சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.14. பெயர்ச்சொற் குறள் தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/295070167890188/
கவிஞர் அரங்க இரகுநாதன்
காடுமேடு காலால் கடத்தலே அந்தநாள்
மோடமௌசே இற்றைநாள் மௌசு. ... 1 (பெ. 7}
எரிநீர் வெளிவளி இம்மண்ணின் சேர்க்கை
புரிஅரி அண்டப் புகல். ... 2 (பெ. 7}
புன்னையர(சு) ஆலார் புளிமாவும் வேம்பொடு
வன்னிமகிழ் பாரின் வளம். ... 3 (பெ. 7}
மாடுகன்று மாடென்னல் மாறியின்று தேடுகல்வி
வீடென்ற மாற்றம் வியப்பு. ... 4 (பெ. 7}
நன்மையுடன் தீமை நலமொடு துன்பமும்
புன்மைவண்மை வாழ்வின் புலம். ... 5 (பெ. 7}
★★★
பாவலர் சீனி பழனி
ஆடலுடன் பாடல் அறுவகை உண்டியென
ஏட(து) எழுத்தே மலர். ... 1 (பெ. 7)
குடும்ப உறவுடன் கோபுரக் கோடும்
இடும்பை தவிர்க்கும் எழு. ... 2 (பெ. 6)
வயலே உயிருடை வாழ்வு உலகில்
அயலோ அழுகல் அழகு. ... 3 (பெ. 7)
கல்வி உயர்வு கரையில் கனவென
நல்லவை நாளும் உனது. ... 4 (பெ. 6)
நதியில் நிறைநீர் நிதியென செந்நெல்
பதியில் வளனே பரிவு. ... 5 (பெ. 7)
காசும் பணமும் கடிமனக் கள்ளர்தம்
கூசா உறவும் கொடிது. ... 6
ஆசான் திருவடி அன்பின் பெருவடி
பேசா மறையெனப் பேச்சு. ... 7
வெண்பா எளிதுகாண் வேண்டுவ வெண்டளை
தண்பா தரணி மழை. ... 9
மழையென மென்கரம் மாடுயர் செல்வம்
விழைவே வளர்மதி வாழ்வு. ... 9
முகநூல் படிப்பு முழுமதி ஞானம்
அகநூல் எழுதும் கவி. ... 10
★★★
கவிஞர் திசேசு
இறப்பும் பிறப்பும் இயற்கையே மக்கள்
மறக்கும் கொடுமையாய் மாசு. ... 1 (பெ. 7)
மாற்றமே காலத்தின் கோலம் மனிதர்தம்
தோற்றம் வளர்ச்சியே சான்று. ... 2 (பெ. 7)
தாண்டலும் ஊஞ்சலும் தாயமும் பல்குழியும்
பாண்டியொடு எல்லாமே போச்சு. ... 3 (பெ. 6)
போற்றலும் தூற்றலும் பொல்லாங்கு பேசலும்
மாற்றமும் மாந்தர் வழக்கு. ... 4 (பெ. 7)
பாவாடை தாவணி பின்னலொடு கொண்டையும்
பூவாடை பூசுமஞ்சள் போச்சு ... 5 (பெ. 7)
அம்மிக் குழவியும் ஆடுகல்லும் தோய்த்தலில்
கும்முதலும் கோலமும் போச்சு. ... 6
வாழ்வில் தளர்வும் உயர்ச்சியும் தாங்கல்
வீழ்த்தலும் யாவு மியல்பு. ... 7
பம்பரம் கிட்டிப்புள் பச்சைக் குதிரையுடன்
கம்புசுற்றல் கானலில் நீர். ... 8
★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
இன்பமும் துன்பமும் எள்ளலும் போற்றலும்
உன்னதம் சீலர்க்கு காண். ... 1 (பெ. 6)
மென்மைக் குணமும் வெறுப்பிலா உள்ளமும்
நன்மையுடன் மேன்மை தரும். ... 2 (பெ. 6)
காடும் மனையும் கழனியொடு ஆள்பலமும்
கூடுமோ கூற்றுவன் முன். ... 3 (பெ. 6)
அரனின் சிரசில் அருவியாய் கங்கை
அருகனின் கையில்ஓ லை. ... 4 (பெ. 6)
காலம் கனியும் கரம்பும் செழிக்கும்
வேலவன் ஆசியா லே. ... 5 (பெ. 6)
★★★
கவிஞர் குருநாதன் ரமணி
பாலத்தில் கன்று பசுமாடு பையாநீ
சாலையில் உன்கண்ணை வை! ... 1
ஞாயிறு திங்களுடன் செவ்வாய் புதன்பின்
வியாழனுடன் வெள்ளி சனி. ... 2
பழுதையைப் பாம்பென்பர் பாரில் பலபேர்
புழுவெல்லாம் பூமியா ளும். ... 3
கண்மூக்கு தோலுடல் காதுவாய் என்றுவகை
எண்ணில் புலன்பொறி யைந்து. ... 4
கடல்மலை மண்நதி காடுவயல் மாக்கள்
உடலுருவாம் உள்ளம் உலகு. ... 5
வீடு மனைமக்கள் வீழ்சுற்றம் நட்பென்னும்
கூடு மனிதர் குலம். ... 6
குடிமகன் போதை குலமகள் வாதை
விடிவுறும் காலமென் றோ? ... 7
அன்பும் அறமும் அகம்கொளின் மானிடர்க்குத்
துன்பம் துயர்போம் குறைந்து. ... 8
சங்கம் சமணம் சமயசைவ வைணவம்
மங்கலம் வேராம் மரபு. ... 9
மாபலா செவ்வாழை மாதுள மங்கையே
வாகலா என்துணை யாய்! ... 10
★★★★★
No comments:
Post a Comment