய்க் கருணை கடலென ஆர்த்திடும்
சீரார் கழலென் சிரம். ... 1 (உவமை: 2)
நாவாய்போல் பத்தர் நலம்காக்கும் வண்திரு
நாவாய்ஆள் பெம்மானை நண்ணு. ... 2
தொகை உவமையணி
நிலவுமுகம் காட்டி நினைவொளி கூட்டி
உலவுமுகம் கொண்டாள் உளம். ... 3 (உவமை: 1)
வனசவிழி நங்கை வருடும் இறகாய்
மனசுகளி யேற்றும் மயில். ... 4
விரி, தொகை கலப்புவமையணி
கயல்விழி காட்டிக் கருமுகில் போல
உயும்வழி காட்டும் உரம். ... 5 (உவமை: 2)
மயல்விழி மஞ்ஞை மதியொக்கும் தண்மை
இயல்பொழித்த தென்னையே இன்று. ... 6
எடுத்துக்காட்டுவமையணி
எண்ணும் எழுத்தும் இணையாய் இழைந்திடும்
கண்ணாய் இமையாய்க் கருது. ... 7 (உவமை: 1)
விண்ணும் நிலவும் விரவும் வியனெனக்காண்
எண்ணம் செயலின் இணைப்பு. ... 8
இல்பொருளுவமையணி
ஆகாயக் கங்கையாய் ஆசிமழை பெய்திடும்
ஏகாயன் என்னுளத்திற் (கு) ஏற்பு. ... 9 (உவமை: 1)
சாம்பல் பறவையாய்ச் சாதகப் பட்சியாய்
ஓம்பல் களித்தல் உயர்வு. ... 10
★★★
கவிஞர் திசேசு
விரி உவமையணி
மந்திரத்தால் கையிலன்று மைபூசி காண்பதொக்கும்
புந்திசால்செல் பேசி புதிது. ... 1 (உவமை: 1)
ஓடிக் களைத்தோர்தா கத்திற் குதவுநீர்போல்
பாடிக் கொடுத்திடுவோம் பாட்டு. ... 2
தொகை உவமையணி
கயலிரண்டு கூறிய காதற்பூ வாசம்
முயலிரண்டில் கண்டான் முகர்ந்து. ... 3 (உவமை: 2)
துடியிடையில் தோன்றலவன் சொன்னகவி தோகை
படித்தெங்கோ சென்றாள் பறந்து. ... 4
விரி, தொகை கலப்புவமையணி
கார்மேகம் தாங்கி கவின்நிலவு போல்வாள்
மார்மீது சாய்ந்தாள் மகிழ்ந்து. ... 5 (உவமை: 2)
பூவாய் சுழித்துநற் புன்னகை செய்கின்ற
பாவனையிற் பார்த்தனள் பெண். ... 6
எடுத்துக்காட்டுவமையணி
கூழாங்கல் வைரமாய்த் தங்கத்தில் சேர்வதுண்டோ
பாழானோர்க் கில்லை பரிசு. ... 7 (உவமை: 1)
அம்பிதனை வென்றிடுமோ ஆடுகளின் மந்தையும்
நம்பியெற்கு போட்டிநீ யா. ... 8
இல்பொருளுவமையணி
வானமே வற்றியுடன் வீழ்ந்ததுபோல் கேரளத்தில்
ஏனிந்த மாளா மழை. ... 9 (உவமை: 1)
கோவைப் பழத்துள்ளே மாதுளை முத்துக்கள்
பாவை சிரிப்பினில் பார். ... 10
★★★
கவிஞர் குருநாதன் ரமணி
உவம உருபுடன்
சேல்போல் விழியாள் சிரித்தனள் என்முன்னே
வால்போல் புடவைத் தலைப்பு. ... 1
மலையொக்கும் துன்பம் மறையும் பனிபோல்
நிலையொப்பி உள்ளம் நிறுத்து. ... 2
***
உவமைத் தொகையாக
மலர்விழி தேன்மொழி மாலதியைக் கண்டேன்
நிலவுமுகம் நோக்கியே நின்று. ... 3
கணைவிழி தைக்கக் கனிமனம் கொண்டேன்
அணைவருநீர் அன்பினில் ஆழ்ந்து. ... 4
***
இரண்டும் கலந்து
மலர்ப்பாதம் போற்ற மழைபோல் அருள்வார்
நிலையுயர் வாழ்வாகும் நேர். ... 5
வண்டுவிழி என்மேலே வட்டம்போல் சுற்றுமனம்
கண்டுமொழி காதல் வலை. ... 6
***
எடுத்துக்காட்டுவமையணி
ஐம்பூதம் ஆளும் அகிலம் மனிதனின்
ஐம்புலன் ஆளும் மனம். ... 7
நேற்றின்று நாளையாய் நேரம் உலகுறும்
தோற்றங்கள் மாறும் தொலைந்து. ... 8
***
இல்பொருளுவமையணி
திங்களுள் தீப்போல் சினத்த முகத்துடன்
மங்கையவள் முன்நின்றாள் வந்து. ... 9
குதிரையின் கொம்பாய்க் குளிர்கதி ரோன்போல்
மதுரையில் கோடை மழை. ... 10
★★★★★
No comments:
Post a Comment