Sunday, January 27, 2019

பயிலிழை குவெ.15. அலங்காரக் குறள்: உவமையணி தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.15. அலங்காரக் குறள்: உவமையணி தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/297913020939236/
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்

விரி உவமையணி
மின்னல்போல் வந்து விசுக்கெனப் போனாளே
குன்றெனக் காணும் உரு. ... 1

தொகை உவமையணி
மாதேவி ஸ்ரீதேவி வாயோயா வம்பினள்
மூதேவி ஆக்கும் மொழி. ... 2 

விரி, தொகை கலப்புவமையணி
மலையனைய துக்கம் மறையும் பனியாய்
மலைமகள்பூந் தாளை வாழ்த்து. ... 3 

எடுத்துக்காட்டுவமையணி
ஆதவன் வந்தால் அகலுமிருள் வாழ்வினில்
மாதவன்பூந் தாளால் மருள். ... 4 

இல்பொருளுவமையணி
வால்முளைத்த பிள்ளைகள் வாய்த்ததென் பாவமோ
கால்முளைத்துக் கஞ்சியூற்று மோ. ... 5 

★★★
பாவலர் சீனி பழனி

விரி உவமையணி
கார்போல் குழலாள் கருணைக் கருவிழியாள் 
வார்கொள் சிலைபோல் வடிவு. ... 1 

நாறும் மலர்போல் நம்மனம் பார்மீது
கூறும் கவிதை முகம். ... 2

தொகை உவமையணி
அஞ்சன மாமலை வெள்ளி அடுக்கலாய்க்
குஞ்சரக் கோடுயர்காக் குன்று. ... 3 

பொன்திகழ் ஆகந்தனில் புல்லிடும் பூமலரே
மன்னவன் மேனி மயல். ... 4

விரி, தொகை கலப்புவமையணி
பாரிபோல் வான்மழை மண்ணில் மகிழ்நிறை
வாரிவளம் வாழ்வு மலர். ... 5 

காதல் குயில்கள் கனிமொழி கீதமொடு
ஓதுகவி போல உயிர். ... 6

எடுத்துக்காட்டுவமையணி
மாணவன் ஓர்விண்மீன் வான்பரப்பில் ஆசிரியர்
பேணுவோம் பௌர்ணமி யென்று. ... 7 

நேற்றிருந்த பண்டம் நிலைகுலையும் காலத்தால்
கூற்றிருந்தால் காற்றறுந்த கூடு. ... 8

இல்பொருளுவமையணி
செந்திங்கள் வான்வழியே சேர்ந்தணைந்தேன் செவ்விதழில்
சொந்தங்கள் சூழொளி மன் ... 9 

கருநாகம் கக்குவிடம் கார்க்கோடன் ஆயின்
உருவேடம் போதலர்ப் பூ. ... 10

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்

விரி உவமையணி
காரேய்க் கருணை கடலென ஆர்த்திடும் 
சீரார் கழலென் சிரம். ... 1 (உவமை: 2)

நாவாய்போல் பத்தர் நலம்காக்கும் வண்திரு 
நாவாய்ஆள் பெம்மானை நண்ணு. ... 2

தொகை உவமையணி
நிலவுமுகம் காட்டி நினைவொளி கூட்டி 
உலவுமுகம் கொண்டாள் உளம். ... 3 (உவமை: 1)

வனசவிழி நங்கை வருடும் இறகாய் 
மனசுகளி யேற்றும் மயில். ... 4

விரி, தொகை கலப்புவமையணி
கயல்விழி காட்டிக் கருமுகில் போல 
உயும்வழி காட்டும் உரம். ... 5 (உவமை: 2)

மயல்விழி மஞ்ஞை மதியொக்கும் தண்மை 
இயல்பொழித்த தென்னையே இன்று. ... 6

எடுத்துக்காட்டுவமையணி
எண்ணும் எழுத்தும் இணையாய் இழைந்திடும் 
கண்ணாய் இமையாய்க் கருது. ... 7 (உவமை: 1)

விண்ணும் நிலவும் விரவும் வியனெனக்காண்
எண்ணம் செயலின் இணைப்பு. ... 8

இல்பொருளுவமையணி
ஆகாயக் கங்கையாய் ஆசிமழை பெய்திடும் 
ஏகாயன் என்னுளத்திற் (கு) ஏற்பு. ... 9 (உவமை: 1)

