சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி
சடுதியில் மரபுகவி பயிலரங்கம்
01. குறள் வெண்பா பயிலரங்கம்
பயிலிழை குவெ.17. அலங்காரக் குறள்: தன்மையணி தொகுப்பு
https://www.facebook.com/groups/chaDuthiyilmarabukavi/permalink/307047366692468/
கவிஞர் அரங்க இரகுநாதன்
பொருள் தன்மை அணி
கரிய நிறத்தினன் கார்குழலோன் காண்டற்(கு)
அரிய கழலழகன் ஆம். ... 1
முருகன் அழகனோர் மூவா இளமை
உருவன் அறுமுகனை ஓம்பு. ... 2
குணத் தன்மை அணி
தண்மைக் குணத்தான் தகையோன் இறையவன்
வண்மை மனத்தை வழுத்து. ... 3
வண்மைக்கோர் கன்னன் வனப்பிற்கோர் கண்ணனும்
திண்மைக்கோர் பார்த்தனும் தேர். ... 4
இனத் தன்மை அணி
கருசுமக்கும் அன்னை கடமை உழைப்பு
உருசுமக்கும் தெய்வ உறவு. ... 5
கற்றவர் சான்றோர் கருத்திற் கினியரைப்
பெற்றவர் வையத்தின் பேறு. ... 6
தொழில் தன்மை அணி
பணிந்து வணங்கிடும் பாமர னையும்
கனிந்து புரக்கும் களிப்பு. ... 7
ஏரோட்டி நட்டே எருவிட்டடூர் காப்பவனைப்
பாராட்டி இன்புறலே பாங்கு. ... 8
★★★
பாவலர் சீனி பழனி
பொருள் தன்மை அணி
வெம்மையின் வாட்டம் விடிவெள்ளி வைகறை
தும்பி தொடுமலர்த் தேன். ... 1
வேர்விடு மண்ணில் விழுந்தநல் மாரியாய்க்
கார்விடு வானம் கனிவு. ... 2
குணத் தன்மை அணி
உள்ளம் சிறுகுவ ஊர்கடுப்பக் கோல்கோனின்
கள்ள மனத்துக் களவு. ... 3
மிளகாய் கசக்கா மெலிமேனி உட்கா
திளையாக் குடியர் குடி. ... 4
இனத் தன்மை அணி
காடுறை ஆமாக்கள் நாடுறை நன்மாவோ
வாடுரை காட்டும் மதி. ... 5
பொருட்பெண்டிர் பேரழகோ பெய்வளை யாளாய்
அருட்பெண்டிர் ஆள்வினை யாள். ... 6
தொழில் தன்மை அணி
மீன்வலைஞர் மேல்கடலில் வெள்ளெனவே செல்லுவதும்
மான்வலைஞர் மாலைமதி நேர். ... 7
ஓடிவரும் நீரும் உதவும் இருகரமும்
தேடிவரும் செல்வம் தெளி. ... 8
★★★
கவிஞர் இராமசாமி வெங்கடராமன்
பொருள் தன்மை அணி
தான்தனித் துண்ணாத தன்மையால் ஒற்றுமைக்குச்
சான்றாய் விளங்கும்கா கம். ... 1
இல்லாளின் இன்சொல் இடுங்கு வயிற்றோரின்
இல்லம் இனிதாக்கு மே. ... 2
குணத் தன்மை அணி
வெம்மையில் வாடியும் வெப்பம் தனக்கில்லை
இம்மையில் ஈசனத் தன் ... 3
(வெப்பம் = ஆசை).
வயிறு பசித்திருக்க வாட்டம் முகத்தில்
இயம்பத் தயங்கும் மனம். ... 4
இனத் தன்மை அணி
வாலாட்டும் நாயும் வருமிரைப் பார்த்திருக்கும்
கோலெடுக்கப் பாயும் வெருண்டு. ... 5
கோலெடுக்க ஆடும் குரங்கு விடாததன்
சீலமாம் வால்தனத் தை. ... 6
தொழில் தன்மை அணி
எண்கால் சிலந்தி இயல்பாய் அமைத்திடும்
ஒண்மை நிறைபின் னலே. ... 7
சிற்றுளி கொண்டு செதுக்கும் சிலைகளில்
சிற்பியின் கற்பனைச் சீர். ... 8
★★★
கவிஞர் திசேசு
பொருள் தன்மை அணி
கடலிணைய வெள்ளந்தான் காவிரியில் ஏனோ
கடைமடையில் காயும் நிலம். ... 1
சுண்ணாம்பு பாலில்லை என்றக்கால் சொல்வாரோ
வெண்மையிலை பாலுக்கே என்று. ... 2
குணத் தன்மை அணி
அழகுதனை வாங்குதற்கு அங்காடி செல்வோர்
அழகெதுதான் என்பதறி யார். ... 3
பெற்றதெலாம் கொட்டிப் பிறர்க்குக் கொடுப்பாரை
நற்றவமே நாடும் நயந்து. ... 4
இனத் தன்மை அணி
எலியொடு நாயும் இணைந்திடும் காலம்
கலியினில் தேர்தலே காண். ... 5
வாக்குரிமை வாய்த்ததால் வாழுகின்ற ஏழையரை
தூக்குவரே பல்லக்கில் தோள். ... 6
தொழில் தன்மை அணி
காவல் தொழிலுற்றோர் கண்டவர்முன் கைகட்டி
ஏவலுக்கு நிற்பதுவோ ஏற்பு. ... 7
கற்றவர் கல்லார்ககுக் கற்றபடி சொல்வித்தல்
கற்றாலே கற்றவரா வார். ... 8
★★★
கவிஞர் குருநாதன் ரமணி
பொருள் தன்மை அணி
குழலில் மலரிருக்கும் கூந்தலிற் பின்னல்
அழைக்கும் பெயராம் அனு. ... 1
நெடிய உடலெங்கும் நீறு துலங்கும்
அடியாரின் தெய்வம் அரன். ... 2
***
குணத் தன்மை அணி
தொட்டாற் சிணுங்கும் சுழிக்கும் முகத்தினை
பட்டம்மாள் பெண்பெயர் பட்டு. ... 3
புன்னகை யில்மறையும் போலி மனம்கொண்ட
கன்னையா கட்சியவர் காப்பு. ... 4
***
இனத் தன்மை அணி
பொறிமேனி பல்நஞ்சு போக்குவயிற் றுந்தி
இறையனார் நாகம் இது. ... 5
ஆறறிவும் நாடுவதாய் ஐம்புலன் துய்ப்பதில்
மாறிலியாய் மாந்தர் மயல். ... 6
***
தொழில் தன்மை அணி
சிறகடித்துத் தூர்ந்துண்டு தேன்றுளி சேர்க்கும்
அறுபதம் தாங்கும் அலர். ... 7
வருவதெலாம் கொள்வர் வரவாக ஏதும்
செருவாக்கும் எத்தர் இவர். ... 8
★★★★★
No comments:
Post a Comment