சாம்பல் பறவையாய்ச் சாதகப் பட்சியாய் 
ஓம்பல் களித்தல் உயர்வு. ... 10

★★★
கவிஞர் திசேசு

விரி உவமையணி
மந்திரத்தால் கையிலன்று மைபூசி காண்பதொக்கும்
புந்திசால்செல் பேசி புதிது. ... 1 (உவமை: 1)

ஓடிக் களைத்தோர்தா கத்திற் குதவுநீர்போல்
பாடிக் கொடுத்திடுவோம் பாட்டு. ... 2 

தொகை உவமையணி
கயலிரண்டு கூறிய காதற்பூ வாசம்
முயலிரண்டில் கண்டான் முகர்ந்து. ... 3 (உவமை: 2)

துடியிடையில் தோன்றலவன் சொன்னகவி தோகை
படித்தெங்கோ சென்றாள் பறந்து. ... 4 

விரி, தொகை கலப்புவமையணி
கார்மேகம் தாங்கி கவின்நிலவு போல்வாள்
மார்மீது சாய்ந்தாள் மகிழ்ந்து. ... 5 (உவமை: 2)

பூவாய் சுழித்துநற் புன்னகை செய்கின்ற
பாவனையிற் பார்த்தனள் பெண். ... 6 

எடுத்துக்காட்டுவமையணி
கூழாங்கல் வைரமாய்த் தங்கத்தில் சேர்வதுண்டோ
பாழானோர்க் கில்லை பரிசு. ... 7 (உவமை: 1)

அம்பிதனை வென்றிடுமோ ஆடுகளின் மந்தையும்
நம்பியெற்கு போட்டிநீ யா. ... 8 

இல்பொருளுவமையணி
வானமே வற்றியுடன் வீழ்ந்ததுபோல் கேரளத்தில்
ஏனிந்த மாளா மழை. ... 9 (உவமை: 1)

கோவைப் பழத்துள்ளே மாதுளை முத்துக்கள்
பாவை சிரிப்பினில் பார். ... 10 

★★★
கவிஞர் குருநாதன் ரமணி

உவம உருபுடன்
சேல்போல் விழியாள் சிரித்தனள் என்முன்னே
வால்போல் புடவைத் தலைப்பு. ... 1

மலையொக்கும் துன்பம் மறையும் பனிபோல்
நிலையொப்பி உள்ளம் நிறுத்து. ... 2

***
உவமைத் தொகையாக
மலர்விழி தேன்மொழி மாலதியைக் கண்டேன்
நிலவுமுகம் நோக்கியே நின்று. ... 3

கணைவிழி தைக்கக் கனிமனம் கொண்டேன்
அணைவருநீர் அன்பினில் ஆழ்ந்து. ... 4

***
இரண்டும் கலந்து
மலர்ப்பாதம் போற்ற மழைபோல் அருள்வார்
நிலையுயர் வாழ்வாகும் நேர். ... 5

வண்டுவிழி என்மேலே வட்டம்போல் சுற்றுமனம்
கண்டுமொழி காதல் வலை. ... 6

***
எடுத்துக்காட்டுவமையணி
ஐம்பூதம் ஆளும் அகிலம் மனிதனின்
ஐம்புலன் ஆளும் மனம். ... 7

நேற்றின்று நாளையாய் நேரம் உலகுறும்
தோற்றங்கள் மாறும் தொலைந்து. ... 8

***
இல்பொருளுவமையணி
திங்களுள் தீப்போல் சினத்த முகத்துடன்
மங்கையவள் முன்நின்றாள் வந்து. ... 9

குதிரையின் கொம்பாய்க் குளிர்கதி ரோன்போல்
மதுரையில் கோடை மழை. ... 10

★★★★★

பயிலிழை குவெ.15. அலங்காரக் குறள்: உவமையணி

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.15. அலங்காரக் குறள்: உவமையணி

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/278034236260448/

உவமையணி
குப்பனும் சுப்பனும் கவிஞர்க் கோமகனும் எளிதில் பயன்படுத்துவது உவமையணி.

போல என்ற உவம உருபு மூலம் இரு பொருள்களை இணைத்து நம் பேச்சிலும் உவமையாக அடிக்கடி கையாள்கிறோம். உவமையணியின் கூறுகள் நான்கு: உவமானம், உவமேயம், உவமவுருபு, பொதுத்தன்மை.

பவளம் போன்ற செவ்வாய் => இது உவமைத் தொடர்
பவளம் => உவமையாகும் பொருள் => உவமானம்
செவ்வாய் => உவமிக்கப்படும் (ஒப்பிடப்படும்) பொருள் => உவமேயம்
போன்ற => போல => உவம உருபு
செம்மை => பொதுத்தன்மை

பவளம் போன்ற செவ்வாய் என்பதில் பொதுத்தன்மை வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. அதை மறைத்து பவளம் போன்ற வாய் என்றும் கூறலாம். இதையே பவளவாய் என்றால் அது உவமைத் தொகையாகி, பவளம் போலும் வாய் என்று விரியும்.

இந்த உவமையை (செவ்)வாயாம் பவளம் என்று எழுதினால் அது உருவக விரியாகும்.
(செவ்)வாய்ப் பவளம் => என்றால் (செவ்)வாயாகும் பவளம் என்று விரிந்து அது உருவகத் தொகையாகும்.

உவமையில், உவமையாகும் பொருள் முதல்நிற்கும். உருவகத்தில் உவமிக்கப்படும் பொருள் முதலில்.

உவம உருபுகள்
தொல்காப்பியம் கூறும் உவம உருபுகள் மொத்தம் 36. அவை கீழே. அவற்றுள் இன்று எல்லோர்க்கும் விளங்குவன உடுக்குறி (*)யுடன்.

அன்ன*, ஆங்க, உறழ, எள்ள, என்ற*, என்ன*, ஏய்ப்ப, ஒட்ட, ஒடுங்க, ஒப்ப*, ஒன்ற, ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய*, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப*, புரைய, புல்ல, பொருவ, பொற்ப, போல*, மதிப்ப, மருள, மறுப்ப, மாற்ற, மான, வியப்ப, விழைய, விறப்ப, வீழ, வெல்ல.

இன்றைய வழக்கில் சில உவம உருபுகள்
போல, மாதிரி, கணக்கா,

உவமை அணியில் பல வகைகள் உண்டு. அவற்றுள் நான்கை ஐந்து குறள்களில் நாம் இப்பயிலரங்கத்தில் கையாள்கிறோம்.

1. விரி உவமையணி
உவமானம், உவமேயம், உவமவுருபு மூன்றும் வெளிப்படையாக அமையும். பொதுத்தன்மை சொல்லப்படுவதாகவோ சுட்டப்படுவதாகவோ அமையலாம்.
திருக்குறள் சான்றுகள்
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

[உவமானம் => பளிங்கு; உவமேயம் => முகம்; உவமவுருபு => போல்]

கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.

[உவமானம் => கொக்கு, (அதன்) குத்து; 
உவமேயம் => கூம்பும் பருவம், சீர்த்தவிடம்; 
உவமவுருபு => ஒக்க]
2. தொகை உவமையணி
பவளவாய், தேன்மொழி என்பனபோல் இதில் உவமானம் உவமேயம் அருகருகே அமைந்து உவம உருபும், பொதுத்தன்மையும் மறைந்து நிற்கும்.
மலர்விழி தேன்மொழி மாலதியைக் கண்டேன்
நிலவுமுகம் நோக்கியே நின்று.
3. விரி, தொகை கலப்புவமையணி
மலர்ப்பாதம் போற்ற மழைபோல் அருள்வார்
நிலையுயர் வாழ்வாகும் நேர்.
4. எடுத்துக்காட்டுவமையணி
உவமானமும் உவமேயமும் தனித்தனி வாக்கியங்களாக அமையும். இவ்விரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் போல என்ற சுட்டிக்காட்டும் உவம உருபு மறைந்து நிற்கும்.
திருக்குறள் சான்று
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அகர முதல எழுத்தெல்லாம் (அதுபோல) ஆதி
பகவன் முதற்றே உலகு.

உவமான வாக்கியத்தை அடுத்து உவமேய வாக்கியம் வருமுன் 
அதுபோல என்னும் உவம உருபு மறைந்து நிற்றல் காண்க.
5. இல்பொருளுவமையணி
உலகில் இல்லாத பொருளை உள்ளதுபோல் பாவித்து அதனை உவமையாக்கிக் கூறுவது.
அமிழ்தினும் ஆற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
உலகில் இல்லாத அமிழ்து என்னும் கற்பனைப் பொருளைக் கூழுக்கு உவமையாக்கியது.
*****
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிலரங்கில் பங்கேற்கலாம்.
நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.15. அலங்காரக் குறள்: உவமையணி
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. ஒவ்வொரு குறளிலும் 
.. ஒன்று முதல் மூன்று உவமைகள் வரை அமையுமாறு
.. ஒரு விகற்பப் பொழிப்பு மோனைக் குறளாக
.. மேற்சொன்ன ஐந்து வகைகளில்
.. வகைக்கு ஒன்றாக
.. மொத்தம் ஐந்து குறட்பாக்கள் புனைந்தெழுதுவோம்.

எடுத்துக்காட்டுவமையணிக் குறளில்
.. முதல் வாக்கியத்தில் உவமானத்தை விரித்தும்
.. இரண்டாவது வாக்கியத்தில் உவமேயத்தை விரித்தும்
.. இடையில் உவம உருபை மறைத்தும்
.. புனைதல் வேண்டும் (சான்றுக் குறளில் உள்ளது போல). 

ஒருவர் பத்து (10) குறட்பாக்கள்
.. வரை புனைந்தெழுதலாம். ஆயின்,
.. அவற்றுள் ஐந்து பாக்கள் மட்டுமே மதிப்பீடு பெறும்.

தொகுப்பு
17/08/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
உவமையணி
(குறள் வெண்பா)

உவம உருபுடன்
சேல்போல் விழியாள் சிரித்தனள் என்முன்னே
வால்போல் புடவைத் தலைப்பு. ... 1

மலையொக்கும் துன்பம் மறையும் பனிபோல்
நிலையொப்பி உள்ளம் நிறுத்து. ... 2

உவமைத் தொகையாக
மலர்விழி தேன்மொழி மாலதியைக் கண்டேன்
நிலவுமுகம் நோக்கியே நின்று. ... 3

கணைவிழி தைக்கக் கனிமனம் கொண்டேன்
அணைவருநீர் அன்பினில் ஆழ்ந்து. ... 4

இரண்டும் கலந்து
மலர்ப்பாதம் போற்ற மழைபோல் அருள்வார்
நிலையுயர் வாழ்வாகும் நேர். ... 5

வண்டுவிழி என்மேலே வட்டம்போல் சுற்றுமனம்
கண்டுமொழி காதல் வலை. ... 6

எடுத்துக்காட்டுவமையணி
ஐம்பூதம் ஆளும் அகிலம் மனிதனின்
ஐம்புலன் ஆளும் மனம். ... 7

நேற்றின்று நாளையாய் நேரம் உலகுறும்
தோற்றங்கள் மாறும் தொலைந்து. ... 8

இல்பொருளுவமையணி
திங்களுள் தீப்போல் சினத்த முகத்துடன்
மங்கையவள் முன்நின்றாள் வந்து. ... 9

குதிரையின் கொம்பாய்க் குளிர்கதி ரோன்போல்
மதுரையில் கோடை மழை. ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Sunday, January 20, 2019

பயிலிழை குவெ.14. பெயர்ச்சொற் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.14. பெயர்ச்சொற் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/295070167890188/
கவிஞர் அரங்க இரகுநாதன்

காடுமேடு காலால் கடத்தலே அந்தநாள் 
மோடமௌசே இற்றைநாள் மௌசு. ... 1 (பெ. 7}

எரிநீர் வெளிவளி இம்மண்ணின் சேர்க்கை 
புரிஅரி அண்டப் புகல். ... 2 (பெ. 7}

புன்னையர(சு) ஆலார் புளிமாவும் வேம்பொடு 
வன்னிமகிழ் பாரின் வளம். ... 3 (பெ. 7}

மாடுகன்று மாடென்னல் மாறியின்று தேடுகல்வி 
வீடென்ற மாற்றம் வியப்பு. ... 4 (பெ. 7}

நன்மையுடன் தீமை நலமொடு துன்பமும் 
புன்மைவண்மை வாழ்வின் புலம். ... 5 (பெ. 7}

★★★
பாவலர் சீனி பழனி

ஆடலுடன் பாடல் அறுவகை உண்டியென
ஏட(து) எழுத்தே மலர். ... 1 (பெ. 7)

குடும்ப உறவுடன் கோபுரக் கோடும்
இடும்பை தவிர்க்கும் எழு. ... 2 (பெ. 6)

வயலே உயிருடை வாழ்வு உலகில்
அயலோ அழுகல் அழகு. ... 3 (பெ. 7)

கல்வி உயர்வு கரையில் கனவென
நல்லவை நாளும் உனது. ... 4 (பெ. 6)

நதியில் நிறைநீர் நிதியென செந்நெல்
பதியில் வளனே பரிவு. ... 5 (பெ. 7)

காசும் பணமும் கடிமனக் கள்ளர்தம்
கூசா உறவும் கொடிது. ... 6

ஆசான் திருவடி அன்பின் பெருவடி
பேசா மறையெனப் பேச்சு. ... 7

வெண்பா எளிதுகாண் வேண்டுவ வெண்டளை
தண்பா தரணி மழை. ... 9

மழையென மென்கரம் மாடுயர் செல்வம்
விழைவே வளர்மதி வாழ்வு. ... 9

முகநூல் படிப்பு முழுமதி ஞானம்
அகநூல் எழுதும் கவி. ... 10

★★★
கவிஞர் திசேசு

இறப்பும் பிறப்பும் இயற்கையே மக்கள்
மறக்கும் கொடுமையாய் மாசு. ... 1 (பெ. 7)

மாற்றமே காலத்தின் கோலம் மனிதர்தம்
தோற்றம் வளர்ச்சியே சான்று. ... 2 (பெ. 7)

தாண்டலும் ஊஞ்சலும் தாயமும் பல்குழியும்
பாண்டியொடு எல்லாமே போச்சு. ... 3 (பெ. 6)

போற்றலும் தூற்றலும் பொல்லாங்கு பேசலும்
மாற்றமும் மாந்தர் வழக்கு. ... 4 (பெ. 7)

பாவாடை தாவணி பின்னலொடு கொண்டையும்
பூவாடை பூசுமஞ்சள் போச்சு ... 5 (பெ. 7)

அம்மிக் குழவியும் ஆடுகல்லும் தோய்த்தலில்
கும்முதலும் கோலமும் போச்சு. ... 6

வாழ்வில் தளர்வும் உயர்ச்சியும் தாங்கல்
வீழ்த்தலும் யாவு மியல்பு. ... 7

பம்பரம் கிட்டிப்புள் பச்சைக் குதிரையுடன்
கம்புசுற்றல் கானலில் நீர். ... 8

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்

இன்பமும் துன்பமும் எள்ளலும் போற்றலும்
உன்னதம் சீலர்க்கு காண். ... 1 (பெ. 6)

மென்மைக் குணமும் வெறுப்பிலா உள்ளமும்
நன்மையுடன் மேன்மை தரும். ... 2 (பெ. 6)

காடும் மனையும் கழனியொடு ஆள்பலமும்
கூடுமோ கூற்றுவன் முன். ... 3 (பெ. 6)

அரனின் சிரசில் அருவியாய் கங்கை 
அருகனின் கையில்ஓ லை. ... 4 (பெ. 6)

காலம் கனியும் கரம்பும் செழிக்கும்
வேலவன் ஆசியா லே. ... 5 (பெ. 6)

★★★
கவிஞர் குருநாதன் ரமணி

பாலத்தில் கன்று பசுமாடு பையாநீ
சாலையில் உன்கண்ணை வை! ... 1

ஞாயிறு திங்களுடன் செவ்வாய் புதன்பின்
வியாழனுடன் வெள்ளி சனி. ... 2

பழுதையைப் பாம்பென்பர் பாரில் பலபேர்
புழுவெல்லாம் பூமியா ளும். ... 3

கண்மூக்கு தோலுடல் காதுவாய் என்றுவகை
எண்ணில் புலன்பொறி யைந்து. ... 4

கடல்மலை மண்நதி காடுவயல் மாக்கள்
உடலுருவாம் உள்ளம் உலகு. ... 5

வீடு மனைமக்கள் வீழ்சுற்றம் நட்பென்னும்
கூடு மனிதர் குலம். ... 6

குடிமகன் போதை குலமகள் வாதை
விடிவுறும் காலமென் றோ? ... 7

அன்பும் அறமும் அகம்கொளின் மானிடர்க்குத்
துன்பம் துயர்போம் குறைந்து. ... 8

சங்கம் சமணம் சமயசைவ வைணவம்
மங்கலம் வேராம் மரபு. ... 9

மாபலா செவ்வாழை மாதுள மங்கையே
வாகலா என்துணை யாய்! ... 10

★★★★★

பயிலிழை குவெ.14. பெயர்ச்சொற் குறள்!

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.14. பெயர்ச்சொற் குறள்!

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/271332780263927/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.14. பெயர்ச்சொற் குறள்!
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. குறள் வெண்பாவில் ஏழு (7) சீர்களில்
.. குறைந்தது ஆறு (6) சீர்களில்
.. பெயர்ச்சொற்கள் வருமாறு அமையும்
.. ஒருவிகற்பப் பொழிப்பு மோனைக் குறட்பாக்கள்
.. ஐந்து (5) புனைந்தெழுதுவோம்.

பெயர்ச்சொல் என்றது
.. பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என்னும்
.. ஆறுவகைப் பெயர்ச்சொற்களாக அமையலாம்.
.. ஒரே சீரில் இருபெயர்கள் வரின் அவை ஒன்றாகக் கொள்ளப்படும்.

தொகுப்பு
10/08/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
பெயர்ச்சொற் குறள்!
(குறள் வெண்பா)

பாலத்தில் கன்று பசுமாடு பையாநீ
சாலையில் உன்கண்ணை வை! ... 1

ஞாயிறு திங்களுடன் செவ்வாய் புதன்பின்
வியாழனுடன் வெள்ளி சனி. ... 2

பழுதையைப் பாம்பென்பர் பாரில் பலபேர்
புழுவெல்லாம் பூமியா ளும். ... 3

கண்மூக்கு தோலுடல் காதுவாய் என்றுவகை
எண்ணில் புலன்பொறி யைந்து. ... 4

கடல்மலை மண்நதி காடுவயல் மாக்கள்
உடலுருவாம் உள்ளம் உலகு. ... 5

வீடு மனைமக்கள் வீழ்சுற்றம் நட்பென்னும்
கூடு மனிதர் குலம். ... 6

குடிமகன் போதை குலமகள் வாதை
விடிவுறும் காலமென் றோ? ... 7

அன்பும் அறமும் அகம்கொளின் மானிடர்க்குத்
துன்பம் துயர்போம் குறைந்து. ... 8

சங்கம் சமணம் சமயசைவ வைணவம்
மங்கலம் வேராம் மரபு. ... 9

மாபலா செவ்வாழை மாதுள மங்கையே
வாகலா என்துணை யாய்! ... 10

--குருநாதன் ரமணி

★★★★★

Sunday, January 6, 2019

பயிலிழை குவெ.13. சொற்சிலம்பக் குறள் தொகுப்பு

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
குவெ.13. சொற்சிலம்பக் குறள் தொகுப்பு

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/264682870928918/
கவிஞர் திசேசு

வரும்படி உண்டெனில் வாராது மன்றம்
வரும்படி உள்ளதெனில் வா. ... 1

கவிதைக்கும் சொல்லுடுத்து கற்பனையால் சூழும்
கவிதை பிறக்கும் கனிந்து. ... 2

ஆலமடி செல்லவிடா அன்னைமகன் ஆட்கொள்ள
ஆலமடி கொண்டான் அமர்ந்து. ... 3
(ஆலம் = ஆலகால விஷம், ஆலமரம்)

வசப்பட்டால் நீர்பிழைத்தீர் இல்லையேல் வாயால்
வசப்பட்டால் தானுமக்கு வாழ்வு. ... 4
[வசப்பட்டால் = வசைப்பட்டால்-உலகியல் வழக்கு]

கொய்யாக் கனியிதழ் வேண்டிநிற்க கோதைதந்தாள்
கொய்யாக் கனியிலை கை. ... 5

அத்தையே வந்ததற்பின் ஆகாது மௌனமே
அத்தையே வேண்டுமோ வீம்பு. ... 6

★★★
கவிஞர் அரங்க இரகுநாதன்

பத்துருவாம் வையத்தைப் பத்துருவாய் மாற்றிய 
பத்துருவால் கொள்வாய் பணி. ... 1

கவிக்குலம் மேவும் களிவிடுத்துத் தாவும் 
கவிக்குலம் ஆனேனே காண். ... 2

தீராதா என்னுள் திகட்டாத காதலேற்றித் 
தீ ராதா ஆனாயென் தேன். ... 3

கற்பகத் துள்ளக் கருணைத் திருவன்றோ 
கற்பகத் துள்ளார் கவின். ... 4

மாண்ட மனிதரெல்லாம் மண்டும் தகையுடைய 
மாண்ட மனிதரல்ல மாது! ... 5

★★★
பாவலர் சீனி பழனி

மாவடு கன்னத்தில் மன்னவனின் முத்தமோ
மா-வடு மங்கை மனம். ... 1

மாவிலைத் தோரணம் மைகுழல் சீதனம்
மாயிலை ஊன்பெரி தன்பு. ... 2
(மாயிலை = பெரிதில்லை)

காயம் அழியும் கனவதும் பொய்யேகாண்
காயம் கருத்தே மருந்து. ... 3
(காயம் = உடம்பு, புண்)

மாவரை நாட்டின் மழைவிளைக் காட்டிடை
மாவரை வேளாண் மலிவு... 4
(மாவரை = பெருமலை, தினைமாவு)

தாமரைக் குளநீர் தடவும் கயலெழத்
தாமரை வெண்ணில வு. ... 5
(தாமரை = மலர், தாவுகின்ற மான்)

காமலை வண்டினம் காட்டினில் தேன்மழை
காமலை நோய்க்கு மருந்து. ... 6
(காமலை = சோலை சூழ் மலை, காமாலை நோய்)

கனக மலைக்காட்டில் கானவரும் வேட்டை
கனக மதியிர வு. ... 7
(கனகம் = பொன். கன-அகன்ற. கம்-வெண்மை)

தென்றலைத் தீண்டிடத் தீந்தமிழ்த் தேறளே
தென்றலை வாயிலைத் தேர். ... 8
(தென்றலை = தென்றல் காற்று. தென்தலை = தெற்குத் திசையில்)

சேதகம் செந்நெல் செருகளம் போலே
சேதகம் சேரா சீர். ... 9
(சேதகம் = சேற்று வயல். சேதகம் = சேதம்)

வைகறைக் கோட்டின் வருமிகு வான்மழை
வைகறை வேளாண் வயல். ... 10 
(வைகறை = விடியற்காலை. வைகு அறை = ஏ கல்லடுக்கு)

★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்

அந்தகன் காண்பது ஆகா தெனிலந்த
அந்தகன் பார்ப்பானோ ஆ. ... 1
(அந்தகன் = குருடன், யமன்; ஆ = இரக்கம்)

அஞ்சு பிறந்தபின் ஆறுதல் தோன்றாது
அஞ்சு நிலைகண்டு  ஆ. ... 2

மஞ்சு நிறையந்த மாமனும் இப்படி
மஞ்சு வரவஞ்சு மா! ... 3
(மஞ்சு = வலிமை, ஒரு பெண்ணின் பெயர்)

மாவிலைத் தோரணம் மங்கலம்தான் கோலமிட
மாவிலை என்கலா மா? ... 4

கோகிலம் கூவிடக் கொள்ளைக் குதூகலம்!
கோகிலம் குட்டிச் சுவர். ... 5
(கோகு + இலம்; கோகு = கழுதை,
இலம் = இல்லம் என்பதன் இடைக்குறை விகாரம்)

★★★
கவிஞர் குருநாதன் ரமணி

வண்டுகள் உட்புக வண்டுகள் கீழ்விழும்
வண்டுகள் கொள்ளும் மலர். ... 1

[வண்டுகள் பொருள் முறையே: வண்டினங்கள், 
வண்-துகள் = மகரந்தம், வண்டு-கள்]

கற்காலம் தொட்டுக் கலைசெய்த சிற்பமது
கற்காலம் கொள்ளாக் கலை. ... 2

[கற்காலம் = கற்கும் காலம், கல்லைக் காலம்]

கோபுரம் அம்பெய்து கொண்ட சிவன்கொடை
கோபுரம் என்பதோ கொல்? ... 3

[கோபுரம் = வானில் உலவும் முப்புரம், 
குயவன் செய்த பாண்டமாம் உடல்; கொல் = அசைச்சொல்]

வாத்தியார் என்றனன் மாணவன் நண்பனிடம்
வாத்தியார் என்றானே வம்பு! ... 4

[வாத்தியார் = ஆசிரியர், வாத்து + யார் (குற்றியலிகரப் புணர்ச்சி)]

இன்றமிழ் ஆடுரையில் எத்தனை குற்றங்கள்!
இன்றமிழ் தில்லை இழிவு! ... 5

[இன்றமிழ் = இனிய தமிழ், இன்று அமிழ்(து); ஆடுரை = உரையாடல்]

மண்ணுடை தோண்டி வளிமங்கள் கொள்ளுலகே!
மண்ணுடை யாகும் வறள். ... 6

[மண்ணுடை = மண்ணின் உடைமை, மண்ணின் உடையாம் பசுமை]

ஆவுடையார் மட்டுமென்றே ஆவுடையார் கோவிலிலே
ஆவுடையார் மேவும் அருள். ... 7

[ஆவுடையார் = சிவலிங்கத்தின் பீடம், ஆ-உடையார் (பசுபதி)]

புத்தகம் ஏற்றும் பொதிசுமைக் கல்வியில்
புத்தகம் ஓடும் புரை. ... 8

[புத்தகம் = பனுவல் (நூல்), புத்து+அகம்]

எத்தனம் இல்லாதே எத்தனையோ சேர்த்தாயே
எத்தனம் கூடவரு மோ? ... 9

[எத்தனம் = முயற்சி, எந்த செல்வம்]

வந்தது போவது வந்தது போதுமென்றேன்
வந்தது நின்ற வளம்! ... 10

[வந்தது = செல்வம், ஞானம்]

★★★★★

பயிலிழை குவெ.13. சொற்சிலம்பக் குறள்!

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

சடுதியில் மரபுகவி பயிலரங்கம்

01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.13. சொற்சிலம்பக் குறள்!

https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/264682870928918/
அனைத்து வகை உறுப்பினர்களும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

நினைவிற் கொணர
வெண்பா விலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டறும் ஈறடி யில்.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
வரும்குறட் பாவே வளம்.

பயிலிழை குவெ.13. சொற்சிலம்பக் குறள்!
பாடுபொருள்: கவிஞர் விருப்பம்
பாவகை: குறள் வெண்பா
வண்ணம்: வித்தகக் குறள் வெண்பா

விரும்பிய பாடுபொருளில்
.. முதலடி முதற்சீரில் காணும் சொல் ஆங்கோர் பொருளும்
.. அதேசொல் முதற்சீராய் ஈற்றடியில் வேறு பொருளும்
.. தருமாறு அமைத்தும்
.. அடிகளில் பொழிப்புமோனை அமைத்தும்
.. ஒருவிகற்பக் குறள் வெண்பாக்கள்
.. ஐந்து (5) புனைவோம்.

ஒருவர் பத்து (10) குறட்பாக்கள்
.. வரை புனைந்தெழுதலாம். ஆயின்,
.. அவற்றுள் ஐந்து பாக்கள் மட்டுமே மதிப்பீடு பெறும்.

தொகுப்பு
03/08/2018 (வெள்ளி) இரவு வரை 
.. வரும் பதிவுகளில் தேர்வுபெற்றவை 
.. தொகுக்கப்பட்டுக் குழுமத்தில் 
.. பின்னர் வெளியிடப்படும்.

*****
அடியேன் பங்காக
சொற்சிலம்பக் குறள்!
(குறள் வெண்பா)

வண்டுகள் உட்புக வண்டுகள் கீழ்விழும்
வண்டுகள் கொள்ளும் மலர். ... 1

[வண்டுகள் பொருள் முறையே: வண்டினங்கள், 
வண்-துகள் = மகரந்தம், வண்டு-கள்]

கற்காலம் தொட்டுக் கலைசெய்த சிற்பமது
கற்காலம் கொள்ளாக் கலை. ... 2

[கற்காலம் = கற்கும் காலம், கல்லைக் காலம்]

கோபுரம் அம்பெய்து கொண்ட சிவன்கொடை
கோபுரம் என்பதோ கொல்? ... 3

[கோபுரம் = வானில் உலவும் முப்புரம், 
குயவன் செய்த பாண்டமாம் உடல்; கொல் = அசைச்சொல்]

வாத்தியார் என்றனன் மாணவன் நண்பனிடம்
வாத்தியார் என்றானே வம்பு! ... 4

[வாத்தியார் = ஆசிரியர், வாத்து + யார் (குற்றியலிகரப் புணர்ச்சி)]

இன்றமிழ் ஆடுரையில் எத்தனை குற்றங்கள்!
இன்றமிழ் தில்லை இழிவு! ... 5

[இன்றமிழ் = இனிய தமிழ், இன்று அமிழ்(து); ஆடுரை = உரையாடல்]

மண்ணுடை தோண்டி வளிமங்கள் கொள்ளுலகே!
மண்ணுடை யாகும் வறள். ... 6

[மண்ணுடை = மண்ணின் உடைமை, மண்ணின் உடையாம் பசுமை]

ஆவுடையார் மட்டுமென்றே ஆவுடையார் கோவிலிலே
ஆவுடையார் மேவும் அருள். ... 7

[ஆவுடையார் = சிவலிங்கத்தின் பீடம், ஆ-உடையார் (பசுபதி)]

புத்தகம் ஏற்றும் பொதிசுமைக் கல்வியில்
புத்தகம் ஓடும் புரை. ... 8

[புத்தகம் = பனுவல் (நூல்), புத்து+அகம்]

எத்தனம் இல்லாதே எத்தனையோ சேர்த்தாயே
எத்தனம் கூடவரு மோ? ... 9

[எத்தனம் = முயற்சி, எந்த செல்வம்]

வந்தது போவது வந்தது போதுமென்றேன்
வந்தது நின்ற வளம்! ... 10

[வந்தது = செல்வம், ஞானம்]

--குருநாதன் ரமணி

★★★★★